அதிகாலை, 3.00 (3.20_3.40 ரிஷிமுகூர்த்தம் ) முதல், 6:00 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் தியானம் செய்யும் போது அதிக பலன்கிடைக்கும்.
தியானம் என்பது ஆன்மாவை எல்லையற்ற பரம்பொருளுடன் அல்லது இறைவனுடன் ஐக்கியமாக்கும் அறிவியல் ஆகும்.
மனிதஉடல் பஞ்சபூதங்களால் ஆனது. தியானம் உடலை,ஒழுக்கத்தை,மனஅமைதியை, உருவாக்கும் கலையாகும்.மன அமைதி பெற மனதை ஒரு நிலைப்படுத்தி செய்யப்படும் ஒரு பயிற்சி தியானம் ஆகும்.
தியானத்துக்கு வயது ஒரு எல்லை இல்லை. குழந்தைகள் துவங்கி பெரியவர்கள் வரை யார் வேண்டுமானலும் மன ஒரு நிலைப்பட தியானம் செய்யலாம்.வழக்கமாகவும் ஆழமாகவும் தியானம் செய்வதன் மூலம், உங்கள் ஆன்மாவை உங்களுடைய இருப்பின் அக ஆழ மையத்தில் உள்ள அமரத்துவ, பேரின்பமய தெய்வீக உணர்வுநிலையை நீங்கள் விழித்தெழச் செய்வீர்கள்.
யோகத் தியானம் நமது ஆன்மாவின் எல்லையற்ற செயல்திறனைத் திறக்கும். நெடுங்கால மாக நிரூபிக்கப்பட்ட வழியாகும். ஒரு தெளிவற்ற மனதளவில் எண்ணும் அல்லது தத்துவார்த்தமாகச் சிந்திக்கும் செயல்முறையல்ல. அது வாழ்க்கையின் கவனச் சிதறல்களிலிருந்து கவனத்தை விடுவிக்கும் நேரடியான வழியாகும்.
நமது மெய்யான பெரும் சுயத்தை நாம் அற்புதமான தெய்வீக இருப்பாக மெய்யாகவே இருப்பதை அறிவதிலிருந்து நம்மைத்தடுக்கும் கொந்தளிக்கின்ற மற்றும் அமைதியற்ற எண்ணங்களை அமைதிப்படுத்துகிறது.
தியான ஒழுக்கத்தின் வாயிலாக, நாம் அகத்தே ஒருமுகப்படக் கற்றுக் கொள்கிறோம் அதன் மூலம் நமது அசைக்க முடியாத அமைதி, ஆனந்தம் ஆகியவற்றின் மையத்தைக்கண்டுபிடிக்கிறோம்.
நீங்கள் தியானத்தில் முன்னேறும் போது, படிப்படியாக நீங்கள் ஆன்மாவிலிருந்து பெருகும் அக அமைதியையும் ஆனந்தத்தையும் அனுபவிக்கிறீர்கள். மிக உயர்ந்த நிலைகளில், உங்களுடைய ஆன்மா இறைவனுடனான முழுமையான ஐக்கியத்தை உணர்ந்தறிகிறது. இதுதான் தியானத்தின் இலக்கு பரவசமான, உயர்உணர்வான, பேரின்பமிகு தெய்வீகத் தன்மையை சமாதி என்றழைக்கப்படுகிறது.
தியானத்தின் மிக உயர்ந்த உத்திகளைக் கற்றுப் பயன்பெற விரும்பும் எவரும் இதை விலைமதிப்பற்ற ஆதாரமாகவும் வாழ்நாள் முழுவதற்குமான துணையாகவும் இருக்கக் காண்பார்.
வெளியுடலை சுத்தம் செய்ய தினமும் குளிப்பது போல், உள் உறுப்புகளை செம்மைப்படுத்த தினமும் தியானம் செய்து சுத்திகரித்துக்கொள்ள வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல், நேர்மறை எண்ணங்களை வளர்க்க வேண்டும்.
சுய ஒழுக்கமுடன் வாழ மனதை ஒருமுகப்படுத்த வேண்டும் மூச்சுப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் அதன் பின்பே தியானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு படிநிலை பயிற்சிகளையும் சரிவரக் கற்று தியானம் செய்யும் போது, உடல் முழுமையான புத்துணர்ச்சி பெறும்.
பள்ளி குழந்தைகளுக்கு துவக்கத்தில் இருந்து மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி அளித்தால், உயர்கல்வி தேர்வுக்கு கவனம் சிதறாமல் படிக்க முடியும் சிறந்த முறையில் தேர்வு எழுதுவர்.குழந்தைகளும் தியானம் செய்யலாம். இதன்மூலம், கற்றல் திறனும், ஞாபக சக்தியும் மேம்படும். கோபம் குறைந்து, மனதில் குவிப்புத்திறன் அதிகரிக்கும். ஐந்து விரல் முத்திரைகளை கற்றுத்தந்து பயிற்சி தரும் போது, உடல் நலம் பெறுகிறது. புதிய சக்தி பிறக்கும். தியானம் செய்வதால் மனதில், எதிர்மறை எண்ணங்கள் தோன்றாது.
‘ஓம்காரம்’ சொல்லும் போது, கார்பன்டை ஆக்சைடு வெளியேறி, ஆக்சிஜன் கிடைக்கிறது
நீங்கள் தனிமையிலும் இடையூறு இல்லாமலும் தியானம் செய்வதற்கேற்ற ஓர் அரவமற்ற, அமைதியான இடத்தைக் கண்டுபிடியுங்கள். தொடக்கத்தில் சில நிமிடங்கள் தினசரி தியானிக்க முடிந்தால் அதுவே சிறந்தது, சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் தியானிக்கலாம். ஒரு மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேதனையாக தியானிப்பதை விட இடைவெளி விட்டு பயிற்சி செய்வதே சிறப்பு. மனதின் சில நிலைகளை உருவாக்க அதுவே பழக்கமாகும் வரை திரும்பத் திரும்ப செய்கிறோம். உடல் அளவில் தியானம் என்பது புதிய நரம்பியல் பாதைகளை கட்டமைப்பதாகக் காட்டுகிறது.
தினமும் வெறும் ஐந்து நிமிடங்கள் தியானம் செய்வது உங்கள் மனம், உடல் மற்றும் ஆன்மாவை ஒத்திசைத்து, உங்கள் உள் மனதுடன் ஆழமான தொடர்பை மனதை ஒருமுகப்படுத்த தெரியாததாலேயே, இன்றைய இளைய தலைமுறையினர் பலர் தவறான பாதைகளுக்கு சென்றுவிடுகின்றனர். பள்ளி பாடத்தில் தியானம் இடம்பெறாமல் போய்விட்டதும் துரதிர்ஷ்டவசமானதுதான். யோகா, தியான பயிற்சிகள் அளித்து, சிறந்த இளைய தலைமுறையினரை உருவாக்கவேண்டும்.
தியானம், வாழ்வின் லட்சியத்தை உணர வைக்கிறது. மன அமைதி மற்றும் மகிழ்ச்சியை தருகிறது. பிரச்னைகளை எதிர்கொள்ள முடிகிறது. பயம், வெறுப்பு, பதட்டம், மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து விடுதலை அளிக்கிறது. ஆக்கபூர்வமான சிந்தனைகள் மற்றும் செயல் திறன் வளரும். மனரீதியான நோய்களை நீக்கி முழுமையான ஆரோக்கியம் பெறலாம். மனிதர்களாகிய நாம் மகான் ஆத்மாவாக உயர்வு பெற தியானம் உதவுகிறது.
தியானம், ஆசனம், பிராணயாமம் ஆகியவை இணைந்ததே யோகா. எவ்வளவு பணிப்பளு இருந்தாலும், தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்தாலே போதும். பல்வேறு சோதனைகளை கடந்துவிடலாம். தியானம் செய்வதன் மூலம் மனதின் குவிப்பு தன்மை அதிகரிக்கும். ஞாபக மறதி இருந்தாலும் மாறி, ஞாபக சக்தி அதிகரிக்கும். தேவையில்லாத பயம், பதட்டம் இருக்காது. முக்கியமாக, ‘நான் யார்’ என்பது போல், தன்னை உணர்தல் வாயிலாக, தெளிவு கிடைக்கும். மனம் செம்மையாவதுடன், உடலும் ஆரோக்கியமாகும்.