Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இலங்கை

பிரதி அமைச்சர் ரத்ன கமகே நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு.

Stills by Stills
14/06/2025
in இலங்கை
0
பிரதி அமைச்சர் ரத்ன கமகே  நீர்கொழும்பு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு.
0
SHARES
4
VIEWS
ShareTweetShareShareShareShare

நேற்று வெள்ளிக்கிழமை (13) கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே  தலைமையில் நீர்கொழும்பு நகர மண்டபத்தில்  கடற்றொழில், நீரியல் மற்றும் கநீர்கொழும்பு மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இடம்பெற்றது.

காலி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் நான்காவது கட்டமாக இது அமைந்தது.தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க இக்கூட்டத்தில் கலந்துகொண்டார். கடற்றொழில் சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இக்கூட்டத் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் நீர்கொழும்பு களப்பு நெருக்கடி ,  ஹாமில்டன் கால்வாய்பிரச்சினை  மோதா மீன் குஞ்சுகள் (Barramundi)  பற்றாக்குறை  போன்ற முக்கிய விடயங்கள் குறித்தும் அதற்கு எடுக்கப்பட்ட  முடிவுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

நீர்கொழும்பு களப்பைச் சுற்றியுள்ள மக்கள் மற்றும் நிறுவனங்களால் கழிவுகள் மற்றும் அசுத்தமான பொருட்கள் கொட்டப்படுவதால் அதன் சுற்றுச்சூழல் அமைப்பு அழிந்து வருவதாகவும், களப்பு வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கு பொருத்தமற்ற சூழல் உருவாகியுள்ளதாகவும் கடற்றொழில் சமூகம் சுட்டிக்காட்டியது.

நீருக்கு அடியில் பிளாஸ்டிக், பொலித்தீன் மற்றும் ரப்பர் பலகைகள் படிந்திருப்பதால் ஒட்சிசன் உற்பத்தி மற்றும் மீன் வளர்ச்சிக்கு தடை ஏற்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு களப்பு அபிவிருத்திக்காக அரசாங்கத்தால் ரூபா 100 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.அத்துடன் சுற்றுலாத்துறை அமைச்சகம் ஊடாக ரூபா 25 மில்லியன் மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி அதிகாரசபையை விரைவாக ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியம். களப்பைத் துப்பரவு செய்ய தொடர்புடைய அரச மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள், பொலிஸ், கடலோரப் பாதுகாப்புப் படை மற்றும் சுற்றுலா சபை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்த கட்டமைப்பு ஒன்றின் கீழ் செயற்பட வேண்டும்.

சட்டவிரோத கழிவு கொட்டுதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத வலைகள் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும். சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பார்கள் என்றார்.

ஹாமில்டன் கால்வாயில் நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலிருந்து கழிவுகள் கொட்டப்படுவதால் அது கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், மண் படிந்து கால்வாயின் ஆழம் குறைந்து படகுப் போக்குவரத்து தடைபடுவதாகவும் கடற்றொழில் சமூகம் விளக்கமளித்தது.

இப் பிரச்சினை தொடர்பாக உடனடியாக ஒரு கள விஜயத்தை மேற்கொண்டு தொடர்புடைய அனைத்து அரச நிறுவனங்களுடனும் (நீர்ப்பாசனம், கடலோரப் பாதுகாப்பு போன்றவை) இணைந்து விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில் விரைவான தீர்வுகள் வழங்கப்படும் என பிரதி அமைச்சர் பதிலளித்தார்.

மோதா மீன் வளர்ப்புக்கு கடந்த இரண்டு வருடங்களாக குஞ்சுகள் பற்றாக்குறை நிலவி வருவதாக கடற்றொழில் சமூகம் சுட்டிக்காட்டியது.

உள்நாட்டில் கிடைக்கும் குஞ்சுகளின் அதிக விலை நீரியல் வளர்ப்பாளர்களுக்கு சுமையாக இருப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலையில் குஞ்சுகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் கோரினர்.

மோதா மீன் குஞ்சுகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும். இது தொடர்பாக அமைச்சகத்தின் தலையீட்டுடன் கடற்றொழில் திணைக்களம், நாரா (NAQDA) மற்றும் தனியார் துறையுடன் கலந்துரையாடி, குறுகியகால தீர்வாக குறைந்த விலையில் குஞ்சுகளைப் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை விரைவாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் .

கடற்றொழில் உபகரணங்களின் விலை உயர்வு குறித்து நிதியமைச்சகத்துடன் கலந்துரையாட ஒரு துணைக் குழு நியமிக்கப்படும் என்றார்.

இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து தொடர்ச்சியாக ஆராய்ந்து, கடற்றொழில் சமூகம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு விரைவான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள் தெரிவித்தார்.

இச்சந்தர்ப்பத்தில், பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டெபனி பெர்னாண்டோ, நகர மேயர், மாநகர சபை உறுப்பினர்கள், அமைச்சகத்துடன் இணைந்த அனைத்து நிறுவனங்களின் அதிகாரிகளும், அத்துடன் தொடர்புடைய மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ், கடலோரப் பாதுகாப்புப் படை, கடற்றொழில் மக்கள், கடற்றொழில் சங்கங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டனர்

Tags: நீர்கொழும்புதீர்வு.கடற்றொழிலாளர்களின்பிரச்சினைகளுக்கு
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

”சிவப்பு நிற லேபல்”உடன் வந்தது விடுதலைப்புலிகள் பிரபாகரனின் ஆயுதமா?

அடுத்த செய்தி

ஜனாதிபதி அநுர ஜேர்மன் வணிகமன்றத்துக்குத் தலைமை தாங்கினார்.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.
by கண்ணன்
07/01/2026
0

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்  எனவும்,மேற்கு - வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை...

மேலும்...

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.
by கண்ணன்
02/01/2026
0

இன்று (2) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அலுவலகத்தில் வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் " தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத்...

மேலும்...

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!
by Stills
22/12/2025
0

இன்றைய தினம் (22) வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடைசெய்யுமாறு கோரி பொதுமக்கள்  ஆர்ப்பாட்டப் பேரணி  நடத்தினர். இப்போராட்டத்தை கங்கன்குளம்...

மேலும்...

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள்- வலுக்கும் கண்டனம்

by அரவிந்த்
22/12/2025
0

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரைக்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில்  நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு சைவ மகா சபை  கண்டனம்...

மேலும்...

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!
by கண்ணன்
19/12/2025
0

சென்னை, நீலாங்கரை: ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பாகவும், இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரவையின் (Tamil National...

மேலும்...

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!
by கண்ணன்
18/12/2025
0

புதன்கிழமை (17) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள்...

மேலும்...
அடுத்த செய்தி
ஜனாதிபதி அநுர ஜேர்மன் வணிகமன்றத்துக்குத் தலைமை தாங்கினார்.!

ஜனாதிபதி அநுர ஜேர்மன் வணிகமன்றத்துக்குத் தலைமை தாங்கினார்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

03/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

02/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

01/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.