Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இந்தியா

அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ரெய்டுக்கு இதுதான் காரணம் !

Stills by Stills
03/11/2023
in இந்தியா
0
அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் ரெய்டுக்கு இதுதான் காரணம் !
0
SHARES
6
VIEWS
ShareTweetShareShareShareShare

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களிலும் ரெய்டு நடந்து வருகிறது. இந்த ரெய்டுக்கான காரணமாக அரசியல் விமர்சகர்கள் சில தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் திமுக புதியதாக ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளின் தலையீடுகள் மாநிலத்தில் அதிக அளவு இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொங்கு மண்டலத்தில் திமுகவை வளர்ப்பதில் செந்தில் பாலாஜி காட்டிய தீவிரம் கொஞ்சம் நஞ்சமல்ல. கோவை உட்பட கொங்கு மண்டலத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு இவர் இடையூறாக இருந்ததால்தால் பாஜக ரெய்டு நடத்தி இவரை தூக்கியது என்று விமர்சிக்கப்படுகிறது.

அதேபோல அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களிலும் சமீபத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. இவருக்கு ரூ.50,219.37 கோடி சொத்து இருக்கும் என சொல்லப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக வருமான வரித்துறையினர் ரெய்டில் ஈடுபட்டனர். ஜெகத்ரட்சகன் தனக்கு சொந்தமான கல்வி, தொழில் நிறுவனங்கள் மூலம் ஈட்டிய வருவாயை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்த நிலையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது. இந்நிலையில் இதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது நபராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை வருமான வரித்துறை குறி வைத்திருக்கிறது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில்தான் இந்த ரெய்டு மேற்கொள்ளப்படுவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

காலை 7 மணி முதல் திருவண்ணாமலையில் உள்ள அவரது வீடு, அருணை மருத்துவக் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரிகள் மற்றும் சென்னையில் அவருக்கு தொடர்புடையவர்கள் வீடுகளிலும் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. மேலும் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொறியாளர்கள் இல்லங்களிலும் இந்த ரெய்டு நடந்து வருகிறது.

இந்த ரெய்டு குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், “பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை என்பது அதிகம் பணம் புழங்கும் துறை. இதில் நிச்சயம் ஏதாவது முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பிருக்கும் என்பதன் அடிப்படையில்தான் இந்த ரெய்டு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான ஆதாரங்களை வருமான வரித்துறையினர் ஏற்கெனவே திரட்டியிருப்பார்கள். அதேபோல திமுகவுக்கு நிதி வழங்கும் முக்கிய நிதி ஆதாரமாக எ.வ.வேலு இருக்கிறார்.
கலைஞர் டிவியின் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பதுவரை இவர்தான் பார்த்துக்கொண்டிருக்கிறார். இதற்கான நிதி இவருக்கு எங்கிருந்து வருகிறது? இதில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றிருக்கிறதா என்கிற கோணத்தில் ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கட்சிக்கான நிதி ஆதாரங்களை முடக்குவது கூட இந்த ரெய்டின் முக்கிய நோக்கமாக இருக்கலாம். வருமான வரித்துறையினர் சோதனை என்பது வழக்கமான ஒன்றுதான். கடந்த காலங்களில் அதிமுக அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களிலும் இது நடந்திருக்கிறது. ஆனால் தற்போது பிரச்னை என்னவெனில் வருமான வரித்துறையினரை தொடர்ந்து அமலாக்க துறையினரும் ரெய்டுக்கு வருவார்கள். எனவேதான் இந்த ரெய்டுகள் குறித்து பலத்த சந்தேகங்கள் எழுகின்றன. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இந்த ரெய்டு சில முக்கிய நிதி ஆதரங்களை முடக்கும் நோக்கி நடத்தப்படலாம்” என்று கூறியுள்ளனர். முன்னதாக கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரும் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: பொதுப்பணித்துறைஅமைச்சர் எ.வ.வேலுவீடுரெய்டு
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

ரேசன் கடைகளுக்கு நவ.10 வரை லீவு இல்லை இன்று முதல் தீபாவளி விநியோகம்..!

அடுத்த செய்தி

தேர்தல் சட்டங்களை திருத்துவதற்காக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் விசாரணைக் குழு !

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

இந்தியர்கள் வெளியேறுவதற்கு ஈரான் வான்வெளி தடையை நீக்கியது.!

இந்தியர்கள் வெளியேறுவதற்கு ஈரான் வான்வெளி தடையை நீக்கியது.!
by Stills
21/06/2025
0

கடந்த 10 நாட்களாக ஈரான் இஸ்ரேல் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் போர்...

மேலும்...

மோடி டொனால்டு டிரம்பின் “டின்னர்” அழைப்புக்கு மறுப்பு தெரிவிப்பு.

மோடி டொனால்டு டிரம்பின் “டின்னர்” அழைப்புக்கு மறுப்பு தெரிவிப்பு.
by Stills
21/06/2025
0

நேற்று பிரதமர் மோடி  ஒடிசா மாநிலம் சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற விழாவில்  மோடி பேசியதாவது இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வ தற்காக இரண்டு...

மேலும்...

படையாண்டமாவீரா’ திரைப்படத்தின்இசைவெளியீட்டுவிழா

by அரவிந்த்
01/06/2025
0

வ. கெளதமன் இயக்கி நடிக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் இனிதே நடைபெற்றது. "வன்னிக்காடு" படைப்பாக்குவதே தனது...

மேலும்...

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?
by Stills
19/05/2025
0

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். டிராவல் யூ டியூபர் என்ற பெயரில் நாடு முழுக்க பல இடங்களுக்கு பயணித்த...

மேலும்...

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

by அரவிந்த்
09/05/2025
0

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்!. _ வ. கௌதமன்...

மேலும்...

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

by அரவிந்த்
16/04/2025
0

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்க! இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஜாட் திரைப்படம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தாயக விடுதலைக்காகப் போராடியவிடுதலைப் போராளிகளை...

மேலும்...
அடுத்த செய்தி
தேர்தல் சட்டங்களை திருத்துவதற்காக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் விசாரணைக் குழு !

தேர்தல் சட்டங்களை திருத்துவதற்காக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் விசாரணைக் குழு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

27/06/2025
இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.

இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.

27/06/2025
கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள  அறிவிப்பு!

கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

24/06/2025
நடைமுறைக்கு வந்துள்ளது யுத்த நிறுத்தம் என டிரம்ப் தெரிவிப்பு.

நடைமுறைக்கு வந்துள்ளது யுத்த நிறுத்தம் என டிரம்ப் தெரிவிப்பு.

24/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.