இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கண்டி, பல்லேகெல விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது இன்று புதன்கிழமை (14) கண்டி பல்லேகல மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக இடம்பெறுகின்றது.இலங்கை அணிக்கு எதிரான 3 ஆவதும் இறுதியுமான இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்படுத்தாட தீர்மானித்துள்ளது.3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலிரு போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்று தொடரை தன்வசப்படுத்தியுள்ளது.
இலங்கை அணியில் வனிந்து ஹசரங்க மற்றும் தீக்ஷ்சன ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டு அணிக்குள் துனித் வெல்லாலகேயும் அகில தனஞ்சயவும் இணைக்கப்பட்டுள்ளனர்.இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.