Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு மருத்துவம்

நித்திய கல்யாணி மூலிகை, மருத்துவர் விளக்கம்!

Stills by Stills
24/05/2024
in மருத்துவம்
0
நித்திய கல்யாணி மூலிகை, மருத்துவர் விளக்கம்!
0
SHARES
40
VIEWS
ShareTweetShareShareShareShare
  • மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்வதில் நித்திய கல்யாணி பூக்கள் முதலிடத்தில் உள்ளது.
  • வெள்ளை நிற நித்ய கல்யாணி பூ, இலைகளின் சாறுகள் உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சையளிப்பதில் ..

நவீன மருத்துவம் மற்றும் மூலிகை வைத்தியம் இரண்டிலும் மிக முக்கிய இடம்பிடித்துள்ள மலர் என்றால் அது நித்திய கல்யாணி என்று சொல்லலாம். பசுமையான தோற்றம் கொண்ட இது 1 – 2.5 மீட்டர் உயரம் வரை வளரும். இது உலகம் முழுக்க வளர்கிறது. நித்திய கல்யாணி இளஞ்சிவப்பு மற்றும் பால் போன்ற வெள்ளை நிறத்தில் பார்க்கலாம்.நித்தியக் கல்யாணி, நயனதாரா அல்லது பட்டிப்பூ, சுடுகாட்டுமல்லி என்றும் சுடுகாட்டுப்பூ (பூச்செடி) என்றும் அழைக்கப்படும் செடி, மடகாசுக்கரில் …

நித்திய கல்யாணி(சதாபஹர்)யின் இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் மருத்துவ பயன் கொண்டவை. இரத்த அழுத்தம், மனரீதியான நோய்களைக் குணப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும். நித்தியக் கல்யாணி நாடியைச் சமப்படுத்தவும், சிறுநீர் சர்க்கரையைக் குறைக்கவும் மருந்தாகப் பயன்படுத்தலாம்.பெண்களுக்கு இந்த மூலிகை ஒரு வரம் என்றே கூறவேண்டும், பல பிரச்சினைகளை இது  மருந்து.

மார்பக புற்றுநோயை விரட்டுவது மட்டுமன்று,ஆஸ்துமா, குளிர் காய்ச்சல், இரத்தப்புற்றுநோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், பெண்களின் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பல்வேறு  நோய்களை விரட்டுவது மட்டுமின்றி இது மூளை சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகளையும், மன நோய்களையும் தீர்க்கும் மருந்தாகும்.

பெண்களுக்கு உயிர்கொல்லி பிரச்சினையாக விளங்குவது மார்பகப்புற்று நோய். மார்பக திசுக்கள் மாற்றங்கண்டு கட்டிகளாக மாறி புற்றுநோயாக உருவெடுக்கும். இந்த நோயானது இன்றைக்கு பெரும்பாலான பெண்களின் பிரச்சினையாக இருக்கின்றது. கட்டிகள் பெரிதாக உருவான பின்னரே இவற்றை நம்மால் அடையாளங்காண முடிகின்றது.

புற்றுநோயால் அவதிப்படுபவர்கள், நித்தியகல்யாணி சூரணத்தை உபயோகிக்க வேண்டும். செய்முறை: நித்திய கல்யாணிச் செடியை வேருடன் பிடிங்கி நன்கு சுத்தம் செய்து உலர்த்த வேண்டும். அதில் இலை, பூ, தண்டு, வேர் என அத்தனையும் இருக்கலாம். அந்தச் செடி முழுவதுமாக காய்ந்து பொடியாக அரைத்த பொடியிலிருந்து ஆறு கிராம் வரை எடுத்து 400 மில்லி தண்ணீர் 200 மில்லி லிட்டராக சுண்டும் வரை கொதிக்க வைத்து பின் ஆற வைத்து, தினமும் மூன்று வேளையும் தவறாமல் அருந்த வேண்டும். அவ்வாறு அருந்தினால் மிக விரைவில் புற்று நோய் குணமாகும்.

நீரழிவு நோய்க்கும் நித்தியகல்யாணியை பயன்படுத்தலாம். இது பழுதுபட்ட கணையத்தை சரிசெய்வதோடு, உடல் செல்களின் இயக்கங்களை சரி செய்கிறது. நித்திய கல்யாணியின் ஆறு இலைகள் மற்றும் 15 பூக்களை 800 மில்லி நீரில் இட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த கஷாயம் பாதியாக சுண்டியவுடன், அதாவது 400 மில்லியானவுடன் ஆறவைத்து வடிகட்டி காலை, மாலை என ஒரு நாளைக்கு இரு முறை இந்த குடிநீரை பருகவேண்டும்.

குறிப்பு: கருத்தரித்த தாய்மார்கள் நித்தியகல்யாணியின் எந்தவித மருந்துகளையும் பயன்படுத்தக்கூடாது.

நீரிழிவு நோய் கட்டுப்படுத்த
ஆயுர்வேதத்தில் இந்த நோய் மதுமேகம் என்றழைக்கப்படுகிறது. நீரிழிவு நோய் கப தோஷங்களின் அதிகரிப்பால் உண்டாக கூடியது. இது செரிமான (அக்னி) செயல்பாடு குறைவதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறதுநித்திய கல்யாணி (சதாபஹரின்) சிறந்த இரத்த சர்க்கரை குறைவு பண்பு இருப்பதால் இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. இந்த பூவின் சாறு எடுப்பதன் முலம் கணைய செல்களில் இருந்து இன்சுலின் உற்பத்தியானது தீவிரமாகிறது. மேலும் மாவுச்சத்தை குளுகோஸாக உடைப்பதை தடுக்கிறது.

எப்படி பயன்படுத்தலாம்.
இதன் இலைகளை உலர்த்தி பொடி செய்து கண்ணாடி பாட்டிலில் சேர்த்து வைக்கவும். 1 டீஸ்பூன் உலர்ந்த இலை பொடியை எடுத்துகொளவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அல்லது புதிய பழச்சாறுடன் கலந்து எடுக்கலாம். இந்த செடியின் இலைகள் 3- 4 மென்று சாப்பிடலாம்.
பூக்களை பறித்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு இதை சில நிமிடம் வைத்திருந்து வடிகட்டி குடிக்கவும். கசப்பாக இருந்தாலும் வெறும் வயிற்றுல் காலையில் குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

சுவாச கோளாறுகள்
இது சுவாச குழாயில் இருந்து சளி படிவுகளை அகற்ற உதவுகிறது. அனைத்து வித கபத்தையும் மோசமாக்கும் தன்மை கொண்டது. இந்த மலரில் இருக்கும் பெரும்பாலான செயலில் உள்ள உட்பொருள்கள் ஆஸ்துமா மூச்சுக்குழாய் அழற்சி, சிஓபிடி இருமல் மற்றும் சளி அறிகுறிகள் போன்ற சுவாச கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான இறுதி தீர்வை அளிக்கிறது.

இந்த பூக்கள் இருமல், தொண்டைப்புண் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இந்த பூக்களை கஷாயமாக்கி எடுக்கலாம்.

உயர் இரத்த அழுத்தம்
வெள்ளை நிறத்தில் இருக்கும் நித்ய கல்யாணி பூ மற்றும் இலைகளின் சாறுகள் இலேசானது முதல் மிதமான உயர் ரத்த அழுத்தத்துக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும். மேலும் இந்த இலைகளின் சாறுகள் எடுக்கும் போது இது உயர் இரத்த அழுத்தத்துக்கு முந்தைய செயல்பாட்டை தடுப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இலைகளின் சாறு அரைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2- 3 மில்லி அளவு எடுத்து வரலாம்.

அறிவாற்றலை மேம்படுத்துகிறது
இந்த தாவரத்தில் உள்ள நியூரோபிராக்டிவ் கூறுகள் மூளை செல்களின் ஆரம்ப வயதை குறைப்பதன் மூலம் நினைவாற்றல் இழப்பு தடுக்கப்படுகிறது. ஆனால் மூளை திசுக்களில் சரியான இரத்த ஓட்டத்தை எளிதாக்குகிறது. மூளையின் பதற்றத்தை நீக்குவதால் இது மூளையின் பணியை மேம்படுத்துகிறது.

சரும ஆரோக்கியத்துக்கு நன்மை செய்கிறது

சரும ஆரோக்கியத்துக்கு நன்மை செய்கிறது

சருமத்தை மேம்படுத்தும் பண்புகள் இதில் உள்ளது. சூரியக்கதிர்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களுக்கு சிகிச்சையளிப்பதில் இவை முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் சருமத்தில் சுருக்கங்கள், நேர்த்தியான கோடுகள், புள்ளிகள், கருவளையங்கள் போன்ற முதுமையின் பல்வேறு அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. சரும பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.

நித்திய கல்யாணி இலை மற்றும் வேப்பிலை இரண்டையும் எடுத்து மசித்து அதில் சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து மென்மையாக குழைத்து எடுக்கவும். இதை முகத்தில் தடவி உலரவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடவும். முகப்பரு மற்றும் தோல் பிரச்சனை இருப்பவர்கள் மாற்றுநாளில் இதை செய்து வந்தால் தீவிரமாகாமல் தடுப்பதுடன் நோய்த்தொற்றை எதிர்த்து போராடவும் உதவும்.

மாதவிடாய் ஒழுங்குப்படுத்துகிறது
பெண்கள் பெரும்பாலும் மாதவிடாய் பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த நித்திய கல்யாணி பூக்கள் இதை சரி செய்வதில் முதலிடத்தில் உள்ளது. மாதவிடாய் வயிறு வலி, இரத்தப்போக்கு போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. மேலும் டிஸ்மெனோரியாவையும் குறைக்க செய்கிறது. நித்ய கல்யாணி இலைகள்6-8 எடுத்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் மாதவிடாய் சீராகும்.

காயம் குணப்படுத்துவதை துரிதப்படுத்துகிறது

இது நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் குணப்படுத்தும் பண்புகள் நிறைந்தவை. இது காயத்தை திறம்பட குணப்படுத்துகிறது. தோல் தொற்றுகளை தடுக்கிறது. அரிப்பு மற்றும் எரியும் உணர்வை தடுக்க செய்வதோடு தொற்று பரவாமலும் தடுக்கிறது.

காயம் ஆற்றலை எளிதாக்குகிறது. மஞ்சள் மற்றும் நித்ய கல்யாணி இலைகளை பேஸ்ட் செய்து காயங்கள் மீது 2- 3 முறை தடவினால் வேகமாக குணமாகும்.
புற்றுநோய் தடுக்கிறது
இதன் இலைகள் மற்றும் பூக்களில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு ஆண்டி மெடாஸ்டேடிக் மற்றும் ஆண்டிமுடேஜெனிக் பண்புகள் கொண்டிருப்பதால் இது புற்றூநோய் நிலைகளுக்கு சக்தி வாய்ந்தவையாக சொல்லப்படுகிறது. இது நோயாளிகளுக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கிறது. கட்டியின் அளவை குறைக்க உதவுகிறது. இதில் வின்கிரிஸ்டைன் மற்றும் வின்பிளாஸ்டைன் செயலில் உள்ள பொருள்கள் லுகேமியாவுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மூக்கில் வரும் ரத்தப்போக்கு மற்றும் வாய்ப்புண்களுக்கு.
இந்த இலைகளை மாதுளை மொட்டுக்களுடன் சேர்த்து அரைத்து சாறு எடுத்து மூக்கில் செலுத்தப்படுகிறது. மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படுவதை தடுக்க, ஈறுகளில் ஏற்படும் இரத்தப்போக்குக்கும் இதை பயன்படுத்தலாம்.அருமருந்தான இதை சிகிச்சைக்காக பயன்படுத்துவதாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனையோடு பயன்படுத்தவும்.

Tags: நித்தியகல்யாணிமூலிகைமருத்துவர்விளக்கம்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மருத்துவ பயிற்சி, ஆராய்ச்சிக் கட்டடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு.! 

அடுத்த செய்தி

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க சாப்பிட வேண்டிய பூக்கள்.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு

ஞாபக சக்தியை அதிகரிக்கும் முளைப்பயறு
by Stills
04/12/2024
0

முளைப்பயிர்  உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதை தினமும் சாப்பிட்டால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது இந்த முளைப்பயறு கட்டாயம் கொடுப்பது அவசியம். இது...

மேலும்...

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!

நெய் வெந்நீரில் கலந்து குடித்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
by Stills
04/12/2024
0

நெய் உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய உணவாகும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.வயிற்றில் செரிமானத்தையும் ஆரோக்கியமாக...

மேலும்...

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க சாப்பிட வேண்டிய பூக்கள்.!

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க சாப்பிட வேண்டிய பூக்கள்.!
by Stills
24/05/2024
0

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க பெண்கள் ஐந்துவிதமான பூக்களை எடுக்க வேண்டும்.வாழைப்பூ,குங்குமப்பூ,ரோஜா பூ இதழ்கள் ,செம்பருத்தி பூஇதழ்கள்,செந்தாமரை பூஇதழ்கள். பெண்களின் கருப்பையை வலுவாக்கும் முதல்...

மேலும்...

ஞாபகமறதியை (அல்சைமர்) தடுப்பதற்கான வழி முறை.!

ஞாபகமறதியை (அல்சைமர்) தடுப்பதற்கான வழி முறை.!
by Stills
22/09/2023
0

2012 முதல் செப்டம்பர் மாதம் அல்சைமர் விழிப்புணர்வு மாதமாகவும் செப்டம்பர் 21 அல்சைமர் தினமாகவும் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அல்சைமர் நோய் பாதித்தவர்களால் எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ள...

மேலும்...

நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் விரிவான தகவல்.!

நவீன உபகரணங்களைக் கொண்டு கண் பார்வை திறனை சரிசெய்து கொள்ளலாம் விரிவான தகவல்.!
by Stills
22/09/2023
0

பார்வைத்திறன் சரியாகஇல்லை என்றால் அதனால் ஏற்படும் விளைவுகளும் அதிகம். உடல்ரீதியாக மட்டும் அல்ல மனரீதியாகவும் பாதிப்பினை அது ஏற்படுத்தும்.கண் பார்வைத்திறன் என்பது அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்று...

மேலும்...

இரத்த அழுத்தம் என்றால் என்ன?அது எப்படி ஏற்படுகின்றது?

இரத்த அழுத்தம் என்றால் என்ன?அது எப்படி ஏற்படுகின்றது?
by Stills
22/09/2023
0

இரத்த அழுத்தமானது இயல்பு நிலையை மீறி செயல்படும்போது, உடலில் உள்ள எல்லா பாகங்களுக்கும் ரத்தம் செல்லுவது தடைப்படக்கூடும். அல்லது அது செல்லும் விகிதம் குறையலாம். இது நாள்படும்போது...

மேலும்...
அடுத்த செய்தி
கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க சாப்பிட வேண்டிய பூக்கள்.!

கர்ப்பப்பை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் ஹார்மோன் சமநிலையிலும் இருக்க சாப்பிட வேண்டிய பூக்கள்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025

புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா சிறப்பு மலர்

17/04/2025

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

16/04/2025
மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

11/03/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.