Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு ஈழம்

முகவர் மூலம் வெளிநாடு செல்லும் உங்களுக்காக

அரவிந்த் by அரவிந்த்
19/10/2023
in ஈழம், இலங்கை
0
0
SHARES
63
VIEWS
ShareTweetShareShareShareShare

யுகதீபன் ஒரு யுகத்தின் முடிவு.

ஒரு தசாப்தகால எங்கள் நண்பன். ஒரு சிறந்த விற்பனை முகாமையாளன். இவனை தெரியாதவர்கள் கிளிநொச்சியில் யாரும் இல்லை. கனதியான உடலும் கனிவான சிரிப்பும் , கலகல எனும் பேச்சும் இவன் தனித்துவம்.

வெளித்தெரியாத தமிழ்த்தேசியவாதி. அரசியல்விடயங்களை தெரிந்து கொள்ள இவன் அப்பப்ப அழைப்பெடுப்பான். அண்ணை என்று தான் நானும் அழைப்பேன் அவனும் அண்ணை என்றே என்னை அழைப்பான். நாம் தவறான அரசியலால் ஆழப்படுகின்றோம் எனும் ஆதங்கம் இவனிடம் அதிகமாகவே இருந்தது.

எங்கு கண்டாலும் நின்று பேசாது நாம் கடந்ததே இல்லை. நல்லதொரு தந்தை யுகா. யுகாவின் மகன் கடந்த இரண்டு வருடங்களிற்கு முன் நடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் இடம் பெற்றிருந்தான். எப்போதும் தன் ஐந்து பிள்ளைகளையும் ஆழமாக நேசித்தவன் யுகா. அண்ணை நாம் இந்த காலத்தில் பிள்ளைகளை வளர்க்கவே கஸ்டமாக இருக்கு அந்த காலத்தில் எங்களை வளர்க்க எங்கள் அம்மா அப்பா எவ்வளவு கஸ்டப்பட்டிருப்பார்கள் என பல முறை கூறுவான் யுகா….

வியாபார உலகின் புலமையாளனாக இருந்தும் மனித கடத்தல் காரர்களிடம் இவன் ஏமாந்து விட்டானே எனும் ஏக்கம் தான் என்னுள் அதிகமாக எழுகின்றது.

பிரான்ஸ் செல்வதற்காக விமானம் மூலம் ரஷ்யாவிற்கு ஆள் கடத்தும் முகவர்களால் அழைத்துச்செல்லப்பட்டு ஆபத்தான சர்வாதிகாரியால் ஆளப்படும் பெலரூஸ் நாட்டிற்கு ரஷ்யாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றான். அங்கிருந்து போலாந்திற்கு செல்வதற்கு பெலரூஸ் எல்லையை கடக்க 700 km தூரம் ஆபத்தான காட்டு பாதைகளால் அழைத்து செல்லப்படும் போது நடக்க முடியாது நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார். கடந்த சனிக்கிழமை தனது மனைவிக்கு தொலைபேசி எடுத்து என்னால் இனி ஒரு அடிகூட நடக்கமுடியாது என்னை யாராவது காப்பாற்றினால் தான் நான் உயிர் பிழைப்பேன் என கூறியுள்ளார். அது தான் யுகா எடுத்த இறுதி அழைப்பு. யுகாவுடன் சென்ற 07 பேரும் இவனை இடைநடுவே விட்டு விட்டு சென்று விட்டனர்.

யுகாவின் மனோதிடம் இடம் கொடுத்தாலும் அவன் உடல்நிலை 700 km தூரத்தை நடந்து கடக்க ஒருபோதும் இடம் கொடுக்காது. உணவின்றி உறக்கமின்றி, ஓய்வின்றி, உடலை உறைய வைக்கும் குளிர் நிறைந்த காடுகளுக்குள்ளால் மாதக்கணக்கில் நடந்து ஆபத்தான போர்முனை எல்லைகளை கடக்க கோடி ரூபா காசையும் கொடுத்து மனைவி பிள்ளைகளை பிரிந்து வெளிநாடு செல்லும் ஈழத்து சொந்தங்களே ஒருகணம் நின்று சிந்தியுங்கள்.

பெரும் போர் நடக்கும் ரஷ்யாவில் இருந்து திருட்டு பாதைகளால் ஆபத்தான எல்லைகளை கடக்க இந்த மனிதக் கடத்தற்காரர்களின் பொய்களை நம்பி ஒரு அற்புதமான மனிதனை நாம் இழந்து நிற்கிறோம். யுகாவின் ஐந்து பிள்ளைகளையும் வளர்ப்பது அந்த இளந் தாய்க்கு இனி எவ்வளவு சவாலாக இருக்கும்.

பெலரூஸ் போலந்து எல்லைகள் போர் மேகங்கள் சூழ்ந்த ஆபத்தான பகுதி. பெலரூஸ் போலந்தை தாக்கலாம் எனும் அச்சத்தில் நேட்டோ நாடுகள் அந்த எல்லை முழுவதும் அணு ஆயுதங்களை கூட நிலை நிறுத்தி வைத்திருக்கின்றன. இப்படியான ஆபத்தான எல்லைகளை கடந்து செல்லத் தீர்மானிக்கும் பயண முகவர்கள் உண்மையில் மனித குலத்திற்கு எதிரான விரோதிகள் தான்.

இப்படியான முடிவுகளை எடுத்து விலைமதிப்பற்ற உயிரையும் இழந்து. உங்களை நம்பி வாழும் உறவுகளையும் நடுவீதியில் விட்டு செல்லும் இந்த துன்பகரமான முடியை எமது இளைய தலைமுறை இனியும் எடுக்கக்கூடாது. யுகா தன் மரணத்தின் மூலம் ஒரு உண்மையை எமக்கு உணர்த்தி செல்கின்றான்.
மனிதக் கடத்தற்காரர்கள் சிறந்த நடிகர்கள் அவர்கள் அறிவுமிக்க கண்களையே ஏமாற்றி விடுகின்றனர் என்பது தான் அந்த எளிமையான உண்மை.

குறிப்பு :– பிரான்ஸ் செல்ல ஒரு கோடி ரூபாவரை பயண முகவர்கள் கறந்து எடுத்து விடுகின்றனர். அந்த பணத்தை வங்கியில் வைப்புச் செய்தால் மாதாந்தம் 125,000/- ரூபா வட்டியாக வரும். அத்தோடு நாம் இங்கு வழமையான உழைப்பதையும் சேர்த்தால் மாதாந்தம் 200,000 ரூபா வருமானம். நிம்மதியாக குடும்பத்துடன் மகிழ்வாக வாழலாம் நமது நாட்டில்.
மாதாந்தம் ஒருமுறையேனும் தவறாது வெளிநாட்டில் இருந்து 200,000 ரூபா அனுப்பும் உறவுகள் யாரும் இருக்கிறார்களா ? எனும் கேள்விக்கு விடை தேட வேண்டும் எங்கள் மக்கள்.

விழிப்புணர்வு பதிவு

Tags: இலங்கைவெளிநாடுதமிழ்இளைஞர்கள்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுத்தப்படுமா?

அடுத்த செய்தி

சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களது அவர்களின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

அரவிந்த்

அரவிந்த்

தொடர்புடைய செய்திகள்

கீதா கோபிநாத்தின் இலங்கைக்கான முன்னெடுப்பு இறுதித்திட்டம்.!

கீதா கோபிநாத்தின் இலங்கைக்கான முன்னெடுப்பு இறுதித்திட்டம்.!
by Stills
16/06/2025
0

இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணயநிதியத்தின் இறுதி திட்டமாக தற்போது முன்னெடுக்கப்படும் திட்டம் விளங்கவேண்டும் - கீதா கோபிநாத் இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில்...

மேலும்...

கீதா கோபிநாத் -அநுர சந்திப்பு.!

கீதா கோபிநாத் -அநுர சந்திப்பு.!
by Stills
16/06/2025
0

இன்று திங்கட்கிழமை (16) கொழும்பில் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்றைய தினம்...

மேலும்...

வ்ராய் கெலீ பல்தசார் கொழும்பு மாநகர மேயராக தெரிவு.!

வ்ராய் கெலீ பல்தசார் கொழும்பு மாநகர மேயராக  தெரிவு.!
by Stills
16/06/2025
0

கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பை மேற்கொள்ள மேல் மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் எஸ்.கே. ஜயசுந்தர முன்னிலையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது மேயராக தேசிய மக்கள்...

மேலும்...

கீதா கோபிநாத் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலாலை சந்தித்தார்.

கீதா கோபிநாத் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலாலை சந்தித்தார்.
by Stills
16/06/2025
0

இன்று திங்கட்கிழமை (16) இடம்பெறவுள்ள மாநாட்டில்  கலந்து கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு வருகை...

மேலும்...

ஜனாதிபதி அநுர ஜேர்மன் வணிகமன்றத்துக்குத் தலைமை தாங்கினார்.!

ஜனாதிபதி அநுர ஜேர்மன் வணிகமன்றத்துக்குத் தலைமை தாங்கினார்.!
by Stills
14/06/2025
0

நேற்று(13)  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜேர்மன் வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வணிக மன்றம்  சம்மேளனத்தின்  தலைமையகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆஸ்திரேலியா,...

மேலும்...

பிரதி அமைச்சர் ரத்ன கமகே நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு.

பிரதி அமைச்சர் ரத்ன கமகே  நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு.
by Stills
14/06/2025
0

நேற்று வெள்ளிக்கிழமை (13) கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே  தலைமையில் நீர்கொழும்பு நகர மண்டபத்தில்  கடற்றொழில், நீரியல் மற்றும் கநீர்கொழும்பு மாவட்ட கடற்றொழில் சங்கங்களின்...

மேலும்...
அடுத்த செய்தி

சிரேஷ்ட ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களது அவர்களின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
கீதா கோபிநாத்தின் இலங்கைக்கான முன்னெடுப்பு இறுதித்திட்டம்.!

கீதா கோபிநாத்தின் இலங்கைக்கான முன்னெடுப்பு இறுதித்திட்டம்.!

16/06/2025
கீதா கோபிநாத் -அநுர சந்திப்பு.!

கீதா கோபிநாத் -அநுர சந்திப்பு.!

16/06/2025
வ்ராய் கெலீ பல்தசார் கொழும்பு மாநகர மேயராக  தெரிவு.!

வ்ராய் கெலீ பல்தசார் கொழும்பு மாநகர மேயராக தெரிவு.!

16/06/2025
கீதா கோபிநாத் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலாலை சந்தித்தார்.

கீதா கோபிநாத் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலாலை சந்தித்தார்.

16/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.