Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு விளையாட்டு

ஜய்ஸ்வால் கன்னிச் சதம் ; அஷ்வின் 10 விக்கெட் குவியல் : மே. தீவுகளை துவம்சம் செய்தது இந்தியா

Stills by Stills
15/07/2023
in விளையாட்டு
0
ஜய்ஸ்வால் கன்னிச் சதம் ; அஷ்வின் 10 விக்கெட் குவியல் : மே. தீவுகளை துவம்சம் செய்தது இந்தியா
0
SHARES
1
VIEWS
ShareTweetShareShareShareShare

டொமினிக்கா விண்ட்சர் பார்க்  விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வினின்  10 விக்கெட் குவியல் உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகளை ஓர் இன்னிங்ஸ் மற்றும் 141 ஓட்டங்களால் இந்தியா வெற்றிகொண்டது.

அஷ்வினின் துல்லியமான பந்துவீச்சுடன் 21 வயதான இளம் அறிமுக வீரர் யஷஸ்வி ஜய்ஸ்வால் குவித்த கன்னிச் சதமும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்களிப்பு செய்திருந்தது.

ஜய்ஸ்வால் அனுபவசாலி போல் அற்புதமாக துடுப்பெடுத்தாடி கன்னிச் சதத்தை பூர்த்தி செய்தார்.

387 பந்துகளை எதிர்கொண்ட ஜய்ஸ்வால் 16 பவுண்டறிகள், 1 சிக்ஸ் உட்பட 171 ஓட்டங்களைக் குவித்து இந்தியாவை பலப்படுத்தியிருந்தார்.

இந்தப் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் முழு நேரத்தைத் தொட்டபோது மேற்கிந்தியத் தீவுகள் 9 விக்கெட்களை இழந்திருந்ததால் போட்டியில் ஒரு முடிவை எட்டும் வகையில் 30 நிமிடங்கள் மேலதிகமாக வழங்கப்பட்டது. ஆனால், 11 நிமிடங்களுக்குள் கடைசி விக்கெட் வீழ்த்தப்பட முதலாவது டெஸ்ட் போட்டி 3 நாட்களில் நிறைவுக்கு வந்தது.

அத்துடன் மேற்கிந்தியத் தீவுகளால் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 115 ஓவர்களே தாக்குப்பிடிக்க முடிந்தது.

இந்த வெற்றியுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 – 25 பருவத்துக்கான முதலாவது வெற்றிப் புள்ளிகளை இந்தியா சம்பாதித்துக்கொண்டது.

கடந்த புதன்கிழமை ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த மேற்கிந்தியத் தீவுகள் எதிரணியின் சுழல்பந்துவீச்சுகளுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 50.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 130 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் 6 வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளை பெற்ற போதிலும், இருவர் மாத்திரமே 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர்.

அஷ்வின் 5 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 3ஆம் நாள் ஆட்டத்தில் மதிய போசன இடைவேளைக்கு சற்று பின்னர் 5 விக்கெட் இழப்புக்கு 421 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது முதலாவது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

ஜய்ஸ்வாலும் ரோஹித் ஷர்மாவும் முதலாவது விக்கெட்டில் 229 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய ஆரம்ப ஜோடியினரால் பகிரப்பட்ட அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும். அத்துடன் மேற்கிற்தியத் தீவுகளுக்கு எதிராக சகல விக்கெட்களுக்குமான இந்தியாவின் 4ஆவது அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும்.

ரோஹித் ஷர்மா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது 10ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்தார். விராத் கோஹ்லி 29ஆவது அரைச் சதத்தைப் பெற்றதுடன் ஜய்ஸ்வாலுடன் 3ஆவது விக்கெட்டில் 110 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 271 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் அஷ்வினின் பந்துவீச்சில் சிக்கி 50.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இரண்டு இன்னிங்ஸ்களிலும் 5 விக்கெட் குவியல்களை பதிவுசெய்த அஷ்வின் இதுவரை 93 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 34 தடவைகள் 5 விக்கெட் குவியல்களைப் பதிவுசெய்துள்ளார்.

இப்போட்டியில் 131 ஓட்டங்களுக்கு 12 விக்கெட்களை அஷ்வின் வீழ்த்தினார்.

அஷ்வினுக்கு 500 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்திசெய்வதற்கு இன்னும் 14 விக்கெட்கள் தேவைப்படுகிறது.

எண்ணிக்கை சுருக்கம்

மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: 150 (அலிக் அத்தேன்ஸ் 47, க்ரெய்க் ப்றத்வெய்ட் 20, ரவிச்சந்திரன் அஷ்வின் 60 – 5 விக்., ரவிந்த்ர ஜடேஜா 26 – 3 விக்.)

இந்தியா 1ஆவது இன்: 421 – 5 விக். டிக்ளயார்ட் (யஷஸ்வி ஜய்ஸ்வால் 171, ரோஹித் ஷர்மா 103, விராத் கோஹ்லி 76, ரவிந்த்ர ஜடேஜா 37 ஆ.இ., ரக்கீம் கோர்ன்வோல் 32 – 1 விக்.)

மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: 130 (அலிக் அல்தேன்ஸ் 28, ஜேசன் ஹோல்டர் 20 ஆ.இ., ரவிச்சந்திரன் அஷ்வின் 71 – 7 விக்., ரவிந்த்ர ஜடேஜா 38 – 2 விக்.)

ShareTweetShareShareSendSend
முன் செய்தி

நெருக்கமடையும் இருதரப்பு உறவு

அடுத்த செய்தி

“பயங்கரவாதி” பிரித்தானியாவில் தமிழரின் உன்னத படைப்பு…

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் நரேந்திரமோடி தந்த ரியாக்சன்…. நடந்தது என்ன?

பிரதமர் நரேந்திரமோடி தந்த ரியாக்சன்…. நடந்தது என்ன?
by Stills
20/11/2023
0

13 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரில் 19 ஆம் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற    இறுதிப் போட்டியில்  இந்திய அணியை வெற்றி கொண்டு ஆறாவது தடவையாக ...

மேலும்...

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்து சம்பியன்!.

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்து சம்பியன்!.
by Stills
05/10/2023
0

48 வருட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் பவுண்டறிகளின் எண்ணிக்கை அடிப்படையில் சம்பியன் பிரகடனப்படுத்தப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.இங்கிலாந்திலும் வேல்ஸிலும் கூட்டாக நடத்தப்பட்ட 12ஆவது உலகக் கிண்ண...

மேலும்...

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சொல்லி அடித்த கில்லி.

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சொல்லி அடித்த கில்லி.
by Stills
02/10/2023
0

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த செப். 23-ஆம் தேதி தொடங்கியது. அக்டோபர் 8 வரை நடைபெறும். 61 பிரிவுகளில் நடைபெறும் 40...

மேலும்...

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றதா? : முன்னாள் அணித்தலைவர் அர்ஜுண கிளப்பும் சந்தேகங்கள்.

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றதா? : முன்னாள் அணித்தலைவர் அர்ஜுண கிளப்பும் சந்தேகங்கள்.
by Stills
23/09/2023
0

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்க. இறுதிப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை தமக்கு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும் புரவெசி பலய என்ற...

மேலும்...

இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ப்பு!

இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ப்பு!
by Stills
17/09/2023
0

9 ஆண்டுகளுக்குப் பின் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் அணி பங்கேற்கிறது. சுனில் சேத்ரி தலைமையில் 17 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின்...

மேலும்...

பிரீமியர் லீகுக்குள் நுழையுமா? லெஸ்டர் சிட்டி.!

பிரீமியர் லீகுக்குள் நுழையுமா? லெஸ்டர் சிட்டி.!
by Stills
17/09/2023
0

லெஸ்டர் சிட்டி - இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து கிளப். 8 ஆண்டுகளுக்கு முன் அந்த அணி அவ்வளவு பிரபலமானது இல்லை. பிரீமியர் லீகில் நிலைத்திருப்பதே அவர்களுக்கு ஒவ்வொரு...

மேலும்...
அடுத்த செய்தி
“பயங்கரவாதி” பிரித்தானியாவில் தமிழரின் உன்னத படைப்பு…

"பயங்கரவாதி" பிரித்தானியாவில் தமிழரின் உன்னத படைப்பு...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

20/05/2025
மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

19/05/2025
யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

19/05/2025

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.