இரணைதீவிற்கு அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட இரண்டு இந்திய இழுவைப்படகுகளையும் அதிலிருந்த 14 இந்திய மீனவர்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) அதிகாலை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 19ம் ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும் கிளிநொச்சி மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து குறித்த 14 பேருக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.