Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு ஈழம்

தமிழீழத்தில் செங்காந்தள் மலரின் சிறப்பும்- நவீன மருத்துவத்தில் புற்று நோயை குணப்படுத்தும் காந்தள் மலரின் அற்புதமும்…

Stills by Stills
16/08/2023
in ஈழம், இந்தியா
0
தமிழீழத்தில் செங்காந்தள் மலரின் சிறப்பும்- நவீன மருத்துவத்தில் புற்று நோயை குணப்படுத்தும் காந்தள் மலரின் அற்புதமும்…
222
SHARES
738
VIEWS
ShareTweetShareShareShareShare

புற்றுநோய் செல்களை மட்டும் தேடி தேடி அழிக்கும் அரிய கண்டுபிடிப்பை செய்திருக்கிறார்கள் கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள். அவர்கள் கண்டுபிடித்த நானோ துகள் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கிடைத்துள்ளது. இதையடுத்து பலரும் பேராசிரியர்களை பாராட்டி வருகிறார்கள்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் துறை உதவி பேராசிரியையாக கே.எம்.சாரதா தேவி பணியாற்றி வருகிறார். இதே போல் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறை உதவி பேராசிரியராக குருசரவணன் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்கின் சாற்றில் இருந்து புற்றுநோயை குணப்படுத்தும் வெள்ளி நானோ துகள்களை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த வெள்ளி நானோ துகள் கண்டுபிடிப்பிற்காக மத்திய அரசு காப்புரிமை வழங்கி உள்ளது.

இதுதொடர்பாக, பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கண்டுபிடிப்பிற்கான காப்புரிமைக்கு கடந்த 2020ம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி, மத்திய அரசு காப்புரிமை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர்கள் சாரதாதேவி மற்றும் குருசரவணன் ஆகியோர், தற்போது உள்ள புற்றுநோய் மருந்துகள் புற்றுநோய் பாதித்த செல்களை அழிக்கின்றன. அது மட்டுமின்றி புற்றுநோய் பாதிக்காத செல்களையும் இப்போது உள்ள புற்று நோய் மருந்துகள் அழிக்கின்றன.

ஆனால் நாங்கள் செங்காந்தள் செடியின் கிழங்கின் சாற்றில் இருந்து கண்டுபிடித்துள்ள வெள்ளி நானோ துகள்கள், புற்றுநோய் பாதித்த செல்களை ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் எளிதில் கண்டறிந்து அழிக்கிறது. இதன்மூலம் புற்றுநோயில் இருந்து மீள இந்த துகள்கள் உதவுகின்றன. மேலும் புற்றுநோய் தாக்காத செல்கள் அழிக்கப்படாமலும் இந்த வெள்ளி நானோ துகள்கள் பாதுகாக்கின்றன. முதற்கட்டமாக இந்த நானோ துகள்களை எலிக்கு செலுத்தி வெற்றி அடைந்துள்ளோம். மனிதர்களின் பயன்பாட்டிற்கு இந்த நானோ துகள்களை கொண்டு வர சில ஆண்டுகள் பிடிக்கும் என்று அவர்கள் ஆராய்ச்சி குறித்து கூறினார்கள்.

தமிழீழத்தில் செங்காந்தள் மலரின் சிறப்பு…

முதன்முதலில் தமிழீழ விடுதலைப் போரில் வித்தான லெப்.சங்கரின் இறந்த நாளான கார்த்திகை 27 ஐ இறுதித் தினமாகக் கொண்டு ஒரு வாரம் (21-27) மாவீரர் வாரமாக 1989ஆம் ஆண்டு முதல் நினைவு கூறப்பட்டுபட்டு வருகின்றது.

1989 ஆம் ஆண்டு, 1617 மாவீரர்கள் மணலாறு மாவட்டத்தில் இந்திய இராணுவத்தின் கெடுபிடிக்குள்ளும் நள்ளிரவு 12.01 இற்கு தீபங்கள் ஏற்றி மலர் தூவி நினைவு கூறப்பட்டனர். இவர்களை போற்றி செங்காந்தள் மலரான கார்த்திகை பூ இவர்களின் நினைவினை போற்றும் குறியீடாக அங்கு பயன்படுத்தப்பட்டன. பின்னாளில் அதுவே தேசிய பூவாக தமிழீழ நாடு அங்கீகரித்தது.
இந்தப் பின்னணியிலேயே உலக அரங்கில் ஈழத்தமிழினத்தின் குறியீடாக கார்த்திகைப்பூ மிளிர்ந்து நிற்கிறது. அது கமழும் தேசிய வாசத்தை நுகர்வதற்கு பேரினவாதம் தயாராக இல்லை.
சிவப்பு – மஞ்சள் வண்ணங்களைப் பிரதிபலிக்கும் பூவிதழ்களும், மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பாங்கில் அந்தப்பூ விரியும் அழகும் சிறப்புத்தன்மை வாய்ந்தவையாகும். இதை அழகு செய்வதாக கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின்
 
’’கார்த்திகைப் பூவின் நிறத்தில் இவள் கட்டுற சேலைகள் இருக்கும்
கார்த்திகை மாதம் கல்லறை நாளில் தாயவள் மேனி சிலிர்க்கும்’’
என்ற வரிகள் மேலும் சிறப்பை ஊட்டுகின்றது. இந்தக் கார்த்திகைப்பூச் செடியில் கொல்கிசின் எனப்படும் நச்சுத்தன்மை இரசாயனம் காணப்படுகின்றது.இது நஞ்சினை அணியும் புலிகளுக்கு பொருத்தப்பாடுடைய இயல்பாக காட்டியும், சில சமயங்களில் கார்த்திகைக்கிழங்கு தற்கொலைகளுக்கு காரணமாக அமைவதால் கரும்புலிகளோடு ஒப்பிட்டும் பார்க்கமுடியும் சிறப்பு வாய்ந்தது. இது கார்த்திகை மலரின் சிறப்பு.
செங்காந்தள் அல்லது காந்தள் (Gloriosa superba) இலங்கை வழக்கு கார்த்திகைப் பூ என்பது ஒரு காந்தள் பேரினத்தைச் சேர்ந்த தாவரமாகும். இதுஆசியா ஆப்ரிக்கா, ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது. இவை இயற்கையாக ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மலேசியாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது.
இக்கார்த்திகைப்பூ பண்டைத்தமிழ் வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பூக்களில் ஒன்றாக இருந்துவந்துள்ளது. “காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்” என்று காந்தள் மலர் மாலை அணியும் வழக்கத்தைபதிற்றுப்பற்று அத்தாட்சிப்படுத்துகின்றது.“ மரகதமணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மென் விரல்கள்” என்று சிலப்பதிகாரம் உவமை செய்கின்றது.
சேலை அடுக்கத்துச் சுரம்பு என விரிந்த காந்தளுள்ளும்”என தெய்வங்களுக்குக் காந்தள் பூ சூட்டப்பட்டதை அகநானூறு தெளிவு படுத்துகின்றது.
 
“வெய்யறி சிறப்பன் வெளவாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறுபகை”
என்று காந்தள் மலரணிந்து வெறியாடுவதைத் தொல்காப்பியம் சித்தரிக்கின்றது. அத்துடன் தமிழரின் போர்க்கடவுளான முருகனுக்குரிய பூவாக புறப்பொருள் வெண்பாமாலை சிறப்பித்துக் கூறுகின்றது.
ஆகவே மீண்டும் ஒரு புறநானூற்றுத் தமிழனாக தன்னுடைய விடுதலைக்காக போராடி வீழ்ந்த வீரர்களை கல்லறைகளில் இட்டு அவர்களின் ஞாபகார்த்தமாக இக்காந்தள் மலரினை வைத்து ஒரு சில தினங்களையே மாவீரர் வாரமாக கொண்டாடுகின்ற மரபுர  விடுதலைப் புலிகளைத் தவிர வேறு எந்த விடுதலை அமைப்புக்களுக்கோ, அரசுகளுக்கோ இல்லாத தனிச்சிறப்பாகும். உலகிலே எங்கும் இடம்பெறாத வகையில் இந்த வீரக்குழந்தைகளுக்கு ஈழத்தமிழ் மண்ணிலே சிறப்பாக இடம்பெற்று வந்தது
.
ஆகவே உலகப் போரில் உயிர் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் பொப்பி மலரரும்  தமிழீழ விடுதலைப்போரில் உயிர்நீத்த வீரர்களை போற்றும் காந்தள் மலரும் தனிச்சிறப்பை பெறுகின்றன.
 
 
Tags: தாவரவியல் துறைபுற்றுநோய்மாவீரர்கள்தமிழீழம்தமிழீழ விடுதலைப் போர்பேராசிரியர்கள்சாரதாதேவிகுருசரவணன்பாரதியார் பல்கலைக்கழகம்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

ஐந்துலிட்டர் பால் பாக்கெட் விலை உயர்வு ஆவின் நிறுவனம் விளக்கம்!

அடுத்த செய்தி

ரூ.2,484 கோடி சொத்துகளை விட்டுவிட்டு காதலனை கரம்பிடித்த இளம்பெண்.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள  அறிவிப்பு!
by Stills
24/06/2025
0

இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை 01.00 மணி முதல் மூடப்பட்ட ( Aero Space ) வான்வெளி வழி  மீண்டும் திறக்கப்பட்டுள்ளதுடன் அதன் வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு...

மேலும்...

யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடம் போதைப்பாவனை இல்லை.!

யாழ் பல்கலைக்கழக மாணவர்களிடம் போதைப்பாவனை இல்லை.!
by Stills
21/06/2025
0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் “போதைப் பொருட் பாவனை” தொடர்பில் கோரப்பட்ட விடயங்களிற்கு பதிலளித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போதைப்...

மேலும்...

இந்தியர்கள் வெளியேறுவதற்கு ஈரான் வான்வெளி தடையை நீக்கியது.!

இந்தியர்கள் வெளியேறுவதற்கு ஈரான் வான்வெளி தடையை நீக்கியது.!
by Stills
21/06/2025
0

கடந்த 10 நாட்களாக ஈரான் இஸ்ரேல் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் போர்...

மேலும்...

மோடி டொனால்டு டிரம்பின் “டின்னர்” அழைப்புக்கு மறுப்பு தெரிவிப்பு.

மோடி டொனால்டு டிரம்பின் “டின்னர்” அழைப்புக்கு மறுப்பு தெரிவிப்பு.
by Stills
21/06/2025
0

நேற்று பிரதமர் மோடி  ஒடிசா மாநிலம் சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற விழாவில்  மோடி பேசியதாவது இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வ தற்காக இரண்டு...

மேலும்...

முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?
by Stills
13/06/2025
0

முள்ளியவளையில்கடந்த இரு தினங்களுக்கு முன்னர்  தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவில் பதாதைகள் அமைக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து  புதன்கிழமை இரவு இந்த பதாதைகள் இனந்தெரியாதவர்களால் கிழித்தெறியப்பட்டிருந்தது.அந்த தோரணத்தை...

மேலும்...

படையாண்டமாவீரா’ திரைப்படத்தின்இசைவெளியீட்டுவிழா

by அரவிந்த்
01/06/2025
0

வ. கெளதமன் இயக்கி நடிக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் இனிதே நடைபெற்றது. "வன்னிக்காடு" படைப்பாக்குவதே தனது...

மேலும்...
அடுத்த செய்தி
ரூ.2,484 கோடி சொத்துகளை விட்டுவிட்டு காதலனை கரம்பிடித்த இளம்பெண்.!

ரூ.2,484 கோடி சொத்துகளை விட்டுவிட்டு காதலனை கரம்பிடித்த இளம்பெண்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
போலி நாணயத்தாள்களுடன் மொரட்டுவையில் ஒருவர் கைது !

போலி நாணயத்தாள்களுடன் மொரட்டுவையில் ஒருவர் கைது !

15/07/2025
சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் அநுரகுமார திசாநாயக்காவிற்கும்  இடையில் சந்திப்பு.

சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் அநுரகுமார திசாநாயக்காவிற்கும் இடையில் சந்திப்பு.

15/07/2025
இலங்கை பொருளாதார தடைகளை நீக்கினால் வரி கட்டணங்களை சரிசெய்ய முடியும்! அமெரிக்க ஜனாதிபதி.!

இலங்கை பொருளாதார தடைகளை நீக்கினால் வரி கட்டணங்களை சரிசெய்ய முடியும்! அமெரிக்க ஜனாதிபதி.!

10/07/2025
இன்று யாழ் தையிட்டியில் விகாரைக்கு எதிராக போராட்டம்.

இன்று யாழ் தையிட்டியில் விகாரைக்கு எதிராக போராட்டம்.

10/07/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.