Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு ஆன்மீகம்

தமிழர்கள் திருமண முறை

Stills by Stills
12/06/2025
in ஆன்மீகம்
0
தமிழர்கள் திருமண முறை
0
SHARES
5
VIEWS
ShareTweetShareShareShareShare

நீண்டி நெடிய வரலாற்றையும், பண்பாட்டையும் தந்த தமிழனத்திற்கென்று திருமண முறை என்பது எப்படிப்பட்டதாக இருந்தது?

நமக்கென்று சில முறைகள் இருக்கிறது. தமிழர் பண்பாடு, வேளாளர் முறை என்றெல்லாம் சங்ககால நூல்களில் கூறப்பட்டிருக்கிறது. இதில் பெரியவர்கள்தான் மிக மிக முக்கியம். மங்கள நாண் என்று சொல்கிறோமே தாலி, அந்த மங்கள நாணை பெரியவர்கள் கையால் எடுத்துக் கொடுப்பார்கள். பெற்றோர், அதாவது மணமகன், மணமகள் பெற்றோர், அதே நேரத்தில் அந்த பெற்றோருக்குப் பெற்றோர். தாத்தா, பாட்டி, பூட்டன் அவர்கள் கரங்களால் எடுத்துக் கொடுத்து, பிறகு மேள தாள வாத்தியங்கள் முழங்க சூட்டுவது என்பது வழக்கமாக இருந்ததுள்ளது.

நடைமுறையில், நடுவில் ஆரியர்கள் வருகை. அதன்பிறகு பார்க்கும்போதுதான் அக்னி வளர்த்தால், மந்திரங்கள் ஜெபித்தல், வேத மந்திரங்கள் ஓதுதல் இதெல்லாம் வந்தது. அதற்கு முன்பு பார்த்தால் பெரியவர்கள் வாழ்த்து கூறுவார்கள். பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று அவரவர்கள் மனதிற்கு பட்டதுபோல் வாழ்த்துக் கூறுவார்கள். நம்முடைய தமிழர் பண்பாட்டு முறை என்பது இதுதான். இதில் ஓதுவார்கள் இருப்பார்கள். அவர்கள் தேவாரம், திருவாசகம் ஓதுவார்கள். இதில், மங்கள நாண் பூட்டிய பிறகு பாட வேண்டிய பாடல் என்றெல்லாம் உண்டு. அந்தப் பாடல்களை அவர்கள் எல்லா வளங்களும் பெற்று வளமோடு வாழ வேண்டும் என்று பாடுவார்கள். இதுதான் முறையாக இருந்தது. இதில் வளர்பிறை அதிகமாக பார்க்கப்பட்டது. தமிழர் திருமணம் எல்லாம் வளர்பிறையை வைத்துதான், அதாவது சந்திரனை அடிப்படையாக வைத்து பார்க்கப்பட்டது. தேய்பிறையில் திருமணம் நிகழ்த்துவதில்லை. அப்பொழுது நெருப்பு வளர்க்கிறதோ, தீ வளர்க்கிறதோ, வேதங்கள் ஓதுவதோ அதெல்லாம் இல்லாமல் இருந்தது. இது நடுவில் வந்ததுதான்.

திருமணத்துக்கான 10 பொருத்தம்
1) தினப்பொருத்தம்
2) கணப் பொருத்தம்:
கணங்கள் மூன்று வகைப்படும்:
3) மகேந்திர பொருத்தம்:
4) ஸ்திரீ தீர்கப் பொருத்தம்:
5) யோனி பொருத்தம்:
6) ராசிப் பொருத்தம்:
7) ரஜ்ஜுப் பொருத்தம்:
8) வசியப் பொருத்தம்:
9) வேதைப் பொருத்தம்:
10) ராசியாதிபதிப் பொருத்தம்:
பண்பாடும் கலாச்சாரமும் இரு கண்களாக திகழும் தமிழ்நாட்டில், திருமணத்துக்கு வாழ்க்கைத்துணையைத் தேர்வு செய்வது என்பது ஆழமான பாரம்பரியத்தில் வேரூன்றி இருக்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளலாமா என்பதை காலம் காலமாக பழக்கத்தில் இருக்கும், 10 பொருத்தம் பார்த்து, அலசி ஆராய்ந்து முடிவு செய்வார்கள். இந்த பத்துப் பொருத்தம் என்று கூறப்படும் அம்சங்கள் மிகவும் முக்கியமானவை. மகிழ்ச்சியான, நீண்ட கால மற்றும் இணக்கமான திருமண வாழ்க்கைக்கு இந்தப் பொருத்தங்கள் மிகவும் அவசியம்.

ஒவ்வொரு பொருத்தமும், பல அம்சங்களை, திருமண பந்தம் சாத்தியமா, நட்சத்திரங்கள் பொருத்தம், பொருளாதார நிலை, பாலியல் பொருத்தம், உணர்ச்சிபூர்வமான இணக்கம், மனநிலை மற்றும் தம்பதிகள் நீண்ட காலம் சேர்ந்து வாழ்வார்களா என்று ஆழமாக ஆய்வு செய்யும்.

இந்த 10 பொருத்தம் பார்க்க வேண்டும் என்ற அமைப்பு, மதிப்புமிக்க வழிகாட்டுதலை வழங்கும்.. அதே வேளையில், நிறைவான திருமணத்திற்கு பரஸ்பர புரிதல், மரியாதை, மனம் விட்டு பேசுவது மற்றும் உணர்ச்சிபூர்வமாக ஒருவருக்கொருவர் ஆதரவு தருவது போன்ற குணங்களும் தேவை என்பதை நினைவில் கொள்வது அவசியம். இறுதியில், பாரம்பரியம் மற்றும் நவீன மாற்றங்களின் முக்கிய அம்சங்கள் உண்மையான, வெற்றிகரமான திருமண பயணத்திற்கு முக்கியமாகும்.

1) தினப்பொருத்தம்:
தினப்பொருத்தும் என்பது 10 பொருத்தங்களில் மிகவும் முக்கியமான பொருத்தங்களில் ஒன்றாகும். தமிழ்நாட்டின் பாரம்பரிய திருமணப் பொருத்த முறையில், தினப் பொருத்தம் என்பது மணமகன் மற்றும் மணப்பெண்ணின் நட்சத்திரம் பொருந்துகிறதா என்பதைக் குறிக்கிறது.
தமிழ் கலாச்சாரத்தில் ஒரு நபர் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறார் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது! ஒரு நபரின் பிறப்பு நட்சத்திரம் அவர் வாழ்வில் பலவிதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் இந்த குணத்தைக் கொண்டிருப்பார், இவருடைய பண்புகள் இவ்வாறு இருக்கும், சில விஷயங்களுக்கு கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டும் என்று அமைந்துள்ளது. எனவே, திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு பெரிதாக சிக்கல் எதுவும் இல்லாத, மனம் பொருந்தி இணக்கமாக வாழ்வதற்கு நட்சத்திரங்களின் அடிப்படையில் பொருத்தம் பார்க்கப்படுகிறது. குறிப்பிட்டு நட்சத்திரம் கொண்டவர் இந்த குணத்தைக் கொண்டிருப்பார், இவருக்கு இந்த நட்சத்திரத்தில் இருக்கும் பெண் பொருத்தமாக இருக்கும் என்று அடிப்படையில் தினப்பொருத்தம் அமைகிறது.

இதற்கு எதிர்மாறாக, பொருத்தமில்லாத நட்சத்திரங்கள் கொண்ட இருவர், திருமணம் செய்து கொள்ளும் போது அவர்களுடைய தினசரி வாழ்க்கையிலேயே பலவிதமான சிக்கல்களை எதிர் கொள்வார்கள். கணவன் மனைவி இருவரும் பேசிக் கொள்வதிலேயே ஏதேனும் சர்ச்சைகள் ஏற்படும். அன்றாட வாழ்வை சாதாரணமாக எதிர்கொள்வது சவாலாக இருக்கும். இதனால் தான் தினப் பொருத்தம் என்று கூறப்படும் நட்சத்திரப் பொருத்தம் அவசியம். ஆனால் நட்சத்திரம்  சரியாக பொருந்தவில்லை என்பதால் மணமகன் மணப்பெண்ணுக்கு திருமணப் பொருத்தம் இல்லை என்று முடிவு செய்து விடகூடாது. நட்சத்திரம் பொருந்தவில்லை என்றால் கூட, வேறு சிலர் அம்சங்கள் பொருந்தி வந்தால், தாராளமாக திருமணம் செய்யலாம்.

2) கணப் பொருத்தம்:

ஒரு தம்பதியின் மனநிலை மற்றும் இயல்புத்தன்மை எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது என்பதை கணிப்பது தான் கணப்பொருத்தம். இந்த பொருத்தம், மணமகன் மற்றும் மணப்பெண்ணின் அடிப்படை குணங்கள், தன்மைகளை புரிந்து கொள்ளவும், இணக்கமான உறவை வளர்க்கவும் முடியுமா என்பதை கண்டறிய உதவும்.

கணங்கள் மூன்று வகைப்படும்:

இவை தேவ கணம், மனுஷ்ய கணம் மற்றும் ராட்சச கணம். 27 நட்சத்திரங்களில் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு கணத்தை சேரும். ஒரே கணத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் திருமணம் செய்து கொள்வது, மனநிலை, குணம் மற்றும் ஆளுமைத்திறன் ஆகியவற்றில் இணக்கத்தை ஏற்படுத்தும். உதாரணமாக தேவ கணத்தைச் சேர்ந்த இருவர் அதிக இணக்கத்துடன் வாழ்வார்கள் என்றும் இயற்கையாகவே ஆன்மிகப் பற்றி அதிகம் என்பதும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்மாறாக ஆண் மற்றும் பெண்ணின் கணங்கள் வெவ்வேறாக இருக்கும் பொழுது அவர்களுடைய பொருத்தம் மாறுபடும். நிறைவான திருமண வாழ்க்கையில் இருவரும் மனமொத்து வாழ்வது, புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வது உள்ளிட்டவை அடங்கும். இவற்றை ஆண் மற்றும் பெண் எந்த கணத்தைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, ராட்சச கணத்தை சேர்ந்த ஆணோ பெண்ணோ மனித கணத்தை சேர்ந்தவருடன் இணக்கமாக வாழ இயலாது.

3) மகேந்திர பொருத்தம்:

இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டால் மகிழ்ச்சியாக செல்வ செழிப்புடன் வாழ்வார்கள் என்பதை குறிப்பது தான் இந்தப் பொருத்தம். மகேந்திரம் என்பது மிகச்சிறந்த அல்லது செழிப்பு என்பதை குறிக்கும். வாழ்க்கை நிறைய செல்வத்துடனும், அழகான அறிவான குழந்தைகள், மட்டுமல்லாமல் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும் தம்பதிகள், நிறைவாக அளவில்லா மகிழ்ச்சியுடன் வாழ முடியுமா என்பதை மகேந்திர பொருத்தம் முடிவு செய்யும்.
ஆண் பெண் இருவருக்கும் திருமணப்பொருத்தம் பார்க்கும் பொழுது அவர்களுக்கு இடையே மகேந்திர பொருத்தம் இருந்தால் மேலே கூறியிருப்பது போல மகிழ்ச்சி, வளம், செல்வம் குழந்தைகள் அனைத்து வளங்களுடன் வாழ முடியும். தம்பதிகளின் ஆசைகளும், கனவுகளும் நிறைவேற மனமொத்த, உதாரண தம்பதிகளாக வாழ்ந்து, பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஏற்றத்தையும் காண முடியும்.

மகேந்திர பொருத்தம் என்பது திருமணத்துக்கு பிந்தைய வாழ்க்கையை, பொருளாதார ரீதியாக எவ்வளவு சுபிட்சமாக இருக்கிறது என்பதை குறிப்பிடும் அதே நேரத்தில், பணம் சார்ந்த நிலைத்தன்மையை மட்டுமே கருத்தில் கொள்ளக்கூடாது. இதைக் கடந்து உணர்வு பூர்வமாக இருவரும் இணக்கத்துடன் இருக்கிறார்களா, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கிறார்களா, மரியாதை செலுத்துகிறார்களா என்பதும் முக்கியம். இந்த அனைத்தும் சேர்ந்து தான், ஆண் பெண்ணுக்கு இடையே பொருத்தம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து, திருமனத்தை நிச்சயம் செய்வது சாதகமான மகேந்திர பொருத்தத்தைக் குறிக்கிறது.

4) ஸ்திரீ தீர்கப் பொருத்தம்:

திருமணப் பொருத்தத்தில் இது மிகவும் முக்கியமான அம்சமாகும். இது கணவன்/மனைவியின் ஆயுட்காலதடைக் குறிக்கும். வாழ்க்கைத்துணையின் நலமும், ஆரோக்கியமும் மிகவும் முக்கியம் என்பதால், இந்தப் பொருத்தம் மிக மிக ஆழமான கலாச்சார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

இந்த அம்சத்தில், மணமகளின் நீண்ட ஆயுளுடன் பொருந்தக்கூடிய தன்மை இருக்கிறதா என்று மணமகனுடன் ஒப்பிடப்படுகிறது. துணையின் ஆரோக்கியம், நீண்ட ஆயுள் மற்றும் நீண்ட கால திருமண வாழ்க்கையுடன், நல்வாழ்வை உறுதிசெய்து, தம்பதியினரின் வாழ்க்கை இணக்கமாக அமையும் என்பதை சாதகமான ஸ்திரீ தீர்கப் பொருத்தம் குறிக்கிறது.

கணவன் மனைவிக்குள் இணக்கத்தைக் குறிக்கும், கணவனின் பாதுகாவலராகவும், மனைவிக்கு தேவையானதை வழங்குபவராகவும் இருக்கும் பாரம்பரியமான அம்சங்களையும் பிரதிபலிக்கிறது. இணக்கமாக திருமண பந்தத்தில் இணைவது என்பது மனைவியின் மகிழ்ச்சிக்கும், நீண்ட ஆயுளுக்கும் பங்களிக்கிறது என்ற நம்பிக்கையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

5) யோனி பொருத்தம்:

யோனி பொருத்தம் என்பது பாரம்பரிய தமிழ் திருமண பொருத்த முறையின் மிக முக்கிய அம்சமாகும், இது திருமண உறவின் மிகவும் இன்றியமையாத, தம்பதிகளுக்கிடையே உள்ள தாம்பத்திய இணக்கத்தன்மையை மையமாகக் கொண்டது. ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கும் நல்லிணக்கத்திற்கும் மணவாழ்வில் நிறைவான தாம்பத்திய வாழ்க்கை இன்றியமையாதது.
“யோனி” என்ற சொல் ஒரு நபரின் பாலியல் இயல்பு அல்லது பண்புகளைக் குறிக்கிறது. இந்தப் பொருத்தத்தின் அடிப்படையில், தனிநபர்கள் பல்வேறு விலங்கு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர், ஒவ்வொரு விளங்கும் வெவ்வேறு பாலியல் பண்புகளைக் கிறுக்கும். தம்பதிகளுக்குள் சாதகமான யோனி பொருத்தம் என்பது தம்பதியரின் நிறைவான தாம்பத்திய வாழ்வை குறிக்கும். அதாவது, இருவரின் பாலியல் ஆற்றல் ஒத்திசைந்து, உடல் ரீதியான திருப்தி மற்றும் உணர்ச்சி ரீதியான பிணைப்பை மேம்படுத்துவதைக் குறிக்கிறது.

யோனிப் பொருத்தம் பாலியல் ரீதியாக பொருந்தக்கூடிய தன்மையை எடுத்துக்காட்டினாலும், நிறைவான தாம்பத்திய வாழ்க்கை அவசியம் என்றாலும், வெற்றிகரமான திருமணத்துக்கு இதை மட்டுமே தீர்மானமாக எடுக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்வது அவசியம். உணர்வுகளின் தொடர்பு, உடல் ரீதியான நெருக்கம், பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் ஆகியவை திருமண உறவின் ஒட்டுமொத்த திருப்தி மற்றும் நல்லிணக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

6) ராசிப் பொருத்தம்:

ராசிப் பொருத்தம் என்னவென்று பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். மணமகன் மற்றும் மணமகளின் சந்திரன் அமர்ந்திருக்கும் ராசிகளின் அடிப்படையில் இருவருக்கும் பொருந்தக்கூடிய தன்மையை மதிப்பிடுகிறது. சந்திரன் இருக்கும் வீடு, அல்லது ராசி, ஒரு தனிநபரின் உணர்ச்சி, உணர்வுகள் மற்றும் உளவியல் தன்மையை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படுகிறது. இருவரின் ராசிகளும் பொருந்தினால், அதில் இணக்கத்தன்மை, தம்பதியினரிடையே உள்ள உணர்ச்சி ரீதியான பொருத்தம் சாதகமாக இருப்பதைக் குறிக்கிறது. ஒருவருக்கொருவர் உணர்வுகள் மற்றும் மனநிலைகள் பற்றிய ஆழமான புரிதலை வளர்க்கும்.

ஒரு இணக்கமான ராசிப் பொருத்தம் பெரும்பாலும் மென்மையான உணர்வு ரீதியான தொடர்பு மற்றும் பரஸ்பர அன்புக்கு வழிவகுக்கிறது. திருமணங்களில் இணக்கத்தன்மையின் முக்கிய அங்கமாக உணர்ச்சி ரீதியிலான புரிதல் எவ்வளவு முக்கியம் என்பதை இது வலியுறுத்துகிறது.

7) ரஜ்ஜுப் பொருத்தம்:

ரஜ்ஜுப் பொருத்தம் என்பது தம்பதிகளின் நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளைப் பற்றிய ஆழமான பொருத்தத்தைக் குறிக்கிறது. தமிழ் கலாச்சாரத்தில், ரஜ்ஜு என்ற அம்சன், தம்பதிகளின் நலனில் சமூகத்தின் அக்கறையை பிரதிபலிக்கிறது. ரஜ்ஜு பொருத்தம் இல்லாமல் திருமணமே செய்யக்கூடாது என்பது ஆணிததரமாகக் கூறப்படுகிறது.

இந்த பொருத்தத்தில் ஐந்து வெவ்வேறு “ரஜ்ஜுகள்” உள்ளன என வகைப்படுத்தப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் பல்வேறு உடல் உறுப்புகளுடன் தொடர்புடையது. ஒரு சாதகமான ரஜ்ஜு பொருத்தத்தின் அடையாளமாக, முக்கிய உடல் உறுப்புகள் எதுவும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்கிறது, இதன் மூலம் தம்பதியரின் உடல் நலம், ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்கு உறுதியளிக்கிறது. அதாவது ஆணும் பெண்ணும் திருமண பந்தத்தில் இணைந்து நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வார்கள் என்ற ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக செயல்படுகிறது. மணமகள் அல்லது மணமகன் இருவரும் ஒன்றாக வாழும் போது அவர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது.

ரஜ்ஜு பொருத்தம் ஒரு பாரம்பரிய வழிகாட்டியாக இருந்தாலும், நவீன உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை தேர்வுகள் தம்பதியரின் நல்வாழ்வையும் நீண்ட ஆயுளையும் கணிசமாக பாதிக்கிறது என்பதையும் அங்கீகரிப்பது முக்கியம். இறுதியில், ஒரு இணக்கமான திருமணம் பாரம்பரியத்தின் முக்கியத்துவம் மற்றும் நவீன நல்வாழ்வு நடைமுறைகளுக்கான அர்ப்பணிப்பு இரண்டையும் உள்ளடக்கியது.

8) வசியப் பொருத்தம்:

வசியப் பொருத்தம் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆண் மற்றும் பெண்ணுக்கிடையே பரஸ்பர ஈர்ப்பு, நேசம் மற்றும் அன்பை மதிப்பிடுவதில் கவனம் செலுத்துகிறது. தமிழ்ப் பண்பாட்டின் சூழலில், தம்பதியினரிடையே உள்ள பிணைப்பு மிகவும் உயர்வாகக் கருதப்படும் நிலையில், வசியப் பொருத்தம் மிகுந்த முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.

இந்த பொருத்தம், ஒவ்வொரு நபருடைய ராசியின் அடிப்படையில் பல்வேறு வகைகளாக வகைப்படுத்துகிறது. வசியப் பொருத்தம் இல்லையென்றால், ஒருவர் மீது மற்றொருவருக்கு ஈர்ப்பு இருக்காது. இது ஒருவர மற்றவர் மீது கொண்டிருக்கும் செல்வாக்கின் அளவைக் குறிக்கிறது. ஒரு சாதகமான வசியப் பொருதம் தம்பதியினரிடையே இயல்பான மற்றும் உறுதியான ஈர்ப்பைக் குறிக்கிறது. தம்பதிகளில் ஒருவரின் குணாதிசயங்கள், அவர்களின் சந்திரன் இருக்கும் ராசியால் குறிப்பிடப்படுகின்றன, மற்றவரின் குணாதிசயங்களை பூர்த்திசெய்து மேம்படுத்துகிறது, இது இணக்கமான மற்றும் அன்பான உறவுக்கு வழிவகுக்கும்.
தமிழ் பாரம்பரியத்தில் நிறைவான தாம்பத்திய உறவு மற்றும் மகிழ்ச்சியான திருமணத்தின் முக்கிய அங்கமான, தம்பதிகளுக்கு இடையே ஆழமான மற்றும் அன்புள்ள தொடர்பை வளர்ப்பதை ஊக்குவிக்கும் ஒரு வழிகாட்டும் கொள்கையாக வசியப் பொருத்தம் செயல்படுகிறது.

9) வேதைப் பொருத்தம்:

திருமண உறவில் ஏற்படக்கூடிய மோதல்கள் மற்றும் தடைகளை மதிப்பிடுவதில் வேதைப் பொருத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ் கலாச்சாரத்தில், வேதைப் பொருத்தம் தம்பதியினரின் சுமூகமான தன்மை மற்றும் மோதல்கள் இல்லாத வாழ்வை உறுதி செய்வதற்கான தடுப்பு நடவடிக்கையாக செயல்படுகிறது.

மணமகன் மற்றும் மணமகனின் நட்சத்திரங்கள் அல்லது பிறந்த நட்சத்திரங்களின் பொருந்தக்கூடிய தன்மையை இந்த பொருத்தம் ஆராய்கிறது. வேதைப் பொருத்தம் பொருந்தக்கூடிய தன்மையில் இருக்கும் போது, வெளிப்புற தாக்கங்கள் அல்லது எதிர்மறை ஆற்றல்கள் திருமணத்தின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வாய்ப்புகள் குறைவு என்று கூறுகிறது. இதற்கு நேர்மாறாக, சாதகமற்ற வேதைப் பொருத்தம் உறவை பாதிக்கக்கூடிய சாத்தியமான சவால்கள் அல்லது தடைகளை முன்னிலைப்படுத்தலாம்.

வேதைப் பொருத்தம் ஒரு பாரம்பரிய வழிகாட்டியாக செயல்படுகிறது. தம்பதிகலுக்குள் ஏற்படும் தடைகள், சச்சரவுகள் குறித்து விழிப்புடன் இருக்கவும், அவற்றை அனுசரித்து செல்லவும் ஊக்குவிக்கிறது.

10) ராசியாதிபதிப் பொருத்தம்:

தமிழ் திருமணப் பொருத்த முறையின் ஒருங்கிணைந்த அங்கமான ராசியாதிபதிப் பொருத்தம், மணமகன் மற்றும் மணமகளின் சந்திரன் இருக்கும் ராசிகளின் (ராசிகள்) அதிபதியை, அதாவது கிரகங்களின் பொருந்தக்கூடிய தன்மையை வலியுறுத்துகிறது. இந்த பொருத்தம் என்பது கிரகங்களின் தாக்கத்தில் இணக்கமான சீரமைப்பைக் குறிக்கிறது. இது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு பங்களிக்கிறது.

சந்திரன் அமர்ந்துள்ள ராசியின் அதிபதி, அல்லது ராசியாதிபதி, ராசியை ஆளும் கிரகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார், இது ஆளுமை மற்றும் விதி உட்பட அவர்களின் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பாதிக்கும் என்று நம்பப்படுகிறது. ராசியாதிபதி பொருத்தத்தில் ராசியின் அதிபதிகள் அனுகூலமாக இணைந்தால், தம்பதியரின் கிரக தாக்கங்கள் ஒத்திசைவாக இருப்பதைக் குறிக்கிறது, இது ஒரு நேர்மறையான தொடர்பை உருவாக்குகிறது.

இறுதியாக, திருமணத்துக்கு பார்க்கும் இந்த 10 பொருத்தம் அமைப்பு என்பது தமிழ் கலாச்சாரத்தில் காலத்தால் மதிக்கப்படும் மற்றும் ஆழமாக வேரூன்றிய பாரம்பரியமாக உள்ளது. இது திருமணம் செய்து கொள்ளப்போகும் ஜோடிகளுக்கான பொருத்தம் இருக்கிறதா இல்லையா என்று பார்க்கவும், முடிவு எடுக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒரு விரிவான ஆய்வு அமைப்பாக செயல்படுகிறது. ஜோதிட ரீதியான தாக்கங்கள் முதல் உணர்வு, குணங்கள் மற்றும் உடல் நலம் வரை பொருந்தக்கூடிய பல்வேறு அம்சங்களை துல்லியமாக மதிப்பிடுகிறது.

இந்தப் பொருத்தங்கள் தேவையான வழிகாட்டுதலை வழங்குவதோடு, இணக்கமான திருமண உறவை உறுதிப்படுத்தும் திறனுக்காகப் போற்றப்படுகின்றன, ஆனால் வெற்றிகரமான திருமணத்தின் அடித்தளம் இந்த பாரம்பரிய அளவுகோல்களுக்கு அப்பால் நீண்டுள்ளது என்பதை ஒப்புக்கொள்வதும் அவசியம். திருமண உறவு இணக்கத்திற்கான களத்தை இந்தப் பொருத்தம் அமைத்தாலும், நீடித்த மற்றும் மகிழ்ச்சியான கூட்டாண்மைக்கான திறவுகோல், தம்பதிகள் உறவை வளர்க்கும் திறனில் உள்ளது.

இந்த 10 பொருத்த அமைப்பு ஒரு பாரம்பரிய நீட்சியாக செயல்படுகிறது. இது தம்பதிகளை மகிழ்ச்சியாக வாழ்வதன் தொடக்கத்தை நோக்கி வழிநடத்துகிறது. எவ்வாறாயினும், உணர்ச்சிபூர்வமான தொடர்பு மற்றும் பரஸ்பர வளர்ச்சிக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்புதான் மகிழ்ச்சியான திருமணத்தை உண்மையிலேயே வரையறுக்கிறது. இந்த புனிதப் பயணத்தை மேற்கொள்பவர்களின் வாழ்க்கையை வளமாக்குகிறது.

Tags: தமிழர்கள்திருமண முறை
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியாவின் உரை.!

அடுத்த செய்தி

தியானத்தின் நன்மைகளும் பயன்களும்.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

தியானத்தின் நன்மைகளும் பயன்களும்.!

தியானத்தின் நன்மைகளும் பயன்களும்.!
by Stills
13/06/2025
0

அதிகாலை, 3.00 (3.20_3.40 ரிஷிமுகூர்த்தம் ) முதல், 6:00 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் தியானம் செய்யும் போது  அதிக பலன்கிடைக்கும். தியானம் என்பது ஆன்மாவை எல்லையற்ற பரம்பொருளுடன்...

மேலும்...

இறைவனிடத்தில் அடைக்கலம் வேண்டி பாடப்பட்டது, அடைக்கலப்பத்து – திருவாசகம்

இறைவனிடத்தில் அடைக்கலம் வேண்டி பாடப்பட்டது, அடைக்கலப்பத்து – திருவாசகம்
by Stills
12/02/2025
0

நீங்களும் பயன் பெறுங்கள்: உங்கள் துன்பத்தில்இருந்துவிடுபட இப்பதிகத்தை தினமும் பாராயணம் செய்வதால் துன்பம் விலகும் என்றும் திருப்பெருந்துறையில்  மாணிக்கவாசகர் அருளியது அடைக்கலம் என்பது, அடைக்கலமாக ஒப்புவித்துத் தமக்கெனச்...

மேலும்...

விஞ்ஞானமும், குபேர முத்திரையும், அதன் நன்மைகளும்.!

விஞ்ஞானமும், குபேர முத்திரையும், அதன் நன்மைகளும்.!
by Stills
12/02/2025
0

குபேரன் திசை வடக்கு. செல்வத்தின் அதிபதி,  நமது உடலில் வடக்கு திசை சிரசைக் குறிக்கும். எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம். இறைவன்  குடியிருக்கும் இடம் சிரசு. குபேர...

மேலும்...

2023 இன்று பெயர்ச்சியாகும் சனி  ஏழரை யாருக்கு என்ன நடக்க உள்ளது.!

2023 இன்று பெயர்ச்சியாகும்  சனி  ஏழரை யாருக்கு என்ன  நடக்க உள்ளது.!
by Stills
20/12/2023
0

சனி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஏழரை சனி, 12 ராசிகளுக்கு என்ன சனி நடக்கப் போகிறது கும்பத்தில் சனி பகவான் பெயர்ச்சி ஆகக்கூடிய நிலையில் மகரம், கும்பம்,...

மேலும்...

பணப்பெட்டி, பீரோ, குபேரர், வைக்கும் திசை.!

பணப்பெட்டி, பீரோ, குபேரர், வைக்கும் திசை.!
by Stills
20/11/2023
0

கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருங்க அமையப்பெற்றவர்தான் சாதனையாளராக உயர முடியும் என்பது நிச்சயம். பணமே வாழ்க்கையாகிவிடுவதில்லை. ஆனால், பணம் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை. கொஞ்சம்...

மேலும்...

உச்சநீதிமன்றம் தீர்ப்பு : சுப்பிரமணியம் குருக்கள் மனு தள்ளுபடி.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு : சுப்பிரமணியம் குருக்கள் மனு தள்ளுபடி.
by Stills
22/08/2023
0

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்காக கடந்த 2018ம் ஆண்டு விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி உத்தரவினை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவினை எதிர்த்து சுகவனேஸ்வரர் கோயிலில்...

மேலும்...
அடுத்த செய்தி
தியானத்தின் நன்மைகளும் பயன்களும்.!

தியானத்தின் நன்மைகளும் பயன்களும்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
ஜனாதிபதி அநுர ஜேர்மன் வணிகமன்றத்துக்குத் தலைமை தாங்கினார்.!

ஜனாதிபதி அநுர ஜேர்மன் வணிகமன்றத்துக்குத் தலைமை தாங்கினார்.!

14/06/2025
பிரதி அமைச்சர் ரத்ன கமகே  நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு.

பிரதி அமைச்சர் ரத்ன கமகே நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு.

14/06/2025
”சிவப்பு நிற லேபல்”உடன் வந்தது விடுதலைப்புலிகள் பிரபாகரனின் ஆயுதமா?

”சிவப்பு நிற லேபல்”உடன் வந்தது விடுதலைப்புலிகள் பிரபாகரனின் ஆயுதமா?

14/06/2025
முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

13/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.