Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு விளையாட்டு

பிரதமர் நரேந்திரமோடி தந்த ரியாக்சன்…. நடந்தது என்ன?

Stills by Stills
20/11/2023
in விளையாட்டு
0
பிரதமர் நரேந்திரமோடி தந்த ரியாக்சன்…. நடந்தது என்ன?
0
SHARES
8
VIEWS
ShareTweetShareShareShareShare

13 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரில் 19 ஆம் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற    இறுதிப் போட்டியில்  இந்திய அணியை வெற்றி கொண்டு ஆறாவது தடவையாக  சாம்பியன் கிண்ணத்தை அவுஸ்திரேலியா அணி கைப்பற்றியுள்ளது.

சுமர் ஒன்றரை இலட்சம் இரசிகர்கள் குழுமியிருந்து  அகமாதாபாத் மோடி  சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், எந்த தடுமாற்றமும் இல்லாமல் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி  இந்திய மண்ணிலேயே இந்திய அணியை தோற்கடித்து கிண்ணத்தை வென்ற  அவுஸ்திரேலிய அணியை உலகம் முழுதும் உள்ள கிரிக்கெட் இரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இப்போட்டியைப் பார்வையிட  இந்திய  பிரதமர் நரேந்திரமோடியும் வருகை தந்திருந்தமை முக்கிய விடயம்.  சாம்பியன் கிண்ணம் வென்ற அவுஸ்திரேலிய அணியின்  தலைவர் பட் கம்மின்சுக்கு  பிரதமர் மோடி வெற்றிக்கிண்ணத்தை வழங்கினார். எனினும், கிண்ணத்தை வழங்கிய பிறகு அவருடன் கைகுலுக்காமல் ஒரு வார்த்தை தானும் பேசாமல் அவர் திரும்பிச் செல்வதைப்போன்ற வீடியோ பதிவொன்று சமூக ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.  மோடி செய்தது என்ன? இதையடுத்து ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு பிரதமர் மோடி கோப்பையை கொடுத்தார். இந்த கோப்பை வழங்கும் நிகழ்வில் நடந்த சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது. நேற்று பாட் கம்மின்ஸ் மேடையில் இருந்த போது அவரிடம் மோடி கோப்பையை வழங்கினார். அதன்பின் அவரிடம் கை கொடுத்தார். பின் பக்கம் வெடிகள் வெடித்தது. மோடி போட்டோவிற்கு போஸ் கொடுக்காமல் அங்கிருந்து உடனே வெளியேறினார். சட்டென மோடி கிளம்பியதை பார்த்து.. கம்மின்ஸ் குழம்பினார். மற்ற வீரர்கள் வரும் வரை மோடி நிற்கவில்லையே. எல்லா வீரர்களுடனுடன் போஸ் கொடுக்கவில்லையே என்பது போல கம்மின்ஸ் உற்று பார்த்தார். ஆனால் கீழே சென்ற பிரதமர் மோடி அதன்பின் ஆஸ்திரேலியா வீரர்களை சந்தித்தார். மோடி ரியாக்சன் கீழே சென்ற பிரதமர் மோடி.. அங்கே இருந்த ஆஸ்திரேலியா வீரர்களிடம் கைகொடுத்தார். கடந்த 2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தது.
அப்போது சரத் பவார் பிசிசிஐ இயக்குனராக இருந்தார். அவர் கோப்பையை கொடுக்க மேடைக்கு வந்த போது ரிக்கி பாண்டிங் அவரிடம்.. என் கையில் கோப்பையை கொடு என்பது போல கையை சைகை செய்து அவரை அவமானப்படுத்தினார். அதன்பின் மேடையில் இருந்தும் அவரை நகர்த்தி தள்ளி கொண்டு செல்வார்கள். அது பெரிய அளவில் விவாதத்திற்கு உள்ளானது. நேற்று மோடிக்கும் அப்படி நடந்து இருக்குமோ என்ற விவாதம் ஏற்பட்டது. ஆனால் மோடி இதை தவிர்த்து மேடையில் இருந்து முன்கூட்டியே கீழே இறங்கினார்.

பிரதமர் மோடி பேசுவார் என எதிர்ப்பார்த்து மேடையில் கிண்ணத்துடன் நின்ற அவுஸ்திரேலிய அணித்தலைவர் கம்மின்ஸ் மிகவும் தர்மசங்கடமான நிலைக்குச் சென்றது போலவும், அவர் தட்டுத்தடுமாறி சிரித்த முகத்துடன் பிரதமர் மோடி செல்வதையே பார்த்துக்கொண்டிருந்து விட்டு மீண்டும் சகஜ நிலைமைக்கு திரும்புவது போன்றும் அந்த வீடியோவில் உள்ளது.

இந்தியா கிண்ணத்தை சுவீகரிக்க முடியாது போன காரணத்தினால்  பிரதமர் மோடி அவ்வாறு நடந்து கொண்டாரா அல்லது வேறு எதுவும் அவசர பணி காரணமாக அவர்  மேடையை விட்டு அகன்றாரா  என்ற கேள்விகளோடு அவரது  செய்கையை  விமர்சித்து பலரும் தமது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் நடந்த விடயமோ வேறு. பிரதமர் மோடி கிண்ணத்தை வெற்றிக் கிண்ணத்தை வழங்கி விட்டு மேடையை விட்டு செல்வதற்கு முன்பு உள்ள காணொளியை அவதானித்தால் உண்மை விளங்கும்.

இறுதிக் கிண்ண விருது வழங்கல் நிகழ்ச்சியை ரவி சாஸ்த்ரி தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தார். பொதுவாக குழுவினர்  போட்டிகளில் விருது வழங்கல் நிகழ்வில் ஒரு சம்பிரதாயம் உள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற அணியின் சகல வீரர்களுக்கம் பதக்கங்கள் வழங்கப்படும் போது இறுதியாகவே அணித்தலைவருக்கு வழங்கப்படும். அவர் மேடையில் இறுதியாக பதக்கத்தைப் பெற்ற பிறகு அவரது கைகளில்  வெற்றிக்கிண்ணம் வழங்கப்படும். பின்பு அவரோடு ஏனைய வீரர்கள் ஒன்றிணைந்து அணிவகுத்து நிற்பர்.

இது கிரிக்கெட் போட்டிகளிலும் வழமையானதொன்று. சாம்பியனான அவுஸ்திரேலிய அணியினர் அனைவருக்கும் பதக்கங்கள் அணிவிக்கப்படுகின்றன. இறுதியாக அணித்தலைவர் பட் கம்மின்ஸ் பதக்கத்தை அணிந்து கொண்டு ரவி சாஸ்த்ரி இருக்கும் மேடைக்கு வருகின்றார். அவர் சம்பிரதாயப்படி  இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று களத்தடுப்பை தேர்ந்தெடுக்க காரணமென்ன, அணியில் மூன்று விக்கட்டுகள் குறைந்த ஓட்டங்களில் வீழ்ந்ததையடுத்து களத்தில் நிற்கும் இருவருக்கு நீங்கள் அனுப்பிய தகவல் என்ன போன்ற கேள்விகளை கேட்கிறார்.

அதற்கு பொறுமையாக பதிலளிக்கின்றார் கம்மின்ஸ். பின்பு வெற்றிக்கிண்ணத்தை வழங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடியை மேடைக்கு அழைக்கின்றார் ரவி சாஸ்த்ரி. மோடியோடு இறுதிப் போட்டி நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்த அவுஸ்திரேலிய நாட்டின் பிரதி பிரதமர்   ரிச்சர்ட் மார்ல்ஸும்    மேடைக்கு வருகின்றார். பட் கம்மின்சை மகிழ்ச்சியோடு கைலாகு கொடுத்து மேடைக்கு முன்பாக அழைத்து வருகின்றார் பிரதமர் மோடி. பின்பு கிண்ணத்தை வழங்கும் போது சவாலில் வென்றவருக்கு வழங்கப்படும் விதத்தில் கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவிக்கின்றார்.

பின்பு மேடைக்குக் கீழே நிற்கும் ஏனைய அவுஸ்திரேலிய அணி வீரர்களை வாழ்த்துவதற்காக அவுஸ்திரேலிய பிரதி பிரதமர், மோடியை  அழைத்து செல்கின்றார். அவுஸ்திரேலிய அணி வீரர்கள் அனைவருக்கும் மோடி கைலாகு கொடுத்து வாழ்த்து தெரிவிக்கின்றார். அவர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு வருகை தந்து பட் கம்மின்சுடன் இணைந்து கிண்ணத்தோடு மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

இதுவே இடம்பெற்ற நிகழ்வாகும். எனினும், இந்திய அணி தோல்வியுற்றமையை கொண்டாடி வரும் சிலர் பாதி காணொளியை சமூக ஊடகங்களில் பதிவேற்றி இந்தியா வெற்றி பெறாததால் பிரதமர் மோடி அவுஸ்திரேலியா அணித்தலைவரை அவமதித்து விட்டு செல்கிறார் என போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Tags: பிரதமர்இந்தியநரேந்திரமோடிபற்றிபோலியானபிரசாரங்கள்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி ஆரம்பம்-சுமந்திரன்.!

அடுத்த செய்தி

சீன ஜனாதிபதியின் விசேட தூதுக்குழுவினர் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் சந்திப்பு.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்து சம்பியன்!.

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்து சம்பியன்!.
by Stills
05/10/2023
0

48 வருட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் பவுண்டறிகளின் எண்ணிக்கை அடிப்படையில் சம்பியன் பிரகடனப்படுத்தப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.இங்கிலாந்திலும் வேல்ஸிலும் கூட்டாக நடத்தப்பட்ட 12ஆவது உலகக் கிண்ண...

மேலும்...

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சொல்லி அடித்த கில்லி.

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சொல்லி அடித்த கில்லி.
by Stills
02/10/2023
0

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த செப். 23-ஆம் தேதி தொடங்கியது. அக்டோபர் 8 வரை நடைபெறும். 61 பிரிவுகளில் நடைபெறும் 40...

மேலும்...

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றதா? : முன்னாள் அணித்தலைவர் அர்ஜுண கிளப்பும் சந்தேகங்கள்.

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றதா? : முன்னாள் அணித்தலைவர் அர்ஜுண கிளப்பும் சந்தேகங்கள்.
by Stills
23/09/2023
0

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்க. இறுதிப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை தமக்கு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும் புரவெசி பலய என்ற...

மேலும்...

இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ப்பு!

இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ப்பு!
by Stills
17/09/2023
0

9 ஆண்டுகளுக்குப் பின் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் அணி பங்கேற்கிறது. சுனில் சேத்ரி தலைமையில் 17 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின்...

மேலும்...

பிரீமியர் லீகுக்குள் நுழையுமா? லெஸ்டர் சிட்டி.!

பிரீமியர் லீகுக்குள் நுழையுமா? லெஸ்டர் சிட்டி.!
by Stills
17/09/2023
0

லெஸ்டர் சிட்டி - இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து கிளப். 8 ஆண்டுகளுக்கு முன் அந்த அணி அவ்வளவு பிரபலமானது இல்லை. பிரீமியர் லீகில் நிலைத்திருப்பதே அவர்களுக்கு ஒவ்வொரு...

மேலும்...

இலங்கையை தோற்கடித்து சுப்பர் 4 கிரிக்கெட் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.!

இலங்கையை தோற்கடித்து சுப்பர் 4 கிரிக்கெட் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.!
by Stills
13/09/2023
0

இலங்கையை 41 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இந்தியா, முதலாவது அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசிய கிண்ண சுப்பர்...

மேலும்...
அடுத்த செய்தி
சீன ஜனாதிபதியின் விசேட தூதுக்குழுவினர் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் சந்திப்பு.!

சீன ஜனாதிபதியின் விசேட தூதுக்குழுவினர் பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் சந்திப்பு.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025

புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா சிறப்பு மலர்

17/04/2025

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

16/04/2025
மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

11/03/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.