Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இந்தியா

டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால்பணி நீக்கம்: அரசு எச்சரிக்கை.

Stills by Stills
19/07/2023
in இந்தியா
0
டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால்பணி நீக்கம்: அரசு எச்சரிக்கை.
0
SHARES
6
VIEWS
ShareTweetShareShareShareShare

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட கூடுதல் பணம் வசூலிக்கும் ஊழியர்களை உடனே சஸ்பெண்ட் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கும் சுற்றறிக்கை பறந்துள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை விற்பனை கடைகள் வாயிலாக மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. பாட்டிலுக்கு எம்.ஆர்.பி விலையை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளது. குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10, ஆஃப் பாட்டிலுக்கு ரூ.20, ஃபுல் பாட்டிலுக்கு ரூ.40 கூடுதலாக வசூகிக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மது பாட்டில்கள் பத்து ரூபாய் கூடுதலாக விற்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் அடிக்கடி பரவி வருகிறது. எனினும், டாஸ்மாக் நிர்வாகம் கண்டும் காணாமல் இருந்து வந்தது. இது தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளாக இருந்து வருகிறது.

மதுவிலக்குத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியிடம் இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட போதிலும், பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அடுத்து மதுவிலக்குத் துறைக்கு அமைச்சராக முத்துசாமி நியமிக்கப்பட்டார். இதையடுத்து, டாஸ்மாக் கடைகளில் யாரும் 10 ரூபாய் அதிகமாக கேட்கக்கூடாது என அவர் உத்தரவிட்டார். நிலைமை மாறவில்லை: எனினும், பாட்டிலுக்கு பத்து ரூபாய் எக்ஸ்ட்ரா என்ற வழக்கம் இன்னும் மாறவில்லை. அண்மையில் செங்கல்பட்டு பகுதியில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்குபவர்களை போலீசார் ஒன்றும் கேட்கமாட்டார்கள் என வாடிக்கையாளர் ஒருவர் பேசியதற்கு ஏ எஸ் ஐ ஒருவர் அவரை அடித்து விரட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளரிடம் செய்தியாளர் ஒருவர் பத்து ரூபாய் அதிகமாக விற்கப்படுவது பற்றி கேள்வி எழுப்பினார். அப்போது விற்பனையாளர் முருகன் பாட்டில் உடைவது, இறக்குவதற்கு கூலி போன்றவற்றிற்கு யார் காசு கொடுப்பது எனக் கூறி செய்தியாளரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டாஸ்மாக் கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்டதற்காக காவல்துறையினர் தாக்குவதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். மேலும் மது குடிப்பதற்கு பாதுகாப்பு கொடுத்த தமிழ்நாடு அரசு தற்போது மதுபான விலையை கள்ளத்தனமாக உயர்த்தி விற்பனை செய்யப்படுவது தொடர்பாக புகார் தெரிவித்தவரை காவல்துறையை கொண்டு தாக்குவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்கும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருப்பதால், துறை அதிகாரிகளுக்கும், மேலிடத்திற்கும் கமிஷன் செல்வதாகவும் அரசியல் கட்சிகள் பலவும் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு, டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் அனுப்பிய சுற்றறிக்கையில், மதுக்கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 10 ரூபாய் மற்றும் அதற்கும் மேல் விற்பனை செய்கின்ற கடை ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிக பணி நீக்கம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் விதி மீறல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தவறுகளுக்கு தாங்களும் பொறுப்பேற்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: எம்.ஆர்.பி விலைதங்கம் தென்னரசுசெந்தில் பாலாஜிபுகார். குவார்ட்டர்கட்டணக் கொள்ளைமதுவிலக்குத் துறை10 ரூபாய்காவல்துறைவிசாகன்டாஸ்மாக் மேலாண் இயக்குனர்கடை ஊழியர்கள்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

இந்திய அரசியல் வரலாற்றில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு.-எடப்பாடி பழனிசாமி

அடுத்த செய்தி

பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தம் – முற்றாக நிராகரித்தது தமிழ்தேசிய கூட்டமைப்பு

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

படையாண்டமாவீரா’ திரைப்படத்தின்இசைவெளியீட்டுவிழா

by அரவிந்த்
01/06/2025
0

வ. கெளதமன் இயக்கி நடிக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் இனிதே நடைபெற்றது. "வன்னிக்காடு" படைப்பாக்குவதே தனது...

மேலும்...

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?
by Stills
19/05/2025
0

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். டிராவல் யூ டியூபர் என்ற பெயரில் நாடு முழுக்க பல இடங்களுக்கு பயணித்த...

மேலும்...

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

by அரவிந்த்
09/05/2025
0

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்!. _ வ. கௌதமன்...

மேலும்...

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

by அரவிந்த்
16/04/2025
0

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்க! இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஜாட் திரைப்படம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தாயக விடுதலைக்காகப் போராடியவிடுதலைப் போராளிகளை...

மேலும்...

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
by Stills
11/03/2025
0

 மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர்,...

மேலும்...

மூன்று இடத்தில் பேச்சு நடத்தும் காளியம்மா

by அரவிந்த்
26/02/2025
0

நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த காளியம்மாள் சீமான் உடனான கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். விலகிய அவர் எந்த கட்சியில்...

மேலும்...
அடுத்த செய்தி
பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தம் – முற்றாக நிராகரித்தது தமிழ்தேசிய கூட்டமைப்பு

பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தம் - முற்றாக நிராகரித்தது தமிழ்தேசிய கூட்டமைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
ஜனாதிபதி அநுர ஜேர்மன் வணிகமன்றத்துக்குத் தலைமை தாங்கினார்.!

ஜனாதிபதி அநுர ஜேர்மன் வணிகமன்றத்துக்குத் தலைமை தாங்கினார்.!

14/06/2025
பிரதி அமைச்சர் ரத்ன கமகே  நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு.

பிரதி அமைச்சர் ரத்ன கமகே நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு.

14/06/2025
”சிவப்பு நிற லேபல்”உடன் வந்தது விடுதலைப்புலிகள் பிரபாகரனின் ஆயுதமா?

”சிவப்பு நிற லேபல்”உடன் வந்தது விடுதலைப்புலிகள் பிரபாகரனின் ஆயுதமா?

14/06/2025
முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

13/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.