Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home சினிமா

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்திருக்கும் ஈழத்துத் திரைப்படம் ‘டக் டிக் டோஸ்‘

தரணி by தரணி
11/03/2024
in சினிமா
0
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளிவந்திருக்கும் ஈழத்துத் திரைப்படம் ‘டக் டிக் டோஸ்‘
0
SHARES
30
VIEWS
ShareTweetShareShareShareShare

1. தமிழ்நாட்டின் திரைப்படங்களை இலங்கையர் நாமெல்லாம் பார்த்து மகிழ்வோம். முற்று முழுதாக கதையோடு ஒன்றி எம்மால் அவற்றை ரசிக்க முடியுமென்ற போதிலும், எனக்கு ஒரு மெல்லிய குறை எப்போதும் இருக்கும். தமிழ்நாட்டின் ஊர்ப்பெயர்களை அண்டி எழுதப்படும் வசனங்களை, காட்சிகளை எம்மால் முழுமையாக உள்வாங்க முடிவதில்லை. சென்னையில் வடிவேலுவின் ஆட்டோவில் ஏறும் ஒருவன் காஷுவலாக “புதுக்கோட்டைக்கு வண்டியை விடுப்பா” என்று சொன்னால் வடிவேலு ஏன் ஷாக்காகிறார் என்பது புரிவதில்லை. வெகு காலமாகவே எனக்கு சுன்னாகம் – நாவாந்துறை – தெல்லிப்பழை என்று எங்கள் ஊர்களின் பெயர்களை – நிலக்காட்சிகளை – பெருந்திரையில் பார்க்க ஆசை இருந்தது.

இப்போது யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் டக் டிக் டோஸ் திரைப்படத்தின் கதை, நாங்கள் சைக்கிளில் புழுதி கிளப்பித் திரிந்த மண்ணில் – எம்மூரின் ஒழுங்கைகளில் நடக்கிறது. பார்க்கவே மகிழ்வாக இருக்கிறது. எங்கள் மக்களின் மொழியில், எங்கள் நண்பரும் உறவினரும் நடிகராக நடிக்க, ஒரு முழுமையான – பாடல், நகைப்பு, சண்டைகள், எதிர் நாயகன், நாயகி.. என எல்லாம் உள்ள – சினிமா. (வணிக சினிமா, if you will)

நம்மவர் படைப்பு, நாம்தான் தூக்கி விடவேண்டும் என்ற பொறுப்பெல்லாம் தேவையில்லை. நண்பர்களுடன், குடும்பத்துடன் குதூகலமாக திரையரங்கில் ஒரு படத்தை அனுபவிக்க வேண்டும் என்று போனாலே நன்றாகத்தான் இருக்கும். உண்மையாகவே திருப்தி தரும் பொழுதுபோக்குத் திரைப்படம்.

2. எங்கள் மண்ணின், மக்களின் கதைகளை நாம்தான் சொல்லவேண்டும்.. நாம் சொல்லவேண்டிய கதைகள் எத்தனையோ இருக்கின்றன. அவற்றை விட இந்த ‘இளந்தாரிப் பெடியள் குறுக்க மறுக்க ஓடும்’ சினிமா முக்கியமானதா, இப்போது இதை ஓட வைப்பதுதான் முக்கியமா? என்று எண்ணுகிறீர்களா?

எங்கள் கதைகளை சொல்ல, நல்ல சினிமா எடுக்கும் தொழில்நுட்பம், நடிக்கும் பயிற்சி, திரையரங்குகள் கிடைக்கும் அளவு, மக்களின் ஈடுபாடு, பணம் முதலிடுவோர் நம்பிக்கை.. எல்லாமே வெகுளவில் வளரவேண்டும். நமக்கான சினிமாவுக்கு என்று தனியாக ஒரு தளம் அமையவேண்டும். அதற்கு, இப்படியான முழுமை பெற்ற போகுதுபோக்குத் திரைப்படங்கள் தேவை.

3. படத்தில் எனக்கு முக்கியமாகப் பிடித்த. விதயம், எவ்விதத் தயக்கமும் இல்லாமல், வெகு இயல்பாக யாழ்ப்பாணத் தமிழில் உரையாடல் நடக்கிறது. வணிக வெற்றிக்கான பதற்றத்தில் இலங்கையின் வானொலி- தொலைக்காட்சிகளில் பயன்படுத்துவார்களே, அந்த வினோதமான, உலகிலேயே இல்லாத வடடார வழக்கைக் கையாளாமல், தன்னம்பிக்கையோடு யாழ்ப்பாணத் தமிழில் பேசுகிறார்கள்.

4. இயக்கம், இசை, பெரும்பாலான நடிகரின் நடிப்பு, காட்சி அமைப்புகள், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எல்லாமே அற்புதம். உண்மையாக அக்கக்காகப் பிரித்து சிலாகித்து எழுத ஆரம்பித்தால் எவ்வளவோ எழுதலாம். மனநல விடுதியில் எல்லோரும் ஆடிப் பாடுவதாக ஒரு பாடல் இருக்கிறது. எல்லாமே அற்புதமாக அமைந்திருக்கும் சிறப்பான பாடல் ஒன்று.

அதுபோலவே படத்தின் நிறைய இடங்களில் இயக்குனரின் சீர்மை தெரிகிறது. பணத்தையோ நேரத்தையோ சேமிப்பதற்காக எந்தவொரு காட்சியின் நேர்த்தியையும் படத்திலே தியாகம் செய்யாமல் உழைத்திருக்கிறார்கள். உண்மையாகவே பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமே மிகுந்தது.

4. ராஜா திரையரங்கில் தொடர்ச்சியாகக் காடசிகள் திரையிடப்படுகின்றன. மக்கள் கூட்டம் கூட்டமாகப் போய்ப் பார்க்கிறார்கள். நீங்களும் சென்று கண்டு மகிழலாம். வாய்விட்டுச் சிரிக்கலாம், முழுமையாகப் படத்தோடு ஒன்றலாம்.

5. குறைகள் இருக்கிறதா? திரைக்கதையில் ஆங்காங்கே இருக்கிறது. அப்படி ஒன்றும் மோசமான குறைகள் இல்லை. அதுபற்றியெல்லாம் பின்னர் பேசலாம். இயல்பாக, engaging ஆக ஒரு சினிமா எடுத்திருக்கிறார்கள்.. நன்றாக இருந்தால் நம் மக்கள் உறுதியாகக் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கையில் பார்ப்போம், பிடித்திருந்தால் கொண்டாடுவோம்.. குறைகள் இருந்தால் சொல்லுவோம்.

– நீதுஜன் பாலசுப்பிரமணியம்

Tags: டக் டிக் டோஸ்
ShareTweetShareShareSendSend
Previous Post

சர்வதேச மகளிர் தினம் இன்று : எதனால் கொண்டாடப்படுகின்றது? எப்போதிருந்து கொண்டாடப்படுகின்றது?

Next Post

மரண அறிவித்தல் | அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)

தரணி

தரணி

தொடர்புடைய செய்திகள்

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !
by கண்ணன்
21/01/2026
0

தமிழ் திரையுலகில் தனித்துவமான திரைக்கதைக்கும், யதார்த்தமான இயக்கத்திற்கும் பெயர் பெற்றவர் இயக்குநர் எச்.வினோத். 'சதுரங்க வேட்டை' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இவர், 'தீரன் அதிகாரம் ஒன்று'...

Read more

“தணல்”திரைப்படம் ஆகஸ்ட் 29ம் தேதி வெளியாக உள்ளது.!

“தணல்”திரைப்படம் ஆகஸ்ட் 29ம் தேதி  வெளியாக உள்ளது.!
by Stills
17/07/2025
0

2 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்த நிலையில் திரைப்படம் வெளியாகாமல் இருந்த அதர்வாவின்‘தணல்’திரைப்படம் ஆகஸ்ட் 29ம் தேதி ஆக்சன் திரில்லர் ஜேனரில் தயாராகி உள்ளதிரைப்படம்  வெளியாக உள்ளதாக படக்குழு...

Read more

அதிர்ச்சியில் திரையுலகம் பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்…

அதிர்ச்சியில் திரையுலகம் பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்…
by Stills
04/12/2024
0

சின்னத்திரை சீரியல் நடிகரான நேத்ரன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி மரமணமடைந்துள்ளார். பிரபல சின்னத்திரை சீரியல் நடிகரான நேத்ரன் பல...

Read more

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’சர்வதேச விருதை வென்றது.!

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’சர்வதேச விருதை வென்றது.!
by Stills
05/07/2024
0

நேஷனல் ஃபிலிம் அகாடமி சார்பில்  பத்தாவது சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது. இதில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் எனும் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கு...

Read more

‘கொட்டேஷன் கேங்’ ஹைப்பர் லிங்க் பாணியில் உருவாகி உள்ளது.!

‘கொட்டேஷன் கேங்’ ஹைப்பர் லிங்க் பாணியில் உருவாகி உள்ளது.!
by Stills
29/06/2024
0

இயக்குநர் பாலாவின் உதவியாளரான விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கொட்டேஷன் கேங்' எனும் திரைப்படம், ஹைப்பர் லிங்க் பாணியிலான கதையாக உருவாகி இருக்கிறது என...

Read more

“முல்லை சசி”யின் ‘முட்டக்கண்ணி’ பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.

“முல்லை சசி”யின் ‘முட்டக்கண்ணி’ பாடல் விரைவில் வெளிவரவுள்ளது.
by தரணி
20/04/2024
0

ஸ்ரீகாந்தேவா இசையில் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய முட்டக்கண்ணி பாடல் எதிர்வரும் மேமாதம் முதலாம் திகதி மாலை 7.00 மணிக்கு வெளியாகவுள்ளது. ஜேர்மனியை சேர்ந்த பிரபல தாயகப்பாடகர்...

Read more
Next Post
மரண அறிவித்தல் | அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)

மரண அறிவித்தல் | அமரர் குமாரதாஸ் சண்முகராசா (குமரன்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.