இன்று திங்கட்கிழமை (16) இடம்பெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத், சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளையும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதாகோபிநாத் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது கருத்து வெளியிட்ட இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான வலுவான ஈடுபாட்டை ஆதரித்தார். இது அண்மைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு உதவியாக உள்ளது என்றும் இந்த கூட்டாண்மை வலுவான பொருளாதார அடிப்படைகளுக்கு அடித்தளமிட உதவியதாகவும் நிலைத்தன்மை மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கு அவசியமென்றும் குறிப்பிட்டார்.
இலங்கை மத்திய வங்கியில் இச் சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையின் மீட்பு பாதை கடன் மற்றும் நிர்வாகம்’ என்ற தொனிப்பொருளில் கலந்துரையாட உள்ளனர்.