சிறந்த உறக்கத்திற்கு ஏற்ற திசைகள்.!

உறக்கத்திற்கு ஏற்ற திசைகள்.

நல்ல தூக்கத்திற்கு வலம் மற்றும் இடப்பக்கங்களில், எப்பக்கத்தில் படுத்துத் தூங்க வேண்டும்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

தூங்குவதற்கு ஏற்ற திசைகளாக அறிவியல் கூறுவது என்ன?
தூக்கத்தின் திசையானது புவி காந்த குறுக்கீட்டைத் தவிர்க்கும் நோக்கம் கொண்டதாக அமைதல் வேண்டும். பூமியே மிகப்பெரிய காந்தம். அதனுடைய தாக்கம் மனிதர் மீது ஏற்படுத்தும் பாதிப்பு புள்ளிவிவர ரீதியாக. குறிப்பிடத்தக்கது.

பூமியின் காந்த நேர்மறையான துருவம் வடக்கு நோக்கியும், எதிர்மறை துருவம் தெற்கு நோக்கியும் உள்ளது. மனிதனின் தலை ஒரு காந்தத்தின் நேர்மறை பக்கமாகவும், கால்கள் எதிர்மறையாகவும் உள்ளன. தலையை வடக்கு நோக்கி வைத்து படுக்கும் பொழுது நேர்மறை துருவங்கள் எதிர்ப்பதால், நம்மிடம் மன அழுத்தம், சோர்வு போன்ற தாக்கங்கள் உண்டாகலாம். எனவே நாம் தலையை வடக்கில் வைத்து தூங்கக் கூடாது.

மனித உடலின் மிக முக்கியமான நிலையம்  இதயம்.இது மார்பு பகுதியின் ¾ பங்கில் மேலே இருக்கிறது. ஏன்?
கீழே இரத்தம் அனுப்புவது எளிது. மேலே குறிப்பாக மூளைக்கு செல்லும் இரத்த நாளங்கள் மிகச் சிறியவை, ஒரு தடவை கூட  ‘அதிகமான துளி’ போனால், அந்த நரம்பு வெடிக்கலாம் – இதுவே சிறிய அளவிலான மூளை ரத்தக்கசிவு.
 35வயதுக்கு மேல் பலருக்கு அறிவுத்திறன் குறைவு, நினைவுத்திறன் மட்டுமே உதவுகிறது.இது இயல்பான உடலியல் மாற்றம்.
 வடக்கு திசையில் தூங்கினால் என்ன ஆகும்? நமது இரத்தத்தில் உள்ள இரும்பு (Iron) – பூமியின் காந்தப் புலத்துடன் (Magnetic Field) செயல்படும்.
வட திசை = பூமியின் காந்த வட துருவத்துடன் நேரடி ஈர்ப்பு.
 பல மணி நேரம் உங்கள் தலை வடக்கை நோக்கி இருக்கும்போது,அந்த காந்த ஈர்ப்பு மூளைக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும்.
அதனால் மூளை ரத்தக்கசிவுக்கு வாய்ப்பு உள்ளது (age + weak blood vessels இருப்பவர்களுக்கு)அதிக இரத்த ஓட்டத்தால் மன கலக்கம்
கவலை, கோபம், அச்சம்தூக்கம் தரமின்றி போகும்உடல் வலிமை குறையும்.
இது வடக்கு அரைக்கோளத்தில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் (இந்தியா உட்பட).
 தெற்கு அரைக்கோளத்தில் (ஆஸ்திரேலியா போன்றவை) இதற்கு மாறான விதி.
காலையில் எழும்பும் போது செய்ய வேண்டிய ஒன்று
சித்தர்கள் எப்போதும் சொன்னார்கள்:  வலது பக்கமாக திரும்பி எழுங்கள் ஏனென்றால் இதயம் இடது பக்கம்.
உறக்கத்தில் உங்கள் உடல் மெதுவாக இயங்கும்.
ஒரே நேரத்தில் இடப்புறம் அழுத்தினால் – இதயத்திற்கு கூடுதல் சுமை. கைகளை உரசி கண்களில் வையுங்கள்
கைகளில் ஆயிரக்கணக்கான நரம்பு முடிச்சுகள் உள்ளது. உரசும் போது  அவை சூடாகி மூளை முழுவதும் விழித்தெழும்.
சில விநாடிகலில் உங்கள் உடலும் மனமும் உடனே செயல்படும். இது மூடநம்பிக்கை அல்ல…
சித்தர்கள் கண்டறிந்த நம் உடலின் அதிர்வு ரகசியம்!
உங்கள் உடல் இயற்கையுடன் எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்துகொண்டால் உறக்கத்தின் தரம், உடல்நலம், மனநிலை —முழுவதும் மாறிவிடும்.
 தூங்குவதற்கு ஏற்ற திசையாக வாஸ்து சாஸ்திரம் என்ன கூறுகின்றது?
வாஸ்து சாஸ்திரம் என்பது ஆயுர்வேதத்தின் சகோதரி அறிவியல் என அழைக்கப்படுகிறது. இது திசைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டிடக்கலை மற்றும் சுற்றுச்சூழல்கலையில் நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு உதவுகிறது.  வாஸ்துவின் நோக்கம், பண்டைய இயற்கையின் ஐந்து மஹாபூதங்கள் — ஆகாசம், வாயு, அக்னி, நீர் மற்றும் பூமி, திசைகள் மற்றும் ஆற்றல் புலங்களை ஒருங்கிணைத்து வாழ்விடம் மற்றும் பணியிடங்களை சிறப்பாக வடிவமைக்க உதவுவதாகும், இது மேம்பட்ட ஆரோக்கியம், செல்வம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சிக்காக வாழவும், செயல்படவும் ஒரு இணக்கமான சூழலை உருவாக்குவதாகும்.
வட அமெரிக்காவின் முன்னணி வாஸ்து நிபுணர் மைக்கேல் மாஸ்டரோவிடம் தூங்குவதற்கு ஏற்ற திசைகள் பற்றி . அவர் அளித்த அறிவுரை “நாங்கள் ஒருபோதும் வடக்கு நோக்கி தலை வைத்து தூங்குவதில்லை, ஏனென்றால் நேர்மறை காந்த ஆற்றல் வட துருவத்திலிருந்து வருகிறது, மேலும் நமது உடல், நமது தலையில் நேர்மறை துருவமுனைப்பு கொண்ட ஒரு காந்தம், எனவே இது காந்தங்களின் இரண்டு நேர்மறை முனைகளை ஒன்றாகக் கொண்டுவருவது போன்றது அவை ஒன்றையொன்று எதிர்ப்பதால் இரத்த ஓட்டம், இரத்த சுழற்சி, செரிமானம் போன்றவற்றில் தொல்லைகளை ஏற்படுத்துகிறது. இது நிம்மதியான தூக்கத்தைத் தராது. உங்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், தெற்கு திசையில் தூங்குவது மிகவும் நன்மை பயக்கும். இந்தப் பரிந்துரைகள் தெற்கு அரைக்கோளத்தில் மாறாது.”
தூங்கும் திசைகள் பற்றி வேதங்கள் கூறுவது என்ன?
தூங்கும்போது தலை கிழக்கு திசையில் இருக்க பரிந்துரைக்கிறது. தெற்கு நோக்கி கால்கள் வைத்து தூங்கினால், பிராணசக்தி இழப்பு ஏற்படும். காரணம், இயற்கையான உயிர் சக்தியான கரிம சக்தி – ஜைவிக் ஊர்ஜா (jaivik ūrjā) வடக்கிலிருந்து தெற்காக சுழல்கிறது. பிராணவாயு, உடலில் உள்ள பாதங்கள் வழியாகவும் அதேசமயம் ஒரு உயிர் குடிலில் (foetus) ஆன்மா நுழையும் இடம் தலையின் வழியாகவும் இருக்கும்.
கிருஷ்ணர், தர்மருக்கு அறிவுரை கூறும் போது “தலையை தெற்கு நோக்கியும் கால்களை வடக்கு நோக்கியும் வைத்து தூங்குங்கள்” என்று கூறுகிறார்.
வடக்கில் தலை வைத்து தூங்குவது
வடக்குகில் தலை வைத்து தூங்குவது யாருக்கும் பரிந்துரை செய்யப்படவில்லை. வடக்கில் தலை வைத்து தூங்குவதால் உடல், மனம் மற்றும் ஆன்மாவின் ஒருங்கிணைப்பு சீர்குலைகிறது. உடலின் ஆற்றலையும் வெளித்தள்ளிவிடுகிறது. இது மருத்துவரீதியான அறிக்கையாகும். மருத்துவரீதியாகவும், மனித உடலில் உள்ள இரும்புச்சத்து மூளையில் உறைவதால் இரத்த அழுத்தம், அதிக மன அழுத்தம், உடல் நலம், மனநலம் தொடர்பான கோளாறுகள், தூக்கமின்மை யாவும் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
டாக்டர் வசந்த் லாட் கூறுவது யாதெனில் “இந்து மத வழக்கப்படி இறந்தவர்களின் உடலை மட்டுமே வடக்குப் பக்கம் தலைவைத்துப் படுக்க வைப்பார்கள். உடல் தகனம் செய்யப்படும் வரை இறந்த உடலை வடக்கு நோக்கி தலை வைத்து இருக்கும்படி படுக்க வைப்பார்கள். ஏனெனில் வடக்கு திசைதான் ஆன்மா உடலை விட்டு வெளியேறும் பாதை என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறுகிறார்.
கிழக்கில் தலை வைத்து தூங்குவது
சூரியன் கிழக்கில் உதிக்கிறது. எனவே, இந்த திசை நேர்மறை அலைகள் எழும்பும் திசையாகவும், செயல்பாட்டின் ஆற்றல் மற்றும் புத்துணர்ச்சி தரும் திசையாகவும் கருதப்படுகிறது. நாம் தலையை கிழக்குத் திசையில் வைத்து தூங்கும்போது, சூரிய சக்தி தலையின் வழியாக உடலுக்குள் நுழைந்து, பின்னர் கால்கள் வழியாக வெளியேறுகிறது. இதனால், தலை சிறிது குளிர்ந்தும், கால்கள் வெப்பமடைந்தும் இருக்கின்றன, இது நிம்மதியான தூக்கத்தையும், சரியான ஆற்றல் சுழற்சியையும் ஏற்படுத்துகிறது. மாணவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும், ஏனெனில், இது நினைவாற்றலை மேம்படுத்துகிறது, கவனத்தை அதிகரிக்கிறது, மேலும், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மை செய்கிறது.
இது தியானம் மற்றும் ஆன்மீக பயிற்சிகளுக்கும் சிறந்ததாகக் கூறப்படுகிறது. கிழக்கில் தலை வைத்து மேற்கில் கால் இருக்குமாறு படுத்துத் தூங்குவது, படைப்பாற்றலை மிகவும் சிறப்பாக ஆக்குகிறது. கருத்தரிப்பதற்கும், வாதம், பித்தம் மற்றும் கபம் போன்ற நாடிகளைச் சமன் செய்வதற்கும் ஏற்ற திசையாக கிழக்குத் திசை அமைந்துள்ளது.
இந்த திசையில் தூங்குபவர்களுக்கு வடக்கு – தெற்கு திசையில் தூங்குபவர்களுடன் ஒப்பிடும்போது REM (விரைவான கண் இயக்கம்) தூக்க சுழற்சிகள் மற்றும் கண் இயக்கம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன, இது குறைவான கனவுகளையும், நல்ல தூக்கத்தையும் குறிக்கிறது.
மேற்கில் தலை வைத்து தூங்குவது
மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி தூங்குவது நல்லதல்ல. ராஜஸ குணங்களான உழைப்பு, செயல், ஆர்வம், போராட்டம் போன்ற இயல்புகளுடன் தொடர்புடையதால், மேற்கு திசை அமைதியின்மையை ஏற்படுத்துகிறது. தூக்கம் கெடுகிறது. ஒரு சிலர் இது ஒரு நடுநிலை தூக்க நிலையை வழங்குவதாக நினைக்கின்றனர். வாஸ்து சாஸ்திரப்படி மேற்கு நோக்கி தலை வைத்துத் தூங்குவது அமைதி இல்லாத தொல்லைகள் தரும் தூக்கமாக அமைந்துவிடுகிறது. கனவுகள் மற்றும் வன்முறை போக்குகளுக்கு வழி வகுத்து விடுகிறது.
தெற்கில் தலை வைத்து தூங்குவது
காந்தங்களின் கோட்பாட்டின்படி பார்த்தால், எதிர்மறை தெற்கு மற்றும் நேர்மறை தலைக்கு இடையேயான பரஸ்பர ஈர்ப்பு தூக்கத்தில் நல்லிணக்கத்தை உருவாக்குகிறது. புராணத்தின்படி தெற்கு திசை எமனுக்கு உரியது. மேலும் மரணத்தின் அமைதியைப் போல ஒரு ஆழ்ந்த தூக்கத்திற்கும் ஊக்கம் கொடுப்பதாக தெற்கு அமைந்து விடுகிறது. வாஸ்து நிபுணர்கள், இந்த திசையில் தூங்குவதை,  சிறந்த உடல்நலத்திற்கும், இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மைக்கும், நல்ல சக்தியை ஊக்குவிப்பதற்கும், செல்வம், வளம் மற்றும் குடும்ப ஒற்றுமைக்கான சீரான சூழலை உருவாக்குவதற்கும் மிகச் சிறந்ததாகக் கருதுகின்றனர்.
வாதநாடி அதிகம் உள்ளவர்கள் அடிக்கடி பதட்டம் அடைவார்கள். குளிர்ந்த கைகளை உடைய அவர்கள் தெற்கு, தென்கிழக்கு நோக்கி தலை வைத்து தூங்கினால் மிகவும் நல்லதாக இருக்கும்.
பித்த நாடி அதிகமுடையவர்கள் வடமேற்கு திசையில் தலை வைத்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை (பித்தநாடி சமனாகும் வரை) தூங்கலாம்.
கப நாடி குறைபாடு உடையவர்கள் மேற்கு நோக்கி தலைவைத்துத் தூங்கலாம். கபகுறைபாடு சமநிலைக்கு வரும்வரை மேற்கில் தலை வைத்து தூங்குவது நல்லது.
2009 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள இமயமலை மருத்துவ அறிவியல் நிறுவனம் (HIMS) ஒன்றில் உடலியல் துறையில் ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு திசையில் தலை வைத்துத் தூங்கும் போது இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், சீரம் சாடிகோல் (ஹார்மோன் சுரப்பி) போன்றவைகளில் ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்துமா என்பதைப் பார்க்க ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தெற்கு திசையில் தலை வைத்துத் தூங்க அறிவுறுத்தப்பட்ட நபர்களுக்கு மட்டும் குறைந்த SPB (சிஸ்டாலிக் ரத்த அழுத்தம்) இருப்பதும் கண்டறியப்பட்டது. மேலும் DRP சராசரி ரத்த அழுத்தம், இதயத்துடிப்பு (HR), சீரம் சாடிகோல் (ஹார்மோன் சுரப்பி) மிகவும் சரியாக அமைந்திருந்தன. இவை யாவும் புள்ளி விவர ரீதியான முக்கிய கண்டுபிடிப்புகள். இருந்தாலும், வெவ்வேறு குழுக்கள் மேலும் ஆய்வுகள் தேவை என்று கருதுகின்றன.
நவீன அறிவியலும், வாஸ்து மற்றும் ஆயுர்வேத நூல்களும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உறங்கும் திசை பற்றிய பரிந்துரைகளை மீண்டும் வலியுறுத்தி வருகின்றன.
தெற்கு – வடக்கு : தெற்கே தலையும் வடக்கே காலும் வைத்து தூங்குவது சரியானதாகும்.
கிழக்கு – மேற்கு : .கிழக்கே தலை வைத்து மேற்கே கால் வைத்து தூங்குவதும் சரியானதாகும்.
மேற்கே தலை வைத்து தூங்குவதை கூடுமானவரை தவிர்க்கவே வேண்டும்.
ஒருபோதும் தலையை வடக்கு நோக்கி வைத்து தூங்க வேண்டாம்.
தூங்க சரியான பக்கம் எது?
வலப்பக்கமாக படுத்து உறக்கம் கொள்ளலாமா ? ஆயுர்வேதமானது, உங்களை இடப்பக்கத்தில் தூங்கலாம் என்று சிபாரிசு செய்கிறது. ஏனெனில், நீங்கள் சரியாக சுவாசிக்க முடியும். இடப்பக்கம் படுத்து உறங்குவது இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இரத்த ஓட்டத்தை அதிகரித்து மற்றும் சிறந்த உடல் ஆரோக்கியத்தை விளைவிப்பதாகவும் அமைகிறது.
உடற்கூறியல் குறித்த உன்னதமான யோக வெளிப்பாடு:
போகி என்பவன் வயிற்றில் தூங்குகிறான்.
ரோகி என்பவன் முதுகில் தூங்குகிறான்.
யோகி என்பவன் பக்கவாட்டில் தூங்குகிறான்.
பக்கவாட்டில் தூங்குவது சூரிய நாடி (வலப்பக்க நாசித்துளை), சந்திர நாடி (இடப்பக்க நாசித்துளை) இரண்டையும் சீராக செயல்படுத்த உதவுகிறது. உடலில் உள்ள பிராண ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. உயிர் அணுக்களைத் தெய்வீக உணர்வுகளுடன் சீரமைத்து விழித்திருக்கும் நிலையில் வைத்திருக்க உதவுகிறது. நமது உடல் மற்றும் மனதை பாதுகாக்க உதவுகிறது.
வலப்பக்கம் தூங்கும்போது சக்தி களம் வழியாக உணர்வுகளுடன் செல்லும் இந்த ஓட்டமானது நம் உடலுக்கு உயிர் கொடுப்பது மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றிய சூழ்நிலைகளில் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே சரியான திசையில் தலை வைத்து தூங்குங்கள்.
 ஒரு நாளில் நடந்தால் பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் வருடங்களாக நடந்தால் அது அழைப்பு கொடுக்கப்பட்ட பிரச்சினை!
சரியான உறக்க திசை.
வடக்கு –  வேண்டாம்! ஒருபோதும் வேண்டாம்
மற்ற திசைகள் எப்படி?
கிழக்கு – மிகச் சிறந்தது
வடகிழக்கு – நல்லது
மேற்கு – பரவாயில்லை
தெற்கு – அவசியமானால் மட்டும்

தொடர்புடைய செய்திகள்

இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!

இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!

இருமல் மற்றும் சளி போக்கும் முத்திரைகள் பற்றி பார்க்கலாம். சளி, இருமலை முன்னர் யாரும் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. சளிக்கென்று வீட்டு மருத்துவம் செய்து கொண்டு சளியை சரி...

மேலும்...

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு

முளைப்பயிர்  உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதை தினமும் சாப்பிட்டால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது இந்த முளைப்பயறு கட்டாயம் கொடுப்பது அவசியம். இது...

மேலும்...

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய உணவாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.வயிற்றில் செரிமானத்தையும் ஆரோக்கியமாக...

மேலும்...

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க சாப்பிட வேண்டிய பூக்கள்.!

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க சாப்பிட வேண்டிய பூக்கள்.!

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க பெண்கள் ஐந்துவிதமான பூக்களை எடுக்க வேண்டும்.வாழைப்பூ,குங்குமப்பூ,ரோஜா பூ இதழ்கள் ,செம்பருத்தி பூஇதழ்கள்,செந்தாமரை பூஇதழ்கள். பெண்களின் கருப்பையை வலுவாக்கும் முதல்...

மேலும்...

நித்திய கல்யாணி மூலிகை, மருத்துவர் விளக்கம்!

நித்திய கல்யாணி மூலிகை, மருத்துவர் விளக்கம்!

மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்வதில் நித்திய கல்யாணி பூக்கள் முதலிடத்தில் உள்ளது. வெள்ளை நிற நித்ய கல்யாணி பூ, இலைகளின் சாறுகள் உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சையளிப்பதில் .. நவீன...

மேலும்...

ஞாபகமறதியை (அல்சைமர்) தடுப்பதற்கான வழி முறை.!

ஞாபகமறதியை (அல்சைமர்) தடுப்பதற்கான வழி முறை.!

2012 முதல் செப்டம்பர் மாதம் அல்சைமர் விழிப்புணர்வு மாதமாகவும் செப்டம்பர் 21 அல்சைமர் தினமாகவும் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அல்சைமர் நோய் பாதித்தவர்களால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள...

மேலும்...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை