Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு ஆன்மீகம்

தியானத்தின் நன்மைகளும் பயன்களும்.!

Stills by Stills
13/06/2025
in ஆன்மீகம்
0
தியானத்தின் நன்மைகளும் பயன்களும்.!
0
SHARES
7
VIEWS
ShareTweetShareShareShareShare
அதிகாலை, 3.00 (3.20_3.40 ரிஷிமுகூர்த்தம் ) முதல், 6:00 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் தியானம் செய்யும் போது  அதிக பலன்கிடைக்கும்.
தியானம் என்பது ஆன்மாவை எல்லையற்ற பரம்பொருளுடன் அல்லது இறைவனுடன் ஐக்கியமாக்கும் அறிவியல் ஆகும்.
மனிதஉடல் பஞ்சபூதங்களால் ஆனது. தியானம் உடலை,ஒழுக்கத்தை,மனஅமைதியை, உருவாக்கும் கலையாகும்.மன அமைதி பெற மனதை ஒரு நிலைப்படுத்தி செய்யப்படும் ஒரு பயிற்சி தியானம் ஆகும்.
தியானத்துக்கு வயது ஒரு எல்லை இல்லை. குழந்தைகள் துவங்கி பெரியவர்கள் வரை யார் வேண்டுமானலும் மன ஒரு நிலைப்பட தியானம் செய்யலாம்.வழக்கமாகவும் ஆழமாகவும் தியானம் செய்வதன் மூலம், உங்கள் ஆன்மாவை உங்களுடைய இருப்பின் அக ஆழ மையத்தில் உள்ள அமரத்துவ, பேரின்பமய தெய்வீக உணர்வுநிலையை நீங்கள் விழித்தெழச் செய்வீர்கள்.
யோகத் தியானம் நமது ஆன்மாவின் எல்லையற்ற செயல்திறனைத் திறக்கும். நெடுங்கால மாக நிரூபிக்கப்பட்ட வழியாகும். ஒரு தெளிவற்ற மனதளவில் எண்ணும் அல்லது தத்துவார்த்தமாகச் சிந்திக்கும் செயல்முறையல்ல. அது வாழ்க்கையின் கவனச் சிதறல்களிலிருந்து கவனத்தை விடுவிக்கும் நேரடியான வழியாகும்.
நமது மெய்யான பெரும் சுயத்தை நாம் அற்புதமான தெய்வீக இருப்பாக மெய்யாகவே இருப்பதை அறிவதிலிருந்து நம்மைத்தடுக்கும் கொந்தளிக்கின்ற மற்றும் அமைதியற்ற எண்ணங்களை அமைதிப்படுத்துகிறது.
தியான ஒழுக்கத்தின் வாயிலாக, நாம் அகத்தே ஒருமுகப்படக் கற்றுக் கொள்கிறோம்  அதன் மூலம் நமது அசைக்க முடியாத அமைதி, ஆனந்தம் ஆகியவற்றின் மையத்தைக்கண்டுபிடிக்கிறோம்.
நீங்கள் தியானத்தில் முன்னேறும் போது, படிப்படியாக நீங்கள் ஆன்மாவிலிருந்து பெருகும் அக அமைதியையும் ஆனந்தத்தையும் அனுபவிக்கிறீர்கள். மிக உயர்ந்த நிலைகளில், உங்களுடைய ஆன்மா இறைவனுடனான முழுமையான ஐக்கியத்தை உணர்ந்தறிகிறது. இதுதான் தியானத்தின் இலக்கு பரவசமான, உயர்உணர்வான, பேரின்பமிகு தெய்வீகத் தன்மையை சமாதி என்றழைக்கப்படுகிறது.
தியானத்தின் மிக உயர்ந்த உத்திகளைக் கற்றுப் பயன்பெற விரும்பும் எவரும் இதை விலைமதிப்பற்ற ஆதாரமாகவும் வாழ்நாள் முழுவதற்குமான துணையாகவும் இருக்கக் காண்பார்.

வெளியுடலை சுத்தம் செய்ய தினமும் குளிப்பது போல், உள் உறுப்புகளை செம்மைப்படுத்த தினமும் தியானம் செய்து சுத்திகரித்துக்கொள்ள வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல், நேர்மறை எண்ணங்களை வளர்க்க வேண்டும்.

சுய ஒழுக்கமுடன் வாழ மனதை ஒருமுகப்படுத்த வேண்டும் மூச்சுப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்  அதன் பின்பே தியானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு படிநிலை பயிற்சிகளையும் சரிவரக் கற்று தியானம் செய்யும் போது, உடல் முழுமையான புத்துணர்ச்சி பெறும்.

பள்ளி குழந்தைகளுக்கு துவக்கத்தில் இருந்து மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி அளித்தால், உயர்கல்வி தேர்வுக்கு கவனம் சிதறாமல் படிக்க முடியும் சிறந்த முறையில் தேர்வு எழுதுவர்.குழந்தைகளும் தியானம் செய்யலாம். இதன்மூலம், கற்றல் திறனும், ஞாபக சக்தியும் மேம்படும். கோபம் குறைந்து, மனதில் குவிப்புத்திறன் அதிகரிக்கும்.  ஐந்து விரல் முத்திரைகளை கற்றுத்தந்து பயிற்சி தரும் போது, உடல் நலம் பெறுகிறது.  புதிய சக்தி பிறக்கும். தியானம் செய்வதால் மனதில், எதிர்மறை எண்ணங்கள் தோன்றாது.

‘ஓம்காரம்’ சொல்லும் போது, கார்பன்டை ஆக்சைடு வெளியேறி, ஆக்சிஜன் கிடைக்கிறது

நீங்கள் தனிமையிலும் இடையூறு இல்லாமலும் தியானம்  செய்வதற்கேற்ற ஓர் அரவமற்ற, அமைதியான இடத்தைக் கண்டுபிடியுங்கள். தொடக்கத்தில் சில நிமிடங்கள் தினசரி தியானிக்க முடிந்தால் அதுவே சிறந்தது, சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் தியானிக்கலாம். ஒரு மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேதனையாக தியானிப்பதை விட இடைவெளி விட்டு பயிற்சி செய்வதே சிறப்பு. மனதின் சில நிலைகளை உருவாக்க அதுவே பழக்கமாகும் வரை திரும்பத் திரும்ப செய்கிறோம். உடல் அளவில் தியானம் என்பது புதிய நரம்பியல் பாதைகளை கட்டமைப்பதாகக் காட்டுகிறது.
தினமும் வெறும் ஐந்து நிமிடங்கள் தியானம் செய்வது உங்கள் மனம், உடல் மற்றும் ஆன்மாவை ஒத்திசைத்து, உங்கள் உள் மனதுடன் ஆழமான தொடர்பை மனதை ஒருமுகப்படுத்த தெரியாததாலேயே, இன்றைய இளைய தலைமுறையினர் பலர் தவறான பாதைகளுக்கு சென்றுவிடுகின்றனர். பள்ளி பாடத்தில் தியானம் இடம்பெறாமல் போய்விட்டதும் துரதிர்ஷ்டவசமானதுதான். யோகா, தியான பயிற்சிகள் அளித்து, சிறந்த இளைய தலைமுறையினரை உருவாக்கவேண்டும்.

தியானம், வாழ்வின் லட்சியத்தை உணர வைக்கிறது. மன அமைதி மற்றும் மகிழ்ச்சியை தருகிறது. பிரச்னைகளை எதிர்கொள்ள முடிகிறது. பயம், வெறுப்பு, பதட்டம், மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து விடுதலை அளிக்கிறது. ஆக்கபூர்வமான சிந்தனைகள் மற்றும் செயல் திறன் வளரும். மனரீதியான நோய்களை நீக்கி முழுமையான ஆரோக்கியம் பெறலாம். மனிதர்களாகிய நாம் மகான் ஆத்மாவாக உயர்வு பெற தியானம் உதவுகிறது.

குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் உடற்பயிற்சி,மூச்சு பயிற்சி, தியானம்,  கற்பிக்கப்பட வேண்டும். குழந்தைகள், மொபைல் போன் மற்றும் ‘டிவி’யை அதிகம் பார்க்காமல், படிப்பில் கவனம் செலுத்தும் வகையிலான பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மனதை ஒரு நிலைப்படுத்தும், மருத்துவ பலன் அளிக்கும் ‘வாழும் கலை’ யோகா பயிற்சி அளிக்கப்பட வேண்டும். பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கென, தனித்தனி பயிற்சிகள் உள்ளன. உடல் மற்றும் மனதளவில் மாற்றம் ஏற்படுவதை அனைவரும் உணர முடியும்.

தியானம், ஆசனம், பிராணயாமம் ஆகியவை இணைந்ததே யோகா. எவ்வளவு பணிப்பளு இருந்தாலும், தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்தாலே போதும். பல்வேறு சோதனைகளை கடந்துவிடலாம். தியானம் செய்வதன் மூலம் மனதின் குவிப்பு தன்மை அதிகரிக்கும். ஞாபக மறதி இருந்தாலும் மாறி, ஞாபக சக்தி அதிகரிக்கும். தேவையில்லாத பயம், பதட்டம் இருக்காது. முக்கியமாக, ‘நான் யார்’ என்பது போல், தன்னை உணர்தல் வாயிலாக, தெளிவு கிடைக்கும். மனம் செம்மையாவதுடன், உடலும் ஆரோக்கியமாகும்.

உலகின் பெரும்பாலானோர் நடைமுறைக்கேற்ப மதிப்பைப் புரிந்துகொண்டு அதன் பயனுள்ள விளைவுகளை அனுபவித்தார்கள் என்றால்,தியானத்தின் இறுதி நோக்கம் இறைவனைப் பற்றிய உணர்வுப்பூர்வமான விழிப்புணர்வையும் அவனுடனான ஆன்மாவின் நிலைபேறுடைய ஐக்கியத்தையும் அடைவதாகும்.
மனிதத் திறன்களை மாபெரும் படைப்பாளியின் சர்வவியாபகத்துடனும் சர்வவல்லமையுடனும் இணைத்துப் பயன்படுத்துவதைவிட அதிகமான செயல்நோக்கமும் பயனும் கொண்டதாக இருக்கும் சாதனையாக எது இருக்கமுடியும்.
தியானம் ஒருமுகப்பாட்டை அதன் மிக உயர்ந்த வடிவத்தில் பயன்படுத்துகிறது. ஒருமுகப்பாடு கவனத்தை கவனச் சிதறல்களிலிருந்து விடுவித்து ஒருவர் விரும்பும் எந்த எண்ணத்தின் மீதும் குவிப்பதை உள்ளடக்கியது. ஒருமுகப்பாட்டின் எந்த வடிவத்தில் கவனம் அமைதியின்மையிலிருந்து விடுபட்டிருந்து இறைவன் மீது குவிக்கப்படுகிறதோ அந்தஆன்ம அனுபூதி அறிவியல் ஆகும். வரையறைக்குட்பட்ட விசேஷமான வடிவமே தியானம் ஆகும்.

இறைவனுடைய இருப்பின் முதற்சான்று விளக்கமுடியாத அமைதியாகும். இது மனிதனால் நினைத்துப்பார்க்க முடியாத ஆனந்தமாக வளர்ச்சியடைகிறது. நீங்கள் உண்மை, வாழ்க்கை ஆகியவற்றின் பேராதாரத்தை ஒருமுறை தொட்டுவிட்டால், இயற்கை முழுவதும் உங்களுக்கு மறுமொழியளிக்கும்.

“இறைவனை அகத்தே கண்டதும், நீங்கள் அவனைப் புறத்தே, எல்லா மக்களிலும் மற்றும் எல்லா நிலைமைகளிலும் காண்பீர்கள்.”

“உங்களால் தியானம் செய்வதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்ய முடிகின்ற போதிலும், சிந்தனைகள் அமைதியாகி உங்கள் மனம் இறைவனின் அமைதிக்கு சுருதி சேர்க்கப்படும் போது வரும் ஆனந்தத்திற்குச் சமமானதை நீங்கள் ஒருபோதும் காண மாட்டீர்கள்.”
தியானத்தின் பலன்கள் பல. வழக்கமான பயிற்சியின் வாயிலாக, நுட்பமான உருமாற்றங்கள் ஒருவருடைய உடலில், மனத்தில் மற்றும் உள்ளார்ந்த உணர்வு நிலையில் நிகழ்கின்றன. இந்தப் பலன்களில் சில உடனடியாக கிடைக்கின்றன மற்றவை படிப்படியாக மலர்கின்றன மற்றும் வெளிப்படையாகத் தோற்றமளிக்க அதிக காலம் எடுக்கக்கூடும்.
அக அமைதி தியானத்தின் முதற் பலன்களில் ஒன்று. அதனுடன் வருபவை அதிக தெளிவு, புரிதல் மற்றும் அகத்திலிருந்து வரும் வழிகாட்டல்.

தியானம் அன்றாட வாழ்வுப் பயணத்தில் எழும் பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது என்பது பற்றிய பாரபட்சமற்ற தன்மையையும் உள்ளுணர்வு ஞானத்தையும் கொண்டு வருகிறது. அது ஒருவருடைய ஒருமுகப் பாட்டையும் செயல்திறனையும் மற்றும் ஒருவருடைய பணி சார்ந்த மனப்பான்மையையும் மேம்படுத்துகிறது.

தியானம் நிபந்தனையற்ற அன்பைக் கொடுக்கும், ஏற்கும் திறனை விழித்தெழச் செய்தவாறு, அதிக நல்லிணக்கத்தையும் ஆனந்தத்தையும், உறவுகளுக்கு குடும்ப வாழ்க்கைக்கு கொண்டு வருகிறது தீங்கு விளைவிக்கும் மன அழுத்தத்தைக்குறைக்கும் உடல்நலத்தை மேம்படுத்தியவாறு, உடலில் உள்ள உயிராற்றல்களை இணக்கமாக்குகிறது.

வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளுக்கும் நடுவில் ஓர் அசைக்கமுடியாத அக மகிழ்ச்சியையும் பாதுகாப்பையும் வழங்குகிறது அது ஒருவருடைய உணர்வு நிலையைத் தெய்வீகத்துடன் இசைவிக்க உதவுகிறது.

இந்தப் பலன்கள் நேர்மையான முயற்சியுடனும் ஒருவர் வாழ்வில் இறுதி இலக்கை ஆன்ம அனுபூதியின் வாயிலாகக் கிடைக்கும் என்றும் புதிய பேரின்பத்தையும் இறைவனுடனான ஐக்கியத்தையும் காணும் வரை தொடர்ந்து கடுமுயற்சி செய்ய இச்சாசக்தியைத் தயார் செய்வதன் மூலமும் கிடைக்கிறது.
Tags: நன்மைகளும்தியானத்தின்பயன்களும்.
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

தமிழர்கள் திருமண முறை

அடுத்த செய்தி

முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

தமிழர்கள் திருமண முறை

தமிழர்கள் திருமண முறை
by Stills
12/06/2025
0

நீண்டி நெடிய வரலாற்றையும், பண்பாட்டையும் தந்த தமிழனத்திற்கென்று திருமண முறை என்பது எப்படிப்பட்டதாக இருந்தது? நமக்கென்று சில முறைகள் இருக்கிறது. தமிழர் பண்பாடு, வேளாளர் முறை என்றெல்லாம்...

மேலும்...

இறைவனிடத்தில் அடைக்கலம் வேண்டி பாடப்பட்டது, அடைக்கலப்பத்து – திருவாசகம்

இறைவனிடத்தில் அடைக்கலம் வேண்டி பாடப்பட்டது, அடைக்கலப்பத்து – திருவாசகம்
by Stills
12/02/2025
0

நீங்களும் பயன் பெறுங்கள்: உங்கள் துன்பத்தில்இருந்துவிடுபட இப்பதிகத்தை தினமும் பாராயணம் செய்வதால் துன்பம் விலகும் என்றும் திருப்பெருந்துறையில்  மாணிக்கவாசகர் அருளியது அடைக்கலம் என்பது, அடைக்கலமாக ஒப்புவித்துத் தமக்கெனச்...

மேலும்...

விஞ்ஞானமும், குபேர முத்திரையும், அதன் நன்மைகளும்.!

விஞ்ஞானமும், குபேர முத்திரையும், அதன் நன்மைகளும்.!
by Stills
12/02/2025
0

குபேரன் திசை வடக்கு. செல்வத்தின் அதிபதி,  நமது உடலில் வடக்கு திசை சிரசைக் குறிக்கும். எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம். இறைவன்  குடியிருக்கும் இடம் சிரசு. குபேர...

மேலும்...

2023 இன்று பெயர்ச்சியாகும் சனி  ஏழரை யாருக்கு என்ன நடக்க உள்ளது.!

2023 இன்று பெயர்ச்சியாகும்  சனி  ஏழரை யாருக்கு என்ன  நடக்க உள்ளது.!
by Stills
20/12/2023
0

சனி கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஏழரை சனி, 12 ராசிகளுக்கு என்ன சனி நடக்கப் போகிறது கும்பத்தில் சனி பகவான் பெயர்ச்சி ஆகக்கூடிய நிலையில் மகரம், கும்பம்,...

மேலும்...

பணப்பெட்டி, பீரோ, குபேரர், வைக்கும் திசை.!

பணப்பெட்டி, பீரோ, குபேரர், வைக்கும் திசை.!
by Stills
20/11/2023
0

கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றும் ஒருங்க அமையப்பெற்றவர்தான் சாதனையாளராக உயர முடியும் என்பது நிச்சயம். பணமே வாழ்க்கையாகிவிடுவதில்லை. ஆனால், பணம் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை. கொஞ்சம்...

மேலும்...

உச்சநீதிமன்றம் தீர்ப்பு : சுப்பிரமணியம் குருக்கள் மனு தள்ளுபடி.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு : சுப்பிரமணியம் குருக்கள் மனு தள்ளுபடி.
by Stills
22/08/2023
0

சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்காக கடந்த 2018ம் ஆண்டு விண்ணப்பங்களை வரவேற்று கோயில் நிர்வாக அதிகாரி உத்தரவினை பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவினை எதிர்த்து சுகவனேஸ்வரர் கோயிலில்...

மேலும்...
அடுத்த செய்தி
முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
ஜனாதிபதி அநுர ஜேர்மன் வணிகமன்றத்துக்குத் தலைமை தாங்கினார்.!

ஜனாதிபதி அநுர ஜேர்மன் வணிகமன்றத்துக்குத் தலைமை தாங்கினார்.!

14/06/2025
பிரதி அமைச்சர் ரத்ன கமகே  நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு.

பிரதி அமைச்சர் ரத்ன கமகே நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு.

14/06/2025
”சிவப்பு நிற லேபல்”உடன் வந்தது விடுதலைப்புலிகள் பிரபாகரனின் ஆயுதமா?

”சிவப்பு நிற லேபல்”உடன் வந்தது விடுதலைப்புலிகள் பிரபாகரனின் ஆயுதமா?

14/06/2025
முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

13/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.