Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இந்தியா

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

Stills by Stills
19/05/2025
in இந்தியா
0
யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?
0
SHARES
8
VIEWS
ShareTweetShareShareShareShare

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். டிராவல் யூ டியூபர் என்ற பெயரில் நாடு முழுக்க பல இடங்களுக்கு பயணித்த இவர்.. இந்திய இராணுவத் தகவல்களை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டதற்காக ஹரியானாவின் ஹிசாரில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

யூ டியூபர் ஜோதி மல்ஹோத்ரா நேற்று முதல்நாள் கைது செய்யப்பட்ட பாகிஸ்தானின் உளவு அசெட்டாகவே மாறும் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது உளவு பார்க்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த உளவாளி உறுதியான தகவல்களை தொடர்ச்சியாக வழங்கினால் அவர் உளவு அசெட்டாக மாறுவார். அதாவது உளவு பார்க்கும் நாட்டின் சொத்து. அவருக்கான செலவுகள், தேவைகளை அந்த நாடு பார்த்துக்கொள்ளும். அதோடு அந்த உளவாளி கண்டுபிடிக்கப்படும் நிலை இருந்தால் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு நாட்டிற்கு நாடு கடத்தும். சொந்த நாட்டிற்கே கூட அந்த உளவாளியை அழைத்துக்கொள்ளும்.
இப்படி இந்தியாவிற்காக பாகிஸ்தானில் உளவு பார்த்த பாகிஸ்தான் குடிமகன்கள்.. இப்போது இந்தியா கொண்டு வரப்பட்டு இங்கே பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளனர். அப்படித்தான் பாகிஸ்தானின் உளவு அசெட்டாகவே ஜோதி மாறியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் உளவாளிகளுடன் இவர் தீவிர நெருக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஜோதியிடம் நேரடியாக உறுதியான பாதுகாப்பு துறை தகவல்கள் எதுவும் இல்லை. அவரால் அந்த உளவு தகவல்களை சேகரிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது. என்ன நடந்தது?

‘டிராவல் வித் ஜோ மற்றும் ‘nomadic Leo girl wanderer’ என்ற பெயரில் யூடியூப் சேனல்களை நடத்தி வந்த 33 வயதான அந்த பெண் பாகிஸ்தானுக்கு பல உளவுத்தகவல்களை அனுப்பி உள்ளார். பாகிஸ்தான் உயர் கமிஷனில் உள்ள எஹ்சான்-உர்-ரஹீம் என்ற அதிகாரியுடன் பல உளவுத்தகவல்களை இவர் பகிர்ந்து உள்ளார். முக்கியமாக ஜோதி ராணி இரண்டு முறை பாகிஸ்தானுக்கு நேரடியாக விசிட் சென்றதாக கூறப்படுகிறது. பயண வீடியோ போடுகிறேன் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டு அங்கே பாகிஸ்தான் அரசு அதிகாரிகளை சந்தித்து உள்ளார்.

சமீபத்தில்தான் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் நாடு கடத்தப்பட்டார். தூதரக நடவடிக்கை அல்லாத வேறு செயல்களில் அந்த அதிகாரி ஈடுபட்டதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் அந்த அதிகாரி யார், அவர் வகித்து வந்த பொறுப்பு உள்ளிட்ட விவரங்கள் அப்போது வெளியாகவில்லை. இந்தியாவின் உத்தரவில் அந்த பாகிஸ்தான் அதிகாரி இந்தியாவால் Persona Non Grata என அறிவிக்கப்பட்டு, 24 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில்தான் நாடு கடத்தப்பட்ட அந்த பாகிஸ்தான் அதிகாரி பாகிஸ்தான் உயர் கமிஷனில் வேலை பார்த்த எஹ்சான்-உர்-ரஹீம் என்று தெரிய வந்துள்ளது. இவர்தான் தூதரக அதிகாரி என்ற பெயரில்.. இந்தியாவிற்குள் உளவு பார்த்துள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த காரணத்தால்தான் ஜோதி மல்ஹோத்ரா எனப்படும் ஜோதி ராணி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். அந்த அதிகாரி வழியாக.. பாகிஸ்தானுக்கு பல உளவுத்தகவல்களை இவர் வழங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது
முக்கியமாக மக்கள் அதிகம் கூடும்.. சுற்றுலா தலங்கள், பாதுகாப்பு தளவாடகங்கள் இருக்கும் இடங்கள், கட்சி கூட்டங்கள் பற்றிய தகவல்களை இவர் பகிர்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் உயர் கமிஷனில் வேலை பார்த்த எஹ்சான்-உர்-ரஹீம் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளை உளவு பார்த்து இருக்கிறார். ஜோதி வழியாக இந்த உளவு தகவல்களை அவர் பெற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. விசாரணையின் போது,​​ஜோதி மல்ஹோத்ரா போலீசாரிடம் பல அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் கமிஷனுக்கு நாட்டிற்கு வருகை தர விசா பெறச் சென்றதாகவும், அப்போது ரஹீமை சந்தித்து அவருடன் பேசத் தொடங்கியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பிறகு இரண்டு முறை பாகிஸ்தானுக்குச் சென்றதாகவும், ரஹீம் வழியாக அலி அஹ்வான் என்ற பாகிஸ்தான் நபரை சந்தித்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அங்கே பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்ததாகவும், பாகிஸ்தான் அதிகாரிகள் நம்பரை இந்துக்களின் பெயரில் தனது போனில் பதிவு செய்துவிட்டு, இந்திய ராணுவம் தொடர்பாக பல தகவல்களை வெளியிட்டதாகவும், தொடர்ந்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டதாகவும், இந்தியாவிற்கு எதிரான பல தகவல்களை அவருடன் பகிர்ந்து கொண்டதாகவும் கூறி உள்ளார். பாகிஸ்தானுக்கு டிராவல் செய்வது போல பயணம் செய்து அங்கே உள்ளே பாதுகாப்பு படை அதிகாரிகளை சந்தித்து பல முக்கியமான விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது

Tags: யூ டியூபர்ஜோதிராணிபாகிஸ்தானின்உளவவாளியானது
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

அடுத்த செய்தி

மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

by அரவிந்த்
09/05/2025
0

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்!. _ வ. கௌதமன்...

மேலும்...

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

by அரவிந்த்
16/04/2025
0

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்க! இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஜாட் திரைப்படம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தாயக விடுதலைக்காகப் போராடியவிடுதலைப் போராளிகளை...

மேலும்...

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
by Stills
11/03/2025
0

 மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர்,...

மேலும்...

மூன்று இடத்தில் பேச்சு நடத்தும் காளியம்மா

by அரவிந்த்
26/02/2025
0

நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த காளியம்மாள் சீமான் உடனான கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். விலகிய அவர் எந்த கட்சியில்...

மேலும்...

கிளிநொச்சி நீதிமன்றத்தில் இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி நீதிமன்றத்தில் இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
by Stills
10/02/2025
0

இரணைதீவிற்கு அண்மித்த  கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட  இரண்டு இந்திய இழுவைப்படகுகளையும் அதிலிருந்த 14 இந்திய   மீனவர்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09)  அதிகாலை இலங்கை கடற்படையினர்...

மேலும்...

இந்தியர்களின் நலனுக்காக என்ன செய்யப் போகிறது மோடி அரசு?

இந்தியர்களின் நலனுக்காக என்ன செய்யப் போகிறது மோடி அரசு?
by Stills
07/02/2025
0

சட்டவிரோதமாக குடியேறிய 104இந்தியர்கள் இந்தியாவுக்கு அமெரிக்காவால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். ராணுவ விமானத்தில்...

மேலும்...
அடுத்த செய்தி
மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

20/05/2025
மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

19/05/2025
யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

19/05/2025

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.