Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இலங்கை

150,000 தமிழ் மக்கள் உடுத்த உடையுடன் வாழ்விடங்களை விட்டு அகற்றப்பட்டநாட்கள் …

Stills by Stills
24/07/2023
in இலங்கை
0
150,000 தமிழ் மக்கள் உடுத்த உடையுடன் வாழ்விடங்களை விட்டு அகற்றப்பட்டநாட்கள் …
788
SHARES
5.1k
VIEWS
ShareTweetShareShareShareShare

 

என்றும் மறக்க முடியாத நாள் ஜூலை 23, இன்று, புனிதமான கறுப்பு ஜூலையின் 40ஆம் ஆண்டின் நிறைவை நினைவு கூர்ந்து  கொண்டிருக்கும் வேளையில், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களை நினைவுகூறும் முகமாகவும், தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இவ்வினப்படுகொலையின் நீடித்த தாக்கத்தை பிரதிபலிக்கும் முகமாகவும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுடன் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.

1983ம் ஆண்டு ஜூலை 23 இலிருந்து, ஜூலை 30 வரை அரச ஆதரவுடனான சிங்களக் காடையர்கள்  18,000 தமிழர் வீடுகளை அழித்ததுடன் 3,000 தமிழர்களை உயிரோடு எரித்தும் வெட்டியும் சுட்டும் கொலை செய்து ரசித்தனர்.  5,000 தமிழ் வணிக வளாகங்களை  எரித்து நாசமாக்கியது . சிங்கள பௌத்தகாடையர்கள் , பல தமிழ் பெண்களை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்தனர். உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஒரு வாரத்திற்குள் 90,000இலிருந்து 150,000 தமிழர்கள் உடுத்த உடையுடன் யாழ்ப்பாணத்திற்கு இடம்பெயர்ந்தனர்.

நான்கு தசாப்தங்களுக்குப் பின்பும் கறுப்பு ஜூலைக்கான தண்டனை வழங்கப்படாத நிலையே தொடர்கிறது. எந்தவொரு தனிநபரோ, அல்லது இலங்கை அரசோ கறுப்பு ஜூலையின் போது நடந்த அட்டூழியங்களுக்கு பொறுப்பேற்கவில்லை. இவ்வாறான பொறுப்புக்கூறாத்தன்மையே, 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை உட்பட மேலும் பல மனித உரிமை மீறல் குற்றங்களை செய்ய இலங்கை அரசாங்கத்திற்கு தைரியத்தை வழங்கியது. இதில் கணக்கில் வராத பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட, அல்லது கொல்லப்பட்ட 70,000 இலிருந்து 169,796 தமிழர்கள் உள்ளனர்.

இன்றைய தலைமுறையினருக்கு நினைவு படுத்த மறந்து போன கறுப்பு ஜூலை நிகழ்வானது ,   வெறுமனே வன்முறைச் செயல்கள் மட்டும் அல்ல; அவை அனைத்து அரச கட்டமைப்புகளிலும் வேரூன்றிப்போய்விட்ட, கட்டுப்பாடற்ற சிங்கள-பௌத்த தேசியவாத எண்ணத்தால் வளர்க்கப்பட்ட கட்டமைக்கப்பட்டதும், உள்நோக்கமுடையவையுமாகும். கலவரம் நடந்த காலப்பகுதியில், அரசாங்கம், சிங்களக் கும்பல்களுக்கு வாக்காளர் பட்டியல்கள் மற்றும் தமிழர் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் முகவரிகளை வழங்கியதுடன், சிங்களக் கும்பல்களை அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்களில் கொழும்பைச் சுற்றிக் கொண்டு சென்றது. வன்முறை தொடங்கி மூன்று நாட்களில், அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டதாவது: “அங்கு (வடக்கில்) அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறீர்களோ இவர்கள் (சிங்களவர்கள்) இங்கு மகிழ்ச்சியாக இருப்பார்கள்… உண்மையில் நான் தமிழர்களை பட்டினி போட்டால் சிங்களவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.” கறுப்பு ஜூலையானது 26 வருட கால ஆயுதப் போரின் அவலத்தை முன்கணித்தது மட்டுமன்றி, அதிகளவான தமிழர்களை அவர்கள் தாயகத்திலிருந்து வெளியேறவும் தூண்டியது. கறுப்பு ஜூலையின் வடுக்கள் மற்றும் அதன் பாரிய அளவிலான தாக்கங்கள் தமிழ் சமூகத்தினூடேயும் அதன் கூட்டு நினைவுகளூடேயும் தொடர்ந்து எதிரொலிக்கின்றது.

கடந்த கால அட்டூழியங்களை நிவர்த்தி செய்து, சமூகங்களிடையே மாற்றத்தைக் கொண்டுவர இவ்வாண்டு, அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை முன்மொழிந்தது. கறுப்பு ஜூலை பிரச்சினை நடந்ததிலிருந்து, இதேபோன்ற பல ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் பயனற்றுப்போனத்துடன், பரிகாரம் அல்லது பொறுப்புக்கூறலை வழங்கவில்லை. சுதந்திரமற்ற, பக்கச்சார்புமிக்க, மற்றும் அர்த்தமுள்ள நீதியை வழங்கத் தவறிய இது போன்ற கடந்த கால தோல்வியடைந்த ஆணைக்குழுக்களைக் கருத்திற்கொண்டு, சமீபத்தில் முன்மொழியப்பட்ட ஆணைக்குழுவை தமிழ் மக்கள் மிகச்சரியாக நிராகரித்துவிட்டனர். இவ்வாறன ஆணைக்குழுக்கள் அரசுக்கு ஆதவரான நிலைப்பட்டினையே எடுக்கும் என்பது உலகறிந்த உண்மை. இவ்வாறன உள்ளூர் ஆணைக்குழுக்கள்,   40 வருட கண்துடைப்பு நாடகத்தை நடத்தும் அரசின் சதிகளை மீறி தீர்வினை பெற்று தரப்போவதில்லை.

உண்மையான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாத, நல்லிணக்கத்திற்கான வெற்று வாக்குறுதிகளை வழங்கும் அரசாங்கத்தை தமிழர்கள் நம்புவதற்கு எந்தவொரு காரணமும் இல்லை. சர்வதேச சமூகம் தமிழர் இனப்படுகொலையை அடையாளப்படுத்தக் கோரும் சிவில் சமூகம், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஆதரித்து, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிராகரிப்பதில் பாதிக்கப்பட்ட-உயிர் பிழைத்த சமூகத்திற்கு ஆதரவு வழங்குவதோடு, பாரபட்சமற்ற விசாரணைகள் மற்றும் வழக்குகளை உறுதி செய்யக்கூடிய சுதந்திரமான சர்வதேச பொறிமுறைக்கான அவர்களின் கோரிக்கையையையும் ஆதரிக்க வேண்டும். இந்தத் துயர் மற்றும் இழப்புடன்கூடிய வரலாற்றின் மத்தியில், நீதி, பொறுப்புக்கூறல், மற்றும் சுய உறுதிப்பாட்டில் அசைக்க முடியாத முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் சக தமிழர்களுடன் பல சமூக நீதி அமைப்புக்கள் போராடுகின்றன. நீதி கிடைக்க வாய்ப்பற்ற மக்களுக்காகவும் இதனை தெரிந்தும் தெரியாதது போல் நடந்து அயல் நாடுகளுக்கும் இதனை அடிக்கடி வலியுறுத்த வேண்டியது அவசியமாகின்றது.

 

Tags: தமிழர்கள்ஜூலை 2340ஆம் ஆண்டுஇலங்கைசிங்களவர்கள்கொலைஅழிப்பு
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

முருங்கையின் அபூர்வ மருத்துவ குணங்கள்: வீட்டுக்கு ஒரு முருங்கை இருந்தால் போதும் ..

அடுத்த செய்தி

எலான் மஸ்க் அதிரடியாக ட்விட்டர் லோகோவை மாற்றினார்…

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !
by Stills
27/06/2025
0

கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழக  தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த  23 வயதுடைய மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக் குள்ளாகி  உயிரை...

மேலும்...

இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.

இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.
by Stills
27/06/2025
0

நேற்று வியாழக்கிழமை (26) இரவு 10.47 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் "குஷ்" போதைப்பொருளுடன் 38 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரின்பயணப்பொதியில் இருந்து 2 கிலோ 130...

மேலும்...

கீதா கோபிநாத்தின் இலங்கைக்கான முன்னெடுப்பு இறுதித்திட்டம்.!

கீதா கோபிநாத்தின் இலங்கைக்கான முன்னெடுப்பு இறுதித்திட்டம்.!
by Stills
16/06/2025
0

இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணயநிதியத்தின் இறுதி திட்டமாக தற்போது முன்னெடுக்கப்படும் திட்டம் விளங்கவேண்டும் - கீதா கோபிநாத் இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில்...

மேலும்...

கீதா கோபிநாத் -அநுர சந்திப்பு.!

கீதா கோபிநாத் -அநுர சந்திப்பு.!
by Stills
16/06/2025
0

இன்று திங்கட்கிழமை (16) கொழும்பில் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்றைய தினம்...

மேலும்...

வ்ராய் கெலீ பல்தசார் கொழும்பு மாநகர மேயராக தெரிவு.!

வ்ராய் கெலீ பல்தசார் கொழும்பு மாநகர மேயராக  தெரிவு.!
by Stills
16/06/2025
0

கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பை மேற்கொள்ள மேல் மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் எஸ்.கே. ஜயசுந்தர முன்னிலையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது மேயராக தேசிய மக்கள்...

மேலும்...

கீதா கோபிநாத் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலாலை சந்தித்தார்.

கீதா கோபிநாத் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலாலை சந்தித்தார்.
by Stills
16/06/2025
0

இன்று திங்கட்கிழமை (16) இடம்பெறவுள்ள மாநாட்டில்  கலந்து கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு வருகை...

மேலும்...
அடுத்த செய்தி
எலான் மஸ்க் அதிரடியாக  ட்விட்டர் லோகோவை  மாற்றினார்…

எலான் மஸ்க் அதிரடியாக ட்விட்டர் லோகோவை மாற்றினார்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

27/06/2025
இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.

இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.

27/06/2025
கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள  அறிவிப்பு!

கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

24/06/2025
நடைமுறைக்கு வந்துள்ளது யுத்த நிறுத்தம் என டிரம்ப் தெரிவிப்பு.

நடைமுறைக்கு வந்துள்ளது யுத்த நிறுத்தம் என டிரம்ப் தெரிவிப்பு.

24/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.