Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

ரூ.2,484 கோடி சொத்துகளை விட்டுவிட்டு காதலனை கரம்பிடித்த இளம்பெண்.!

Stills by Stills
14/08/2023
in உலகம்
0
ரூ.2,484 கோடி சொத்துகளை விட்டுவிட்டு காதலனை கரம்பிடித்த இளம்பெண்.!
0
SHARES
10
VIEWS
ShareTweetShareShareShareShare

 உலகம் முழுவதும் இரு மனங்களை இணைக்கும் வலுவான சக்தி காதலுக்கே உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. மேலும், எந்தக் காதலும் இனம், மதம், மொழி பார்ப்பது அல்ல. அதனால்தான் இன்றளவிலும் காதல், அனைத்து எல்லைகளையும் வேறுபாடுகளையும் வரையறைகளையும் தாண்டி நிற்கிறது. பல காதலர்களை வாழவைத்தப்படி இருக்கிறது..

மலேசியாவைச் சேர்ந்த மிகப்பெரிய தொழில் அதிபர் கூ கே பெங். மலாயன் யுனைடெட் இண்டஸ்ட்ரீஸின் தலைவராகவும் உள்ளார். கூ கே பெங் 2015 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் மலேசியாவின் 50 பணக்காரர்களில் 44வது இடத்தைப் பிடித்தார். அவரது சொத்தின் நிகர மதிப்பு 300 மில்லியன் (ரூ. 2,484 கோடி) அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவருடைய மனைவி பாலின் சாய். இவர் முன்னாள் மிஸ் மலேசியா அழகியாவார். இவர்களின் ஒரே மகள் ஏஞ்சலின் ஃபிரான்சிஸ்.
இவர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தபோது தன்னுடன் படித்த சக மாணவரான ஜெடிடியாவை காதலித்ததாகக் கூறப்படுகிறது. ஏஞ்சலின் ஃபிரான்சிஸ், தனது காதலைப் பற்றி பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காதலர் பற்றிய தகவல்களை அறிந்த ஏஞ்சலின் குடும்பத்தினர், அவருடைய காதலை ஏற்க மறுத்துள்ளனர். பணம், சொத்து, அந்தஸ்து போன்ற காரணங்களைக் காட்டி, ஏஞ்சலின் காதலை அவரது தந்தை புறக்கணித்ததுடன், காதலை கைவிடும்படியும் எச்சரித்துள்ளார்.ஆனால், ஏஞ்சலின் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தார். மணந்தாலும், இறந்தாலும் அது காதலர் ஜெடிடியாவோடுதான் என்ற உறுதியில் இருந்தார். அதுதானே உண்மையில் காதல்! பணத்தைப் பார்த்து வருவதா காதல், மனத்தைப் பார்த்து வருவதுதானே காதல்? அதைத்தானே உலக காவியங்கள் எடுத்துரைக்கின்றன.

காதல் விஷயத்தில் பிடிவாதமாக இருந்த ஏஞ்சலின், ’நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்வோம்’ எனவும் தந்தையிடமும் தெரிவித்துள்ளார். இதனால் தந்தை – மகள் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. தந்தை – மகள் இடையே நிலவும் பாசம் என்பதே அழகானது; அதிசயமானது. ஆனால், அதையே காதலருக்காக விடும்போது, அதைவிடக் கொடுமை வேறெதுவும் இல்லை. காரணம், பாசத்தைவிட அங்கே காதல் சிறந்ததாக தெரிகிறது. அதிலும் உண்மைக் காதல், உயர்ந்தாக இருக்கிறது. உண்மைக் காதலுக்கு எந்த தியாகத்தையும் செய்யலாம் என்கிற நோக்கில் மிகவும் துணிச்சலான முடிவை எடுத்தார் ஏஞ்சலின்.

பேணிக்காத்து வளர்த்தெடுத்த பெற்றோரையும், பெயர் சொல்லுமளவுக்கு பிரபலமாக விளங்கிய சொத்துகள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு, அந்த ஒற்றை உயிருக்காக வீட்டைவிட்டு வெளியேறினார், ஏஞ்சலின். அவர், தாம் விரும்பிய காதலரை எந்த நிலையிலும் கைவிடாது உறுதியளித்தப்படியே கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த காதல் ஜோடி, இறக்கை விரித்து இனிய பொழுதுகளை இத்தனை ஆண்டுகளாய்க் கழித்துவரும் வேளையில், அவர்களுடைய காதல் கதை வெளியுலகுக்குத் தெரியவந்ததே ஏஞ்சலின் பெற்றோரால்தான்.

அவர்களுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிமன்றத்துக்கு சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட அவர்களது அழகான குடும்பக் கதையை எடுத்துரைத்தார். தந்தை தொழிலை கவனித்த நிலையில் குடும்பத்தை தாய் கவனித்ததாகக் கூறி மலரும் நினைவுகளைப் பகிர்ந்தார். தந்தை பணம் சம்பாதிப்பதில் மும்முரமாக இருந்தபோது, குடும்பத்தை பார்த்துக்கொண்ட தனது தாய்க்கு ஆதரவாக ஏஞ்சலின் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் அவர்கள் மீண்டும் ஒன்றாக சேருவார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வேளையில்தான், ஏஞ்சலினின் கதையும் காதலைப் பற்றிய அவரது நேர்மறையான கருத்தும் உலகம் முழுவதும் உள்ள மக்களைக் கவர்ந்துள்ளது. தனது குடும்பத்தின் ரூ.2,484 கோடி சொத்தை புறம்தள்ளி காதலனை கரம்பிடித்த தகவல் உலா வந்து உலகையே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பேசுபொருளாகி இருக்கிறது. இதனால், ஏஞ்சலின் உலகம் முழுவதும் பாராட்டு மழையிலும் நனைந்து வருகிறார்.
Tags: 2484 கோடிசொத்துகாதலனை கரம்பிடித்த இளம்பெண்.!மலேசியா
ShareTweetShareShareSendSend
Previous Post

தமிழீழத்தில் செங்காந்தள் மலரின் சிறப்பும்- நவீன மருத்துவத்தில் புற்று நோயை குணப்படுத்தும் காந்தள் மலரின் அற்புதமும்…

Next Post

நீட் தேர்வில் தோல்வி உயிரை மாய்த்துக் கொண்டஜெகதீஸ்வரன் விரக்தியில் தந்தையும் விபரீத முடிவு!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும்நிகழ்வு லண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா

by அரவிந்த்
21/01/2026
0

ஞானதீபம் கலைவிழா: ஈழத்தமிழர் பண்பாட்டு மரபை உயிர்ப்பிக்கும் பெரும் நிகழ்வுலண்டன், 30 டிசம்பர் 2025 – நிலா பாலா ஈழத்தமிழர்கள் தமது கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டைப்...

Read more

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெருமிதம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பெருமிதம்
by Stills
21/01/2026
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நான் 8 போர்களை நிறுத்தியுள்ளேன். கம்போடியா , தாய்லாந்து இடையே பேச்சுவார்த்தை...

Read more

ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரணம்:வங்கதேசத்தில் பதற்றம் …

ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரணம்:வங்கதேசத்தில் பதற்றம் …
by கண்ணன்
20/12/2025
0

கடந்த சில நாட்களாக வங்கதேசத்தில் அரசியல் சூழல் மிகவும் மோசமடைந்துள்ளது. குறிப்பாக, மாணவர் அமைப்புகளுக்கும் தற்போதைய இடைக்கால அரசுக்கும் இடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், வன்முறைச் சம்பவங்கள்...

Read more

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக 45 ஆண்டுகளாக இயங்கிய 45 அகதி முகாம்கள் மூடல்… காரணம்?

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்காக 45 ஆண்டுகளாக இயங்கிய 45 அகதி முகாம்கள் மூடல்… காரணம்?
by கண்ணன்
18/12/2025
0

பாகிஸ்தானில் சுமார் 40 முதல் 45 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த 42 ஆப்கானிய அகதிகள் முகாம்களை (Afghan Refugee Camps) மூடுவதற்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ள செய்தி,...

Read more

ஜெய்சங்கர் – நெதன்யாகு சந்திப்பு: காசா அமைதித் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு……

ஜெய்சங்கர் – நெதன்யாகு சந்திப்பு: காசா அமைதித் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு……
by கண்ணன்
17/12/2025
0

டிசம்பர் 16-17, 2025 தேதிகளில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுளார். ஜெருசலேமில் நடைபெற்ற இச்சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய உறவை...

Read more

உக்ரைன் – நேட்டோ: போர் நிறுத்தத்திற்காக நேட்டோ கனவை கைவிடத் தயார் – ஜெலன்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு

உக்ரைன் – நேட்டோ: போர் நிறுத்தத்திற்காக நேட்டோ கனவை கைவிடத் தயார் – ஜெலன்ஸ்கியின் அதிரடி அறிவிப்பு
by Stills
15/12/2025
0

ரஷ்யாவுடனான நீண்ட காலப் போரை முடிவுக்குக் கொண்டுவர, உக்ரைன் தனது முக்கிய இலக்கான 'நேட்டோ' (NATO) அமைப்பில் இணைவதை தற்காலிகமாக கைவிடத் தயார் என்று உக்ரைன் அதிபர்...

Read more
Next Post
நீட் தேர்வில் தோல்வி உயிரை மாய்த்துக் கொண்டஜெகதீஸ்வரன் விரக்தியில் தந்தையும் விபரீத முடிவு!

நீட் தேர்வில் தோல்வி உயிரை மாய்த்துக் கொண்டஜெகதீஸ்வரன் விரக்தியில் தந்தையும் விபரீத முடிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.