இலங்கை ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். நம்புங்கள் என சொல்லிக்கமட்டும்தான்!
இலங்கை ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்.கஞ்சி வழங்கினால் பரிசோதிக்க வரும் சுகாதார அதிகாரிகளை வெசாக் தன்சல்களில் காணமுடியவில்லைஎனசெல்வராஜா கஜேந்திரன் . நாடாளுமன்ற உறுப்பினர்கமுகநூல் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் கஞ்சி கொடுத்தால் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். பொலிஸாரும் இராணுவத்தினரும் ஐஸ்கிறீம் கொடுக்கலாம். கஞ்சி வழங்கினால் இனநல்லிணக்கம் குழம்புமென தடைகொடுக்கும் நீதிமன்றங்கள் சிங்களவர்கள் வசிக்காத வடக்கு கிழக்கில் வெசாக் கொண்டாடினால் இனநல்லிணக்கம் பாதிக்கப்படுமென தடை வழங்கவில்லை. வீதியோரமாக அனுமதியின்றி ஒரு சிறு வியாபாரியால் கடை போட முடியாது. ஆனால் இராணுவத்தினரால் அனுமதியின்றி ஆரிய குளத்தினுள் வெசாக் கூடுகளை கட்டமுடியும் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயம். சிங்களவர்களுக்கு இன்னொரு நியாயம். இலங்கைஅரசின் உண்மையானமுகம் எப்போதுபுரிந்துகொள்வார்கள்.