ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இஸ்ரேலிற்கு எதிராக ஜோபைடன் முன்வைத்துள்ள கடும் குற்றச்சாட்டு காசாமீதான கண்மூடித்தனமான குண்டுவீச்சு காரணமாக இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவை இழக்க தொடங்கியுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பாதுகாப்பு விடயத்தில் அமெரிக்காவை நம்பியிருக்கலாம் ஆனால் தற்போது அது அமெரிக்காவையும் தாண்டியவிடயம் ஐரோப்பிய ஒன்றியமும் முழுஉலகமும் இஸ்ரேலிற்கு ஆதரவளிக்கின்றது என தெரிவித்துள்ளபைடன் எனினும் கண்மூடித்தனமான குண்டுவீச்சு காரணமாக இஸ்ரேல் உலகின் ஆதரவை இழக்கதொடங்கி யுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் ஹமாசிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது குறித்து எந்த கேள்வியும் இல்லை எனவும் தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி அதற்கான முழு உரிமையும் இஸ்ரேலிற்குள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும்நிகழ்வு லண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா
ஞானதீபம் கலைவிழா: ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும் நிகழ்வுலண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா ஈழத்தமிழர்கள் தமது கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டைப்...
மேலும்...



















