Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு ஈழம்

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற முகவரி மேதகு பிரபாகரன்-அன்பு அண்ணனுக்கு அறுபத்தொன்பதாமாண்டு அகவைதின நல்வாழ்த்துகள். வ.கௌதமன்

Stills by Stills
25/11/2023
in ஈழம்
0
உலகத் தமிழர்களின் ஒப்பற்ற முகவரி மேதகு பிரபாகரன்-அன்பு அண்ணனுக்கு அறுபத்தொன்பதாமாண்டு அகவைதின நல்வாழ்த்துகள்.  வ.கௌதமன்
0
SHARES
11
VIEWS
ShareTweetShareShareShareShare

உலகத் தமிழர்களின் ஒப்பற்ற முகவரி மேதகு பிரபாகரன்.

அன்பு அண்ணனுக்கு அறுபத்தொன்பதாமாண்டு அகவைதின நல்வாழ்த்துகள்.

வ.கௌதமன்

ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழர் மண்ணை, வீரம் செறிந்த எத்தனையோ மன்னர்கள் ஆண்டதுண்டு.
வீரமும் ஈரமும் அறமும் சுமந்து ஆண்ட ஒரே ஒரு மன்னன் எமது அண்ணன் மேதகு பிரபாகரன் மட்டுமே உண்டு.

சிங்களக் காடையர்கள் ஒரு தமிழ்க் குழந்தையை கொதிக்கும் தாரினில் முக்கியெடுத்து தூக்கிய போது “ஏனப்பா நாம அவர்களை திருப்பி அடிக்கவில்லை” என்று தனது கை பிடித்து நடந்து வந்த தந்தையை கேள்விக் கேட்ட பால சிறுவன்.

தகப்பன் தனது கனவினை வெளிப்படுத்திய போது “படித்துவிட்டு அரசாங்கத்தில் சேர்வதல்ல எனது வேலை; நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருக்கிற எமது மக்களுக்கு தனித்ததொரு அரசாங்கத்தை உருவாக்குவதே எனது தலையாய வேலை” என்று சொன்ன இளம் சிறுவன்.

“எதிரியை விட துரோகியே ஆபத்தானவன்” என சூளுரைத்து தமிழ் மாநாட்டில் தமிழர்கள் சாகக் காரணமாக இருந்த மேயர் ஆல்பர்ட் துரையப்பாவை நேருக்கு நேர் நின்று களையெடுத்த பதின்ம பருவ இளைஞன்.

காடையர்களும் ராணுவமும் கண் கொத்திப் பாம்பாக தேடிக் கொண்டிருக்க, பகல் முழுவதும் புறாக்களின் புழுக்கைகளோடும், எலிகளின் எச்சங்களோடும் முருகர் கோவிலின் உச்சியில் மூச்சடக்கி உட்கார்ந்திருந்து, இரவானதும் இறங்கி வந்து இயற்கை உபாதைகள் கழித்து தனது உயிரான தாய் நில விடுதலைக்காக, உயிருக்கு உயிரான நண்பர்களோடு வியூகமைத்துவிட்டு முப்பது நாட்களுக்கு மேல் சிகரத்தில் அமர்ந்து கண்விழித்து தமிழீழற்காக கனவு கண்ட பெருவீரன்.

இனமழிக்கும் எதிரிகளை கருவறுக்க தனது தாய்நில தமிழர்களைக் கொண்டே, உலகின் எந்த ஒரு நாட்டின் துணையுமின்றி காலாட் படை, கப்பல் படை, விமானப் படை என முப்படைகளையும் கட்டி தனித்ததொரு மக்கள் ராணுவத்தை கட்டமைத்த மாவீரன்.

அனைவரும் வியக்க அரசாண்டது பொறுக்காமல் சிங்கள அதிகார வர்க்கத்தோடு இவ்வுலகின் வல்லரசு நாடுகளனைத்தும் ஒன்றிணைந்து எங்கள் பிஞ்சுப் பிள்ளைகள் முதல் இளைஞர்கள், பெண்கள், பெரியவர்கள் என அனைவரையும் ஈவு இரக்கமின்றி கொத்துக் குண்டுகளையும் ரசாயன குண்டுகளையும் வீசி கொத்துக்கொத்தாக செத்து சிதறி எங்கள் நந்திக்கடல் செங்கடலான போதும் “எதிரியை மட்டும் எதிர்ப்போம்; அவர்கள் வீட்டு பெண்களையும் குழந்தைகளையும் நம் வீட்டார்கள் போல் காப்போம்” என கொழும்பினை தகர்க்க வாய்ப்பிருந்தும் வன்மம் காட்டாது எங்கள் வள்ளுவன் வள்ளலாரை போல் “எதிரிக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்கிற அறக்கோட்பாட்டிற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்த எம் இனப் பெருந்தலைவன்.

இறுதி யுத்தம் செய்த இரத்த காட்டேரிகள் இராஜபக்சே, கோத்தபய, பசிலை அவர்களது சொந்த மக்களே அடித்து அவர்களின் மாளிகையை தீயிட்டுக் கொளுத்தி அவர்களை ஓட ஓட துரத்திய பின், தங்களின் “பசி”த்தீ அடங்காமல் கொழும்பு தார்ச் சாலையை நிறைத்தபடி நின்று “பிரபாகரன் இருந்திருந்தால் இந்நேரம் நாங்கள் பட்டினி கிடந்திருக்க மாட்டோம்” என ஒரு சிங்கள இளைஞன் பெருங்குரல் எடுத்து கூக்குரல் இட்ட பொழுதே எங்கள் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறப்பு இதுவரை இந்த உலகில் எந்த தலைவனுக்குமில்லாத தனிப்பெரும் சிறப்பினை அடைந்துவிட்டது.

அப்படிப்பட்ட வீரமும் ஈரமும் அறமும் ஒருங்கே அமைந்த எனது தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான எங்களண்ணன் மேதகு பிரபாகரன் அவர்களுக்கு ஒரு தம்பியாக அவருக்கு அறுபத்தொன்பதாமாண்டு அகவை தின நல்வாழ்த்துகளை எனது உயிர் நெகிழும் பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

“உன்னைப்போல் ஒரு பிறப்பு இனி இவ்வுலகில் சாத்தியமில்லை. ஆனால் உன்னைப் போல் பல வளர்ப்பு தமிழினத்தில் சாத்தியமானது.

நீ இருக்கிறாயா இல்லையா என்கிற மர்மத்தை காலம் கட்டவிழ்க்கட்டும். அதுவரை பொறுமை காக்காமல் இனியாவது தமிழினம் இறுக கைப்பற்றி எம் தலைவனின் வலி சுமந்து புதியதொரு வழி சமைத்து தமிழினத்தை தலை நிமிர்த்துவோம்.

தமிழரின் தாகம்
தமிழீழத் தாயகம்.

வெல்வோம்.

பெரு நம்பிக்கையோடு,

வ. கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி “சோழன்குடில்”
26.11.2023

ShareTweetShareShareSendSend
முன் செய்தி

உணர்ச்சிப்பெருக்கான மாவீரர் நாள் உரை – வ.கௌதமன்

அடுத்த செய்தி

எம் தேசத்தின் சூரியப்புதல்வன்; எம் நெஞ்சமெல்லாம் வென்ற மாவீரன்

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!
by அரவிந்த்
09/09/2025
0

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்றஇந்திய மத்திய அரசின் அறிவிப்புமகிழ்சிக்குரியது! தமிழ்நாட்டிலிருந்து சிரஞ்சீவி மாஸ்டர் சிறப்புப் பேட்டி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் சட்டரீதியாக வாழ்வதற்கான அனுமதியை இந்திய...

மேலும்...

கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள  அறிவிப்பு!
by Stills
24/06/2025
0

இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை 01.00 மணி முதல் மூடப்பட்ட ( Aero Space ) வான்வெளி வழி  மீண்டும் திறக்கப்பட்டுள்ளதுடன் அதன் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு...

மேலும்...

யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடம் போதைப்பாவனை இல்லை.!

யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடம் போதைப்பாவனை இல்லை.!
by Stills
21/06/2025
0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் “போதைப் பொருட் பாவனை” தொடர்பில் கோரப்பட்ட விடயங்களிற்கு பதிலளித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போதைப்...

மேலும்...

முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?
by Stills
13/06/2025
0

முள்ளியவளையில்கடந்த இரு தினங்களுக்கு முன்னர்  தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் அமைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து  புதன்கிழமை இரவு இந்த பதாதைகள் இனந்தெரியாதவர்களால் கிழித்தெறியப்பட்டிருந்தது.அந்த தோரணத்தை...

மேலும்...

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

by அரவிந்த்
09/05/2025
0

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்!. _ வ. கௌதமன்...

மேலும்...

புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா சிறப்பு மலர்

by அரவிந்த்
17/04/2025
0

தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா சிறப்பு மலர் பிரான்ஸில் வெளியிடப்பட்டது. தாயகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் அறப்பணிக்காக...

மேலும்...
அடுத்த செய்தி
எம் தேசத்தின் சூரியப்புதல்வன்; எம் நெஞ்சமெல்லாம் வென்ற மாவீரன்

எம் தேசத்தின் சூரியப்புதல்வன்; எம் நெஞ்சமெல்லாம் வென்ற மாவீரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!

இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!

17/10/2025

மரண அறிவித்தல் அமரர்.ஆனந்தகிருஷ்ணன் செல்வகிருஷ்ணன்

17/09/2025
நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

09/09/2025
தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

14/08/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.