Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இந்தியா

பஞ்சாப் பெண்ணின் கண்ணீர்க் கதை

Stills by Stills
07/02/2025
in இந்தியா
0
பஞ்சாப் பெண்ணின் கண்ணீர்க் கதை
0
SHARES
7
VIEWS
ShareTweetShareShareShareShare
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 இந்தியர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். ராணுவ விமானத்தில் வந்த அவர்கள் நேற்று முன்தினம் பஞ்சாபின் அமர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கினர். இவர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
அவ்வாறு வந்திறங்கியவர்கள் பலரும் கூறும் கண்ணீர் கதை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு ஆட்களை அனுப்பிவைக்கும் ஏஜன்ட்டுகள் மீதான நடவடிக்கைகளை அரசு கடுமையாக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான லவ்ப்ரீத் கவுர் தனக்கு நேர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். இவர் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி தனது மகனுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டுள்ளார். இவரது கணவர் அங்கு சில ஆண்டுகளாக வேலை செய்துவரும் நிலையில் கணவருடன் இணைந்து வாழும் விருப்பத்தில் மகனுடன் புறப்பட்டுள்ளார்.
இதற்காக லவ்ப்ரீத் குடுபத்தினர் ரூ.1.05 கோடி பணத்தைத் திரட்டி ஏஜென்ட்டிடம் கொடுத்துள்ளனர். மெக்சிகோவுக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக பத்திரமாக அமெரிக்காவுக்குள் சேர்ப்போம் என்பதே அவர்களுக்கு ஏஜென்ட்டுகள் சொன்னது. ஆனால் அவர் ‘டங்கி ரூட்’ என்றழைக்கப்படும் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் செல்வோரின் பாதையில் மிகக் கடுமையான சவால்களுக்கு இடையே பயணிக்கும்படி செய்யப்பட்டுள்ளார். இதனால் இப்போது அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

கணவருடன் சேர வேண்டும் என்பதற்காக லவ்ப்ரீத் தெரிந்தே இதற்கு ஒப்புக் கொண்டாரா இல்லை அவர் ஏமாற்றப்பட்டாரா என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், லவ்ப்ரீத் ஓர் ஊடகப் பேட்டியில், “எங்களை நேரடியாக அமெரிக்கா அனுப்பிவைப்பதாகவே ஏஜென்ட் கூறினார். ஆனால் எதிர்பாராமல் இவ்வாறு நடந்துவிட்டது” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் லவ்ப்ரீத், மகனுடன் கைது செய்யப்பட்ட தகவலை கபூர்தலாவில் உள்ள பெற்றோருக்கு லவ்ப்ரீத்தின் கணவர்தான் தெரிவித்துள்ளார். லவ்ப்ரீத் நாடுகடத்தப்பட்டதையும் அவர் உறுதி செய்துள்ளார். இது குறித்து கபூர்தலா பஞ்சாயத்துத் தலைவர், “லவ்ப்ரீத் பயணத்துக்கான பணத்தை அமெரிக்காவில் உள்ள அவரது கணவரே ஏற்பாடு செய்தார். போதாததற்கு நிலத்தை அடமானம் வைத்தும் கடன் பெற்றனர்.” என்று ஊடகங்களிடம் கூறினார்.

இந்தியாவில் இருந்து புறப்பட்ட லவ்ப்ரீத் முதலில் கொலம்பிய குடியரசில் உள்ள மெடலின் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இரண்டு வாரங்கள் அங்கேயே தங்கவைக்கப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து எல் சால்வடாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கிருந்து 3 மணி நேரம் நடைபயணமாக கவுதேமாலாவுக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மெக்சிகோ எல்லைக்கு டாக்ஸியில் சென்றுள்ளனர். மெக்சிகோ – அமெரிக்கா எல்லையிலேயே இரண்டு நாட்கள் தங்கியிருந்தவர்கள் கடைசியாக ஜனவரி 27-ல் அமெரிக்காவுக்கு சென்றுள்ளனர். அமெரிக்காவுக்குள் நுழைந்துவிட்டோம் இனி கணவருடன் சேர்ந்துவிடலாம் என லவ்ப்ரீத் எண்ணியுள்ளார். ஆனால் அங்கே அவருக்கு நடந்ததோ வேறு.

இது குறித்து அவர், “நாங்கள் அமெரிக்காவுக்குள் சென்றபோது அவர்கள் எங்கள் ஃபோனின் சிம் கார்டை அப்புறப்படுத்தச் சொன்னார்கள். மேலும் கம்மல், வளையல் என அனைத்து ஆபரணங்களையும் கழற்றி ஒப்படைக்கச் சொன்னார்கள். ஏற்கெனவே வேறொரு நாட்டில் என் உடைமைகள் அனைத்தும் தொலைந்துபோனது. இந்நிலையில் முகாமுக்குச் செல்லும் முன் எல்லாவற்றையும் இழந்தேன். முகாமில் 5 நாட்கள் தங்கவைக்கப்பட்டோம். பிப்ரவரி 2-ம் தேதி நாங்கள் கைது செய்யப்படுவதாகக் கூறினர். எங்கள் கைகள், இடுப்பு, கால்களில் விலங்கிட்டனர். குழந்தைகளுக்கு மட்டுமே விலங்கிடவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக 40 மணி நேர விமானப் பயணத்தில் நாங்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறோம் என்றுகூட எங்களிடம் யாரும் சொல்லவில்லை. இறுதியாக நாங்கள் இந்தியா வந்தடைந்ததாகச் சொல்லப்பட்டது. அமிர்தசரஸ் விமான நிலையத்தில் நாங்கள் இறங்கியபோது அமெரிக்காவுக்குச் சென்று கணவர், குடும்பம் என வாழக் கண்ட கனவு எல்லாம் நொறுங்கிப்போனதை உணர்ந்தேன்.” என்று கூறியுள்ளார்.
Tags: பஞ்சாப்பெண்ணின்கண்ணீர்க்கதை
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்.!

அடுத்த செய்தி

இந்தியர்களின் நலனுக்காக என்ன செய்யப் போகிறது மோடி அரசு?

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

படையாண்டமாவீரா’ திரைப்படத்தின்இசைவெளியீட்டுவிழா

by அரவிந்த்
01/06/2025
0

வ. கெளதமன் இயக்கி நடிக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் இனிதே நடைபெற்றது. "வன்னிக்காடு" படைப்பாக்குவதே தனது...

மேலும்...

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?
by Stills
19/05/2025
0

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். டிராவல் யூ டியூபர் என்ற பெயரில் நாடு முழுக்க பல இடங்களுக்கு பயணித்த...

மேலும்...

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

by அரவிந்த்
09/05/2025
0

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்!. _ வ. கௌதமன்...

மேலும்...

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

by அரவிந்த்
16/04/2025
0

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்க! இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஜாட் திரைப்படம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தாயக விடுதலைக்காகப் போராடியவிடுதலைப் போராளிகளை...

மேலும்...

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
by Stills
11/03/2025
0

 மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர்,...

மேலும்...

மூன்று இடத்தில் பேச்சு நடத்தும் காளியம்மா

by அரவிந்த்
26/02/2025
0

நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த காளியம்மாள் சீமான் உடனான கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். விலகிய அவர் எந்த கட்சியில்...

மேலும்...
அடுத்த செய்தி
இந்தியர்களின் நலனுக்காக என்ன செய்யப் போகிறது மோடி அரசு?

இந்தியர்களின் நலனுக்காக என்ன செய்யப் போகிறது மோடி அரசு?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
கீதா கோபிநாத்தின் இலங்கைக்கான முன்னெடுப்பு இறுதித்திட்டம்.!

கீதா கோபிநாத்தின் இலங்கைக்கான முன்னெடுப்பு இறுதித்திட்டம்.!

16/06/2025
கீதா கோபிநாத் -அநுர சந்திப்பு.!

கீதா கோபிநாத் -அநுர சந்திப்பு.!

16/06/2025
வ்ராய் கெலீ பல்தசார் கொழும்பு மாநகர மேயராக  தெரிவு.!

வ்ராய் கெலீ பல்தசார் கொழும்பு மாநகர மேயராக தெரிவு.!

16/06/2025
கீதா கோபிநாத் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலாலை சந்தித்தார்.

கீதா கோபிநாத் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலாலை சந்தித்தார்.

16/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.