Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home இலங்கை

இலங்கையில் சீனாவின் சியான்-6ஆராய்ச்சிக்கப்பல் இந்தியா அச்சம்.!

Stills by Stills
27/10/2023
in இலங்கை
0
இலங்கையில் சீனாவின் சியான்-6ஆராய்ச்சிக்கப்பல் இந்தியா அச்சம்.!
0
SHARES
8
VIEWS
ShareTweetShareShareShareShare

சீனாவின் புவிஇயற்பியல் ஆராய்ச்சிக்கப்பல் சியான் ஆறு புதன்கிழமை முதல் இலங்கை துறைமுகத்தில் தரித்துநிற்கின்றது.சனிக்கிழமை வரை அந்த கப்பல் அங்கு தரித்து நிற்க்கும் என வெளிவிவகார அமைச்சினை மேற்கோள்காட்டி ஏபி செய்தி வெளியிட்டுள்ளது.சீனாவின் புவிஇயற்பியல் ஆராய்ச்சிக்கப்பல் இலங்கையில் தரித்து நிற்பதை தொடர்ந்து இந்து சமுத்திரத்தில் சீனாவின் சட்டபூர்வ விஞ்ஞான நடவடிக்கையை அரசியல்மயப்படுத்துவதை கண்டித்துள்ள ஆய்வாளர்கள் இவ்வாறான  கருத்துக்கள் இந்தியாவின் பிராந்திய மூலோபாயத்திற்கு உதவும் நோக்கத்திலானவை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

செப்டம்பரில் குவாங்சோவிலிருந்து புறப்பட்ட அந்த கப்பல் 13 நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் நிபுணர்கள் உள்ளனர் அவர்கள் 80 நாட்களில் 28 கடல்கடந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள் என சின்குவா தெரிவித்துள்ளது.

வெப்பமண்டல கிழக்கு இந்திய பெருங்கடலில் மாறும் செயல்முறைகள் பொருள் சுழற்சி மற்றும் உயிர் புவியியல் ஆகியவற்றிற்கு இடையிலான தொடர்பு போன்ற விடயங்கள் குறித்த இந்த ஆராய்ச்சியின் போது கவனம் செலுத்தப்படும்.

எனினும் இந்துஸ்தான் டைம்சின் செய்தியொன்று இந்த கப்பல் இரண்டு நோக்கங்களை கொண்டது இந்த கப்பல் கடல்சார் ஆராய்ச்சிக்கு மாத்திரமில்லை இந்து சமுத்திரத்தில் எதிர்காலத்தில் சீன நீர்மூழ்கிகளை பயன்படுத்துவதற்கான கடல் அடி ஆராய்ச்சிக்கும் இந்த பயன்படும் என தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கரிசனைகளையும் மீறி கப்பல் கொழும்புதுறைமுகத்தில் தரித்து நிற்பதாக  இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீனாவின் புவிஇயற்பியல் ஆய்வுக்கப்பல் இந்திய பெருங்கடலில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது எனினும் சில இந்திய ஊடகங்கள் இந்த கப்பலை இராணுவநோக்கத்துடன் தொடர்புபடுத்துகின்றன என சிங்குவா பல்கலைகழகத்தின் தேசிய மூலோபாய நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவின்  இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.சீனாவின் சர்வதேச கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தவே இந்திய ஊடகங்கள் இவ்வாறு செயற்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு ஆராய்ச்சிக்கப்பலை பெரிதுபடுத்துவது இரு நாடுகளிற்கும் இடையிலான அரசியல் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ள அவர் இருதரப்பு உறவுகளை சாதகமான விதத்தில் கொண்டு செல்வதற்கு இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தில் சியான் ஆறு கப்பலின் நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களிற்கு உட்பட்டவை இலங்கையின் சட்டங்களிற்கு உட்பட்டவை என தென்சீன கடலிற்கான தேசிய நிறுவகத்தின் உலக கடற்படை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர்  தெரிவித்துள்ளார்.இந்தியாவின் எதிர்ப்புகள் எதிர்பாராமல் திடீரென வெளியானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்து சமுத்திரத்திற்கு ஏன் அந்த கப்பல் ஆராய்ச்சிக்கு செல்கின்றது என தெரிவித்துள்ள தலைமை விஞ்ஞானி பிராந்திய சர்வதேச காலநிலை மாற்றத்தில் இந்துசமுத்திரம் முக்கிய பங்களிப்பு செய்கின்றது எனினும் இந்து சமுத்திரம் குறித்து போதிய ஆராய்ச்சிகள் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு சீன கப்பல் சென்றுள்ளதை இந்திய ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என சீனகம்யுனிஸ்ட் கட்சியின் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீன ராணுவத்தின் விண்வெளி, சைபர், மின்னணுப் படைப் பிரிவு சார்பில் பல்வேறு பெயரில் உளவு கப்பல்கள் இயக்கப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக இலங்கைக்கு சீனாவிலிருந்து ஷின் யான் 1, 3, 6, சியாங் யாங் ஹாங் 1, 3, 6, 18, 19, யுவான் வாங்க் 5 ஆகிய உளவு மற்றும் போர்க் கப்பல்கள் வருகை தந்துள்ளன. கடந்த வாரம் ஹய் யாங் 24 ஹவோ என்ற சீன போர்க் கப்பல் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு துறைமுகத் தில் 2 நாட்கள் நங்கூரமிட இலங்கை அரசு அனுமதி வழங்கியது.

சீனாவின் உளவு மற்றும் போர்க் கப்பல்களின் மூலம் 750கி.மீ. தூரம் வரையிலான இடங்களைக் கண்காணிக்க முடியும். அதன்படி, இலங்கைக்கு மிகஅண்மையில் உள்ள இந்தியாவின் ஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளம், கல் பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணு மின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்களை இந்தக் கப்பல் மூலம் உளவு பார்க்க வாய்ப்பு உள்ளது. இதனால், சீன கப்பல்களின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், சீனாவின் கப்பலான ஷியான்-6 கப்பல் 17 நாட்கள் முகாமிட்டு இலங்கை கடற் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் இலங்கை கடற்படை உறுதிப்படுத்தி உள்ளது.

Tags: அச்சம்இந்தியாவின்இலங்கையில்சீனகப்பல்
ShareTweetShareShareSendSend
Previous Post

கொழும்பு புறக்கோட்டையில் தீ பரவியதால் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

Next Post

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது.

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.
by கண்ணன்
07/01/2026
0

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்  எனவும்,மேற்கு - வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை...

Read more

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.
by கண்ணன்
21/01/2026
0

இன்று (2) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அலுவலகத்தில் வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் " தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத்...

Read more

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!
by Stills
21/01/2026
0

இன்றைய தினம் (22) வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடைசெய்யுமாறு கோரி பொதுமக்கள்  ஆர்ப்பாட்டப் பேரணி  நடத்தினர். இப்போராட்டத்தை கங்கன்குளம்...

Read more

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள்- வலுக்கும் கண்டனம்

by அரவிந்த்
22/12/2025
0

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரைக்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில்  நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு சைவ மகா சபை  கண்டனம்...

Read more

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!
by கண்ணன்
19/12/2025
0

சென்னை, நீலாங்கரை: ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பாகவும், இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரவையின் (Tamil National...

Read more

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!
by கண்ணன்
18/12/2025
0

புதன்கிழமை (17) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள்...

Read more
Next Post
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குருதி தட்டுப்பாடுஏற்பட்டுள்ளது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

30/07/2026
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

30/07/2026
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

27/07/2026
நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

27/07/2026
மூட்டுவலியை போக்கும் உணவு

மூட்டுவலியை போக்கும் உணவு

27/07/2026
நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24/07/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    47 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    43 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.