Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு விளையாட்டு

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்து சம்பியன்!.

Stills by Stills
05/10/2023
in விளையாட்டு
0
12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்து சம்பியன்!.
0
SHARES
9
VIEWS
ShareTweetShareShareShareShare

48 வருட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் பவுண்டறிகளின் எண்ணிக்கை அடிப்படையில் சம்பியன் பிரகடனப்படுத்தப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.இங்கிலாந்திலும் வேல்ஸிலும் கூட்டாக நடத்தப்பட்ட 12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் அத்தியாயத்தில் பவுண்டறிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இங்கிலாந்து உலக சம்பியனாக பிரகடனப்படுத்தப்பட்டது.

1975, 1979, 1983, 1999 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து ஐந்தாவது தடவையாக இங்கிலாந்தில் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 10 டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகள் பங்குபற்றின.அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆபிரிக்கா ஆகியன நேரடியாகவும் ஆப்கானிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் தகுதிகாண் சுற்றின் மூலமும் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.

பங்குபற்றிய 10 நாடுகளினதும் தலைவர்களை பக்கிங்ஹாம் மாளிகையில் வைத்து இரண்டாம் எலிஸபெத் மகாராணி, இளவரசர் ஹெரி ஆகியோர் வரவேற்றனர்.இது இவ்வாறிருக்க, மத்திய லண்டனில் அமைந்துள்ள மோலில் 2019 மே 29ஆம் திகதி ஆரம்ப விழா வைபவம் நடைபெற்றது.

அங்கு நடைபெற்ற வைபவத்தில் ஒவ்வொரு நாட்டையும் சேர்ந்த இரண்டு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இலங்கை சார்பாக மஹேல ஜயவர்தனவும் தமயன்தி தர்ஷாவும் கலந்துகொண்டனர். 2015 உலக சம்பியன் அணித் தலைவர் மைக்கல் க்ளார்க், முன்னாள் இங்கிலாந்து சுழல்பந்துவீச்சாளர் க்ரேம் ஸ்வோன் ஆகிய இருவரும் உலகக் கிண்ணத்தை ஏந்திச் சென்றனர்.அங்கு உலகக் கிண்ணப் பாடலும் பாடப்பட்டது.உலகக் கிண்ணப் போட்டிகள் 2019 மே 30ஆம் திகதியிலிருந்து ஜூலை 14ஆம் திகதிவரை நடைபெற்றன.

2015வரை பங்குபற்றிய அணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு சென்ற நிலையில் 2019 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் அணிகளின் எண்ணிக்கை 10ஆக குறைக்கப்பட்டது.

இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் 10 நாடுகளின் அணிகளே பங்குற்றின. இந்த 10 அணிகளும் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளாக இருந்த காரணத்தினால் இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணமே வரலாற்றில் டெஸ்ட் அணிகளுடன் (ஐ.சி.சி. அங்கத்துவ அணிகள் இல்லாமல்) மட்டும் இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணமாக அமைந்தது.

அதேநேரம், உலகில் தற்போது டெஸ்ட் அந்தஸ்து பெற்ற கிரிக்கெட் அணிகள் 12 இருக்கின்றன என்பதால், டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து அணிகளும் (ஜிம்பாப்வே, அயர்லாந்து) பங்குபெறாத முதல் உலகக் கிண்ணமாகவும் 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணம் அமைந்தது.

அண்மையில் ஜிம்பாப்வே அணி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் சந்தர்ப்பத்தினை தற்காலிகமாக இழந்தது. இதற்கு முன்னர், ஜிம்பாப்வே அணி, 2018ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் மோசமான பெறுபேற்றினை காட்டிய காரணத்தினால் நடைபெற்று முடிந்த 2019ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரில் ஆடும் சந்தர்ப்பத்தினை ஏற்கனவே இழந்திருந்தது.

இதன் மூலம், நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொடரே, 1983ஆம் ஆண்டிற்கு பின்னர் ஜிம்பாப்வே அணி விளையாடாத முதல் உலகக்க கிண்ணமாகும்.

வித்தியாசமான முறையில் வெற்றியாளர் தெரிவு 

இறுதிப் போட்டியில் இரு அணிகளும் சம எண்ணிக்கையான (241) ஓட்டங்கள் பெற ஆட்டம் சமநிலையில் நிறைவுக்கு வந்தது. இவ்வாறு உலகக் கிண்ண இறுதிப் போட்டி சமநிலையில் முடிந்ததால் சுப்பர் ஓவர் மூலம் வெற்றியாளரை தீர்மானிக்கும் நிலை உருவானது.

சுப்பர் ஓவரிலும் இரு அணிகளும் சம எண்ணிக்கையான (15) ஓட்டங்கள் பெற உலகக் கிண்ண வெற்றியாளர் அணி, இறுதிப் போட்டியில் அதிக பௌண்டரிகள் பெற்றதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டது.

அந்தவகையில் உலகக் கிண்ண வெற்றியாளர்களாக இறுதிப் போட்டியில் அதிக பௌண்டரிகளை பெற்றுக் கொண்ட இங்கிலாந்து அணியினர் மாறிக் கொண்டனர்.

கிட்டத்தட்ட 40 வருட வரலாற்றினையுடைய கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளில் சம்பியன் அணியானது, பௌண்டரிகள் மூலம் தெரிவு செய்யப்பட்டது இதுவே முதல்தடவையாகும்.

அதிக பார்வையாளர்களை ஈர்த்த கிரிக்கெட் தொடர்

இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரே, 2019ஆம் ஆண்டுவரையிலான உலகக் கிண்ண வரலாற்றில் இதுவரையில் அதிக பார்வைாயளர்கள் போட்டிகளைப் பார்வையிட்ட கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடராக அமைந்தது.

மேலும், வரலாற்றில் அதிக பார்வையாளர்கள் பார்வையிட்ட கிரிக்கெட் தொடராகவும், 2019ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் அமைந்தது.

இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் போட்டிக் காணொளிகள் டிஜிடல் ஊடகங்களில் 2600 மில்லியன் தடவைகளுக்கு மேல் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டுள்ளது.

இதேநேரம், 220 நாடுகளில் தொலைக்காட்சி மூலம் நேரடியாக அஞ்சல் செய்யப்பட்ட இந்த உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலை போட்டிகளை மட்டும் 675 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்கள் கண்டுகளித்திருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதேநேரம் இந்த உலகக் கிண்ணத் தொடரிலேயே, போட்டியொன்று அதிக தொழில்நுட்ப வசதிகளுடன் (சுமார் 32 கெமராக்களின் உதவியுடன்) நேரடி அஞ்சல் செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் பங்களாதேஷ் அணிக்கு ஏமாற்றம் தந்திருந்த போதிலும், சகலதுறை வீரரான சகிப் அல் ஹஸன் காலம் பூராகவும் பங்களாதேஷ் அணி பெருமை அடைந்து கொள்ளக் கூடிய விடயம் ஒன்றினை நடைபெற்று முடிந்த உலகக் கிண்ணம் மூலம் செய்திருந்தார்.

இந்த உலகக் கிண்ணத் தொடரில், 606 ஓட்டங்களை குவித்துக் கொண்ட சகிப் அல் ஹஸன் 11 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். இதன் மூலம் அவர் குறிப்பிட்ட உலகக் கிண்ணம் ஒன்றில் 600 ஓட்டங்களுக்கு மேல் குவித்து, 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உலக சாதனை செய்திருந்தார்.

இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா, 2019ஆம் ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் மொத்தமாக 5 சதங்களை தனியொருவராக பெற்றிருந்தார்.

ரோஹித் சர்மா இந்த சதங்கள் மூலம், கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் குறிப்பிட்ட அத்தியாயம் ஒன்றில் அதிக சதங்கள் பெற்ற வீரராக புதிய உலக சாதனை படைத்தார்.

இதற்கு முன்னர், இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்கார, 2015ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் 4 சதங்கள் பெற்று குறிப்பிட்ட உலகக் கிண்ணத் தொடரின் அத்தியாயம் ஒன்றில் அதிக சதங்கள் பெற்றுக் கொண்ட வீரராக மாறியிருந்தார்.

அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளரான மிச்செல் ஸ்டார்க் இந்த ஆண்டுக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் மொத்தமாக 27 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்க் இந்த விக்கெட்டுக்களின் மூலம், குறித்த உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றி புதிய உலக சாதனை ஒன்றினை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மிச்செல் ஸ்டார்க்கிற்கு முன்னர், குறிப்பிட்ட உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய பந்துவீச்சாளராக அவுஸ்திரேலிய அணியின் கிளேன் மெக்ராத் காணப்பட்டிருந்தார்.

கிளேன் மெக்ராத், 2007ஆம் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தில் 26 விக்கெட்டுக்களை கைப்பற்றியே குறிப்பிட்ட சாதனையை தன்னகம் வைத்திருந்தார்.

இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான முதாவது அரை இறுதிப் போட்டி மென்செஸ்டர் ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் 2019 ஜூலை 9ஆம், 10ஆம் திகதிகளில் நடைபெற்றது. முதலாம் நாள் மாலையில் மழை பெய்ததால் ஆடட்ம் இரண்டாம்  நாள் தொடர்ந்தது.

அப்போட்டியில் இந்தியாவை 18 ஓட்டங்களால் வெற்றிகொண்ட நியூஸிலாந்து 2ஆவது தொடர்ச்சியான தடவையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 239 ஓட்டங்களைப் பெற்றது.

இந்தியா 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்து உலகக் கிண்ணத்திலிருந்து வெளியேறியது.

அவுஸ்திரேலியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் நடைபெற்ற 2ஆவது அரை இறுதிப் போட்டியில் 8 விக்கெட்களால் வெற்றிபெற்ற இங்கிலாந்து 1992க்குப் பின்னர் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

இதனைத் தொடர்ந்து லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் 2019 ஜூலை 14ஆம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் மோதின.

இறுதிப் போட்டி 50 ஓவர்களின் நிறைவின்போதும் சுப்பர் ஓவரிலும் சமநிலையில் முடிவடைந்ததால் பவுண்டறிகள் அதிகமாக பெற்ற இங்கிலாந்து உலக சம்பியனாக பிரகடனப்படுத்தப்பட்டது.

நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 242 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 241 ஓட்டங்களைப் பெற்றதால் ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

கடைசிக் கட்டத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய அப்போட்டியில் 48 ஓவர்கள் நிறைவில் இங்கிலாந்து 6 விக்கெட்களை இழந்து 218 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய கடைசி 2 ஓவர்களில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 24 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

49ஆவது ஓவரின் 3ஆவது பந்தில் 7ஆவது விக்கெட் சரிய எஞ்சிய 9 பந்துகளில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 22 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

ஒரு பக்கத்தில் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பென் ஸ்டோக்ஸ் அடுத்த 2 பந்துகளில் ஒரு சிக்ஸுடன் 7 ஓட்டங்களைப் பெற்றார். ஆனால் கடைசிப் பந்தில் ஜொவ்ரா ஆச்சர் ஆட்டம் இழந்தார்.

கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவைப்பட்டதுடன் 2 விக்கெட்கள் மீதம் இருந்தன.

டிம் போல்ட் வீசிய கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளில் ஓட்டம் பெறத் தவறிய பென் ஸ்டோக்ஸ் 3ஆவது பந்தில் சிக்ஸ் விளாசினார்.

அடுத்த பந்தில் பென் ஸ்டோக்ஸ் 2ஆவது ஓட்டத்தைப் பூர்த்தி செய்தபோது ஓவர் த்ரோ மூலம் பந்து பவுண்டறியைக் கடக்க அந்த பந்தில் மொத்தம் 6 ஓட்டங்கள் கிடைத்தது.

கடைசி 2 பந்துகளில் இங்கிலாந்துக்கு 3 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

5ஆவது பந்தில் ஒரு ஓட்டம் பூர்த்தி செய்யப்பட்டு 2ஆவது ஓட்டம் பெறப்படுககையில் ஆதில் ராஷித் ரன் அவுட் ஆனார்.

கடைசிப் பந்திலும் ஒரு ஓட்டம் பெறப்பட்டு வெற்றி ஓட்டத்தைப் பெற முயற்சித்த மார்க் வூடும் ரன் அவுட் ஆனார்.

இதன் காரணமாக ஆட்டம் சம நிலையில் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து வெற்றி அணியைத் தீர்மானிக்க சுப்பர் ஓவர் அமுல்படுத்தப்பட்டது.

டிம் போல்டின் சுப்பர் ஓவரில் பென் ஸ்டோக்ஸ், ஜொஸ் பட்லர் ஆகிய இருவரும் 15 ஓட்டங்களைப் பெற்றனர்.

16 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு நியூஸிலாந்தின ஜிம்மி நீஷாமும் மார்ட்டின் கப்டிலும் ஜொவ்ரா ஆச்சரின் சுப்பர் ஓவரை எதிர்கொண்டனர்.

ஆச்சரின் முதல் பந்து வைட் ஆனது. தொடர்ந்து 5 பந்துகளில் நீஷாம் (2, 6, 2, 2, 1) 13 ஓட்டங்களைப் பெற்றார். கடைசிப் பந்தில் நியூஸிலாந்தின் வெற்றிக்கு 2 ஓட்டங்கள் தெவைப்பட்டது. ஆனால், ஒரு ஓட்டத்தைப் பூர்த்தி செய்த மார்ட்டின் கப்டில் வெற்றி ஓட்டத்தைப் பெற முயற்சித்தபோது ரன் அவுட் ஆனார்.

இதன் காரணமாக ஆட்டம் மீண்டும் சமநிலையில் முடிவடைந்தது.

இதனை அடுத்து இரண்டு அணிகளும் பெற்ற பவுண்டறிகளில் 26 – 17 என இங்கிலாந்து முன்னிலையில் இருந்ததால் அவ்வணி சம்பியனாக பிரகடனப்படுத்தப்பட்டது.

நியூஸிலாந்து 50 ஓவர்களில் 241 – 8 விக். (ஹென்றி நிக்கல்ஸ் 55, டொம் லெதம் 47, கேன் வில்லியம்சன் 30, உதிரிகள் 30, கிறிஸ் வோக்ஸ் 37 – 3 விக்., லியாம் ப்ளன்கட் 42 – 3 விக்.)

இங்கிலாந்து 50 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 241 (பென் ஸ்டோக்ஸ் 84 ஆ.இ., ஜொஸ் பட்லர் 59, ஜொனி பெயார்ஸ்டோவ் 36, ஜேம்ஸ் நீஷாம் 43 – 3 விக்., லொக்கி பெர்கசன் 50 – 3 விக்.)

சுப்பர் ஓவர்

இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 15

நியூஸிலாந்து 15 – 1 விக்.

பவுண்டறிகளில் இங்கிலாந்து 26 – நியூஸிலாந்து 17

இயன் மோர்கன் – இங்கிலாந்து

இங்கிலாந்து அணியின் தலைவரான இயன் மோர்கன் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான குழுநிலை போட்டியில், தனியொருவராக 17 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.

இதன் மூலம் மோர்கன், ஒருநாள் போட்டி ஒன்றில் அதிக சிக்ஸர்கள் பெற்ற வீரராக உலக சாதனை செய்திருந்ததோடு உலகக் கிண்ணத் தொடர் ஒன்றின் குறிப்பிட்ட போட்டி ஒன்றிலும் அதிக சிக்ஸர்கள் பெற்ற வீரராக மாறியிருந்தார்.  இந்த 10 அணிகளும் முதல் சுற்றில் ஒன்றையொன்று எதிர்த்தாடின.முதல் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பெற்ற இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகியன அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றன.

Tags: உலகக் கிண்ணஇங்கிலாந்து சம்பியன்12ஆவதுகிரிக்கெட்டில்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

2019 வரை உலகக் கிண்ண சாதனைகள்.!

அடுத்த செய்தி

விமானங்கள் தொடர் தாமதம்: சுற்றுலா வருவாய் இன்னும் குறைவதற்கு வாய்ப்பு….

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் நரேந்திரமோடி தந்த ரியாக்சன்…. நடந்தது என்ன?

பிரதமர் நரேந்திரமோடி தந்த ரியாக்சன்…. நடந்தது என்ன?
by Stills
20/11/2023
0

13 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரில் 19 ஆம் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற    இறுதிப் போட்டியில்  இந்திய அணியை வெற்றி கொண்டு ஆறாவது தடவையாக ...

மேலும்...

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சொல்லி அடித்த கில்லி.

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சொல்லி அடித்த கில்லி.
by Stills
02/10/2023
0

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த செப். 23-ஆம் தேதி தொடங்கியது. அக்டோபர் 8 வரை நடைபெறும். 61 பிரிவுகளில் நடைபெறும் 40...

மேலும்...

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றதா? : முன்னாள் அணித்தலைவர் அர்ஜுண கிளப்பும் சந்தேகங்கள்.

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றதா? : முன்னாள் அணித்தலைவர் அர்ஜுண கிளப்பும் சந்தேகங்கள்.
by Stills
23/09/2023
0

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்க. இறுதிப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை தமக்கு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும் புரவெசி பலய என்ற...

மேலும்...

இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ப்பு!

இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ப்பு!
by Stills
17/09/2023
0

9 ஆண்டுகளுக்குப் பின் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் அணி பங்கேற்கிறது. சுனில் சேத்ரி தலைமையில் 17 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின்...

மேலும்...

பிரீமியர் லீகுக்குள் நுழையுமா? லெஸ்டர் சிட்டி.!

பிரீமியர் லீகுக்குள் நுழையுமா? லெஸ்டர் சிட்டி.!
by Stills
17/09/2023
0

லெஸ்டர் சிட்டி - இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து கிளப். 8 ஆண்டுகளுக்கு முன் அந்த அணி அவ்வளவு பிரபலமானது இல்லை. பிரீமியர் லீகில் நிலைத்திருப்பதே அவர்களுக்கு ஒவ்வொரு...

மேலும்...

இலங்கையை தோற்கடித்து சுப்பர் 4 கிரிக்கெட் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.!

இலங்கையை தோற்கடித்து சுப்பர் 4 கிரிக்கெட் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.!
by Stills
13/09/2023
0

இலங்கையை 41 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இந்தியா, முதலாவது அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசிய கிண்ண சுப்பர்...

மேலும்...
அடுத்த செய்தி
விமானங்கள் தொடர் தாமதம்: சுற்றுலா வருவாய் இன்னும் குறைவதற்கு வாய்ப்பு….

விமானங்கள் தொடர் தாமதம்: சுற்றுலா வருவாய் இன்னும் குறைவதற்கு வாய்ப்பு....

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

20/05/2025
மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

19/05/2025
யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

19/05/2025

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.