Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு ஈழம் மாவீரர்

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

Stills by Stills
29/06/2024
in மாவீரர்
0
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..
0
SHARES
2.2k
VIEWS
ShareTweetShareShareShareShare

விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறையில் நீண்ட காலமாக களமாடி 2009 க்கு பின்னர் பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த புலனாய்வுத்துறையின் மேலாளர்களில் ஒருவரான விநாயகம் அவர்கள் பிரான்ஸ் நாட்டின் சாவடைந்துள்ளார் . அவரின் இழப்பு குறித்து விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையினர் துயர்பகிர்வு செய்தி ஒன்றினை வெளியிட்டு உள்ளனர். அந்த செய்திக்குறிப்பினை இங்கே அப்படியே பதிவிடுகின்றோம்

 07.06.2024 

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் 

 

தமக்கான தனியரசை அமைத்துக் கொள்வதற்காகத் தமிழினம் சுமந்து நின்ற விடுதலைப் போராட்டப் பாதையிலே, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலில் பிறப்பெடுத்துக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மாபெரும் இயக்கத்தின் அச்சாணியாகத் திகழும் புலனாய்வுத்துறையின் இயங்குவிசைத் தளத்திலே இமாலய வெற்றிகளையும், சாதனைகளையும் நிகழ்த்தித் தனக்கென ஓர் அத்தியாயத்தை பதிவு செய்து தமிழீழத் தேசியத் தலைவரின் பாராட்டு- தல்களையும் பெற்று மிக நீண்டகாலமாக தமிழீழ நிலப்பரப்பிலும், தமிழீழ எல்லைக்கு அப்பாற்பட்ட எதிரிகளின் தளங்களிலும் சுழன்று வீசிய புலனாய்வுப்போர்முகம் மேலாளர் விநாயகம் (கதிர்காமசேகரம்பிள்ளை- விநாயகமூர்த்தி) அவர்கள் உடல்நலக்குறைவினால் 04.06.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று பிரான்சு நாட்டில் சாவை அணைத்துக் கொண்டார்.  

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதி உச்சமான தியாகங்களும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவங்கள் மிக்க பகுதியாகவும், விடுதலைப் போராட்ட ஆரம்ப காலங்கள் தொட்டே துலங்கிய தமிழீழத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென்மராட்சி வரணியைப்பிறப்பிடமாகக் கொண்ட மேலாளர் விநாயகம் அவர்கள் 1983ஆம் ஆண்டு தனது பத்தொன்பதாவது வயது தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிக- ளின் மறைமுகப் போராளிகளுக்கான தகவல் பரிமாற்றம் மற்றும் வழங்கல் உதவியாளராகச் செயற்பட்டுத் தனது முழுமையான நம்பிக்கையினையும், உறுதியையும் நிலைநாட்டினார். பனை, தென்னைகள் நிறைந்த தோப்புகளிலும், நீரேரி கலந்த சதுப்பு நிலங்களிலும் இவர் பாதங்கள் இலட்சியப் பணி தொடர்ந்தன. பின்னர் 1984ஆம் ஆண்டு தன்னை முழுநேரப் போராளியாக மாற்றிக்கொண்டு, தனக்கான அடிப்படைப் பயிற்சியினை தென்மராட்சியிலே நிறைவு செய்து, தென்மராட்சியின் முதற் பொறுப்பாளராக மிகத் துடிப்போடும், மக்களின் நம்பிக்கையாகவும் இருந்த மேஜர் கேடில்ஸ் அவர்களின் பொறுப்பில் ஆர்வம் துடிப்பு. அறச்சீற்றம் விவேகம் விடுதலை இலட்சியம் ஆகிய சிறப்பம்சங்கள் கொண்ட போராளியாகத் தன்னை நிலைநிறுத்தித் தமிழின விடியலுக்காக அயராது உழைத்தார். 

 சிறிலங்கா இராணுவக் கொடூரங்கள்கண்டு கொதித்தெழுந்த விடுதலைப் பற்றுமிக்க பல போராளி களைக்கொண்ட யாழ் மாவட்டத்தின் அன்றைய பொறுப்பாளராக இருந்த கேணல் கிட்டு அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவுசெய்யும் மேஜர் கேடில்ஸ் அவர்களின் தென்மராட்சி அணியில் மேலாளர் விநாயகமும் ஒருவராக செயற்பட்டார். 1987ஆம் ஆண்டு நாவற்குழி இராணுவமுகாம் மீதானதொரு பாரிய தாக்குதலுக்கான திட்டமிடல்கள் நிகழ்ந்துகொண்டிருந்தவேளையில் வெடிபொருள் நிரப்பப்பட்ட நீர்த்தாங்கி வாகனம் தவறுதலாக வெடித்த சம்பவத்தில் லெப்.கேணல்.பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட பதினொரு போராளிகள் வீரச்சாவைத் தழுவிய சம்பவத்தில் மேலாளர் விநாயகம் அவர்கள் விழுப்புண் அடைந்தார்.  

 

விடுதலைக்கான உழைப்பு என்பதில் கால நேரங்களையோ. கடினங்களையோ சுமையாகக் கொள்ளாது சுகமாக ஏற்று இதயச் சுத்தியோடு கடமைகளை முடிக்கும் பக்குவ நிலையால் மக்கள் மனங்களில் நிறைந்து அழியாப்புகழ் கொண்டவர்களே எங்கள் மாவீரர்கள். அத்தகைய வார்த்தைகளுக்குள்ளும், வரலாறுகளுக்குள்ளும் எப்போதும் நிலைத்து நிற்கும் பெரும் பேறு பெற்றவர் மேலாளர் விநாயகம் என்றால் அது மிகையாகாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் ஆளுகைப் பரப்பென்பது உள்ளக. வெளியகப் பரப்புக்களால் விரிந்து முகவர் கட்டமைப்புத் தொடக்கம் ஈட்டப்படும் பெரு வெற்றிவரை அது தமிழ்த்தேசிய நிழலரசின் ஆணிவேர்ப் பரப்பைத்தாங்கிநிற்கும் நுண்ணிய உயிர்நாடிப் பொறிமுறையாகும். அவதானித்தல், தகவல்களைச் சேகரித்தல், ஒப்புநோக்கல், செவ்வைபார்த்தல், திட்டமிடல். இலக்கைச் சென்றடைதல், எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வெற்றியைப் பெறல், மீண்டும் தளம் திரும்புதல், பகுப்பாய்தல், பொறுப்புக்கூறல்,இப்படியாக நீண்டு செல்லும் ஒவ்வொருகட்டத்திற்கும் தனித்தனியான கடும்பயிற்சியும், தந்திரங்களும், முயற்சியும் இருந்தே ஆகவேண்டும், 

 

இவற்றுக்கெல்லாம் தனது உடலில் எத்தனை உபாதைகள் இருந்தாலும் அவற்றைத் தாண்டி சாதனை நாயகனாக வலம் வந்தார் மேலாளர் விநாயகம் அவர்கள். பல்வேறு பொறுப்பாளர்களின் பொறுப்பின் கீழ் பல்வேறு தளங்களில் ஓயாது உழைத்த மேலாளர் விநாயகம் அவர்களது வாழ்க்கை வரலாற்றை வெறுமனே ஓர் அறிக்கையின் மூலமாக நிறுவிவிடமுடியாது. அது தமிழ் இலக்கண, இலக்கியக் கோவைகளால் நிரம்பிய எதிர்கால இளம்தலைமுறை படித்துணரவேண்டிய ஒரு சிறந்த நூலாக அமைய வேண்டும், அதனை உலகப் பரப்பெங்கிலும் வாழும் அவரது தோழமை உறவுகளால் காலக் கிரமத்தில் ஈடேற்றப்படுமென நம்புவோம். புலனாய்வுத்துறைப் போராளியாகவே அறியப்பட்ட மேலாளர் விநாயகம் அவர்கள் தமிழீழ விடுதலைக்காகப் பிரசவமாகிய அத்தனை துறைகளோடும், பிரிவுகளோடும் எத்தகைய நல்லுறவைப்பேணினார் என்பதும், தேசநலன் சார்ந்த தெளிவோடும் குறிப்பாக நேர்மையோடும், அறச்சீற்றத்தோடும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் அவர் எப்போதும் பின்னிற்பதில்லை. 

 

தமிழீழத் தேசியத் தலைவரிடம் பல பாராட்டுக்களைப் பெற்றதோடு தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளரால் எப்போதுமே இவரைப் போராளிகளுக்கு எடுத்துக்காட்டாளனாகப் பயன்படுத்தியமையும் வரலாறு தன்னகத்தே தாங்கிக் கொண்டுள்ளது. எமது தனித்துவமான அரசியல் இலக்கினை அடைந்துகொள்வதற்கான போர் முறைகளின் ஒரு வடிவமே ஆயுதப் பொறிமுறை என்பதாகும். அவ் ஆயுதப் பொறிமுறை மூலமாக நிகழ்த்தப்படும் சமாதானம் நோக்கிய மாற்றங்கள் மறக்கப்பட முடியாதவை. அத்தகைய ஒரு மாற்றமாகவே 2001ஆம் ஆண்டு சிறிலங்கா கட்டுநாயக்கா விமான நிலையம் மீதான தாக்குதலாகும், எந்தவொரு பொது மக்களுக்கும் பாதிப்பை உண்டுபண்ணாத வகையில் திட்டமிடப்பட்ட இத்தாக்குதலானது உலகின் கவனங்களை ஈர்த்துக்கொண்டதோடு சிறிலங்கா அரசை சமாதானப் பேச்சுநோக்கி முன்னகரவும் வைத்துள்ளது. இத்தாக்குதலின் பிரதான பொறுப்பாளர்களில் ஒருவராக மேலாளர் விநாயகம் அவர்கள் இருந்தார் என்பதும் வரலாறே. 

 

முள்ளிவாய்க்கால் பெருவெளியாக விரிந்த நெருப்பாற்று நீச்சலில் நின்றபடியே, தலைமையின் கட்டளைக்கு அமைய ஒரு குறிப்பிட்ட அணியோடு வரலாற்றுத் திருப்புமுனையை ஏற்படுத்தும் சிறப்பு நடவடிக் கையின் நிமித்தம் வாழ்வா? சாவா? எனும் சவால்மிகு தருணத்தை உறுதியோடும், ஓர்மத்தோடும் ஏற்று எதிரியின் குகைக்குள் சென்று கடமையாற்றியமை ஒரு மாபெரும் மயிர்க்கூச்செறியும் வரலாறு. இந்த வரலாற்றுப் பக்கங்களில் அவரோடு களமாடிய சகதோழர்கள் இன்னும் உயிரோடுதான் உள்ளார்கள். ஆனால் அந்தக் காத்திரமான வரலாற்றுப் பக்கங்களைக் கிழித்தெறியவும், இல்லாதொழிக்கவும் அவதூறுகளைப் பரப்பவும் பல நேரடி, மறைமுகத் துரோக முகங்கள் முற்படினும், நிகழ்காலம் பலரை காலமறிந்து அறத்தின்வழியாக கரங்களைக் கட்டிவைத்திருப்பதானது இப்போது துன்பியலாக இருப்பினும் காலம் ஒரு நேர்கோட்டில் அவற்றைத் தெளிவோடு பதிவாக்கி, இந்த மாவீரன் நேசித்த அதே மக்களின் கரங்களில் ஒப்படைக்கும் என்பது திண்ணம். 

பத்தொன்பது வயதில் ஆரம்பித்த விடுதலைப் பணிகளூடாக அறியப்பட்ட இந்த வரலாற்று நாயகன் தனது அறுபதாவது வயதில் விழிமூடிய இந்நாளில் உலகப் பரப்பெங்கிலும் வாழ்ந்துவரும் உறவுகளாகவும், தாயக மக்கள் சார்பாகவும் வீர வணக்கம் செலுத்துவோமாக. 

 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” 

 

புலனாய்வுத்துறை,  

தமிழீழ விடுதலைப் புலிகள்,  

தமிழீழம் 

Tags: புலனாய்வுத்துறைசாவடைந்தார்விநாயகம்புலிகள்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

தனது இரத்தத்தால் தந்தையை வரைந்த மகள்!

அடுத்த செய்தி

“எத்தனால்”தான் காரணமென்று இன்னும் எத்தனை நாள்தான் சொல்வீர்கள்? தமிழ்நாடு அரசே! பூரண மதுவிலக்கினை உடனே அமல் படுத்து. வ.கௌதமன்.

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

மண்ணின் விடுதலைக்கு உயிரொளி தந்து மறைந்த எங்கள் மாவீர தெய்வங்களுக்கு வீர வணக்கம். – வ.கௌதமன்

by Stills
28/11/2024
0

நீங்கள் கணிக்க முடியாத பெரும் வெடிப்பைக் கக்கும் எரிமலைப் போல ஒருநாள் நாங்கள் எங்கள் தனித் தமிழீழத்தை அடைந்தே தீருவோம். மண்ணின் விடுதலைக்கு உயிரொளி தந்து மறைந்த...

மேலும்...

கரும்புலிகள் நாள்

கரும்புலிகள் நாள்
by Stills
12/12/2024
0

கரும்புலிகளை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சூலை 5ம் நாள் கடைப்பிடிக்கப்படும் நினைவு நாளே கரும்புலிகள் நாள் எனப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் தற்கொடைப் போராளியான...

மேலும்...

களத்திலே கருவான மாவீரனின் மகள் எழுதுகிறேன்…. 

களத்திலே கருவான மாவீரனின் மகள் எழுதுகிறேன்…. 
by தரணி
16/05/2024
0

களத்திலே கருவான மாவீரனின் மகள் எழுதுகிறேன்.... அப்பா ! 15 ஆம் ஆண்டு நினைவுகளுடன் (15.05.2024). காவியத் தலைவன் ஓவியம் ஒன்று வரைந்தாராம் அதற்கு வர்ணங்கள் தீட்டி சொர்ணம்...

மேலும்...

“நாட்டுப்பற்றாளராக” மதிப்பளிக்கப்பட்டார் ‘ கிண்ணி அம்மா ‘ – அனைத்துலகசெயலகம் மதிப்பளித்தது .

“நாட்டுப்பற்றாளராக” மதிப்பளிக்கப்பட்டார் ‘ கிண்ணி அம்மா ‘ – அனைத்துலகசெயலகம்  மதிப்பளித்தது .
by Stills
12/02/2024
0

தமிழீழ விடுதலைப்பற்றோடு, போராளிகளை அன்புடன் அரவணைத்து ஆதரவளித்த கந்தசாமித்துரை வள்ளிநாயகி (கிண்ணியம்மா) அவர்கள், 01.02.2024 அன்று உடல் நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற செய்தி எமக்குப் பெருந்துயரினை ஏற்படுத்தியுள்ளது....

மேலும்...

விடுதலை வரலாற்றின் காலப்பதிவான தளபதி. கேணல். கிட்டு.!

விடுதலை வரலாற்றின் காலப்பதிவான தளபதி. கேணல். கிட்டு.!
by Stills

கிட்டண்ணை ஓர் அமைப்பின் தளபதிமட்டுமல்ல. ஈழத்தமிழினத்தின் வீரத் தளபதி. சின்னஞ்சிறு குழந்தைமுதல் முதியோர் வரை எல்லோராலும் நேசிக்கப்பட்ட மனிதன் அவர்.துணிவு, தன்னம்பிக்கை, உடனடியாக பிரச்சினைகளைத் தீர்க்கும் முடிவெடுக்கும்...

மேலும்...

சாவரும் போதிலும் தணலிடை வேகினும் சந்ததி தூங்காது எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது.!

சாவரும் போதிலும் தணலிடை வேகினும் சந்ததி தூங்காது எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது.!
by Stills
02/12/2023
0

தமிழ் ஈழ மக்கள் "சாவரும் போதிலும் தணலிடை வேகினும் சந்ததி தூங்காது, எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது” என்பதை ஒரு பெரும்...

மேலும்...
அடுத்த செய்தி
“எத்தனால்”தான் காரணமென்று இன்னும் எத்தனை நாள்தான் சொல்வீர்கள்? தமிழ்நாடு அரசே! பூரண மதுவிலக்கினை உடனே அமல் படுத்து.  வ.கௌதமன்.

"எத்தனால்"தான் காரணமென்று இன்னும் எத்தனை நாள்தான் சொல்வீர்கள்? தமிழ்நாடு அரசே! பூரண மதுவிலக்கினை உடனே அமல் படுத்து. வ.கௌதமன்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

20/05/2025
மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

19/05/2025
யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

19/05/2025

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.