Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு விளையாட்டு

இலங்கையை தோற்கடித்து சுப்பர் 4 கிரிக்கெட் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.!

Stills by Stills
13/09/2023
in விளையாட்டு
0
இலங்கையை தோற்கடித்து சுப்பர் 4 கிரிக்கெட் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.!
0
SHARES
6
VIEWS
ShareTweetShareShareShareShare

இலங்கையை 41 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இந்தியா, முதலாவது அணியாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசிய கிண்ண சுப்பர் 4 கிரிக்கெட் போட்டியில்,இலங்கையை தோற்கடித்து ஆசிய கிண்ண இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்தியா.

இந்தப் போட்டிக்கு முன்பதாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியான 13 வெற்றிகளைப் பதிவு செய்த இலங்கையின் வெற்றி அலைக்கு இதன் மூலம் இந்தியா முடிவு கட்டியது.

இந் நிலையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் வியாழக்கிழமை 14ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்தாட தகுதிபெறும்.

அப் போட்டி மழையினால் முழுமையாக கைவிடப்பட்டால் நிகர ஓட்ட வேக அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு இலங்கை முன்னேறும்.

இன்றைய போட்டியில் 20 வயதான துனித் வெல்லாலகே, சரித் அசலன்க ஆகியோரின் சுழற்சியில் தடுமாற்றம் அடைந்த இந்தியா 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 213 ஓட்டங்களைப் பெற்றது.

ஆனால், இலங்கை வீரர்களின் மோசமான துடுப்பாட்டம் வெல்லாலகே, அசலன்க ஆகியோரின் ஆற்றல்களை மழுங்கடிக்கச் செய்தது.

ஷுப்மான் கில், விராத் கோஹ்லி, ரோஹித் ஷர்மா, கே.எல். ராகுல் ஹார்திக் பாண்டியா ஆகியோரின் விக்கெட்களைக் கைப்பற்றிய வெல்லாலகே தனது 13ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலாவது 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்தார்.

மறுபக்கத்தில் மற்றைய சுழல்பந்துவீச்சாளர் சரித் அசலன்கவும் திறமையாக பந்துவீசி 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

39ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் சரித் அசலன்க இதற்கு முன்னர் 6 போட்டிகளில் மாத்திரம் பந்து வீசியிருந்ததுடன் மொத்தமாக 14 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் கைப்பற்றியிருந்தார்.

கடைசியாக அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2022இல் பந்துவீசியிருந்த சரித் அசலன்க 22 போட்டிகளின் பின்னரே இன்றைய தினம் பந்துவீசி தனது தனிப்பட்ட அதிசிறந்த பந்துவீச்சுத்தகுதியைப் பதிவு செய்தார்.

அவர், இஷான் கிஷான், ரவிந்த்ர ஜடேஜா, ஜஸ்ப்ரிட் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோரின் விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 213 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை பெற்றது.

ரோஹித் ஷர்மாவும் ஷுப்மான் கில்லும் 67 பந்துகளில் 80 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், ஷுப்மான் கில் (19), விராத் கோஹ்லி (3), ரோஹித் ஷர்மா ஆகியோர் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் இந்தியா நெருக்கடியை எதிர்கொண்டது.

ரோஹித் ஷர்மா 48 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 53 ஓட்டங்களைப் பெற்றார்.

தனது 248ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய ரோஹித் ஷர்மா 22 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது 10,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 10000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த 15ஆவது வீரரானார். இந்தியர்களில் 6ஆவது வீரரானார்.

அத்துடன் விராத் கோஹ்லிக்கு அடுத்ததாக ரோஹித் ஷர்மா குறைந்த இன்னிங்ஸ்களில் 10000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்துள்ளார்.

கோஹ்லி 205 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை அடைந்ததுடன் ரோஹித் ஷர்மாவுக்கு 241 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டது. முதன் முதலில் 10000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்த சச்சின் டெண்டுகல்கர் 259 இன்னிங்ஸ்களில் அந்த மைல்கல் சாதனையை எட்டினார்.

தொடர்ந்து இஷான் கிஷான், கே. எல். ராகுல் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 63 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை பலப்படுத்த முயற்சித்தனர்.

ஆனால் ராகுல் (39), இஷான் கிஷான் (33) ஆகிய இருவரும் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். அத்துடன் இந்தியா 6 விக்கெட்களை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இழந்தது.

இந்தியா 47 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது சிறு மழை பெய்ததால் மாலை 6.22 மணிக்கு ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடர்ந்தபோது மேலும் 16 ஓட்டங்களை மொத்த எண்ணிக்கைக்கு சேர்த்தது.

அக்சார் பட்டேல் 26 ஓட்டங்களைப் பெற்றதுடன் மொஹமத் சிராஜ் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் துனித் வெல்லாலகே ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 10 ஓவர்களில் 40 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் சரித் அசலன்க ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 9 ஓவர்களில் 18  ஓட்டங்களுக்கு   4 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

214 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 41.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இலங்கை துடுப்பாட்ட வீரர்களின் மோசமான அடி தெரிவும் கவனக்குறைவான ஆட்டமும் இலங்கையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

சரித் அசலன்க (22), தனஞ்சய டி சில்வா (41), துனித் வெல்லாலகே  ஆகியோர் மாத்திரம் 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

ஆரம்ப வீரர்களான பெத்தும் நிஸ்ஸன்க (6), திமுத் கருணாரட்ன (2) ஆகிய இருவரும் கவனக் குறைவான துடுப்பாட்டங்களால் நடையைக் கட்டினர்.

இந்தப் போட்டிவரை 4 இன்னிங்ஸ்களில் பிரகாசிக்கத் தவறிய திமுத் கருணாரட்ன பெரும்பாலும் அடுத்துவரும் போட்டிகளில் குசல் பெரேராவுக்கு வழிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்த சதீர சமரவிக்ரம பொறுமையை கடைப்பிடிக்காமல் அவசரப்பட்டு 17 ஓட்டங்களுடன் விக்கெட்டை தாரை வார்த்தார்.

சரித் அசலன்க 22 ஓட்டங்களைப் பெற்று களம் விட்டகன்றார்.

அணித் தலைவர் தசுன் ஷானக்கவும் மோசமான அடி தெரிவினால் 9 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

இந் நிலையில் தனஞ்சய டி சில்வாவும் துனித் வெல்லாலகேயும் ஜோடி சேர்ந்த 7ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு பெரும் சோதனையைக் கொடுத்தனர்.

ஆனால், தனஞ்சய டி சில்வா பொறுமை இழந்து பந்தை விசுக்கி அடிக்க முயற்சித்து 41 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிய இளம் வீரர் துனித் வெல்லாலகே 42 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பின்வரிசையில் எவரும் இந்தியாவின் பந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்கவில்லை.

பந்துவீச்சில் குல்தீப் யாதவ் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

சகலதுறைகளிலும் பிரகாசித்த துனித் வெல்லாலகே எவ்வித கேள்விக்கும் இடமின்றி ஆட்ட நாயகனானார்.

Tags: சுப்பர் 4 கிரிக்கெட்இந்திய – இலங்கை
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள IPHONE 15 சீரிஸ் – தொடக்க விலை- இந்திய ரூபாய் .1,59,900. 

அடுத்த செய்தி

அதிர்ச்சியில் போர்த்துக்கல் மக்கள்.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் நரேந்திரமோடி தந்த ரியாக்சன்…. நடந்தது என்ன?

பிரதமர் நரேந்திரமோடி தந்த ரியாக்சன்…. நடந்தது என்ன?
by Stills
20/11/2023
0

13 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரில் 19 ஆம் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற    இறுதிப் போட்டியில்  இந்திய அணியை வெற்றி கொண்டு ஆறாவது தடவையாக ...

மேலும்...

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்து சம்பியன்!.

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்து சம்பியன்!.
by Stills
05/10/2023
0

48 வருட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் பவுண்டறிகளின் எண்ணிக்கை அடிப்படையில் சம்பியன் பிரகடனப்படுத்தப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.இங்கிலாந்திலும் வேல்ஸிலும் கூட்டாக நடத்தப்பட்ட 12ஆவது உலகக் கிண்ண...

மேலும்...

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சொல்லி அடித்த கில்லி.

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சொல்லி அடித்த கில்லி.
by Stills
02/10/2023
0

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த செப். 23-ஆம் தேதி தொடங்கியது. அக்டோபர் 8 வரை நடைபெறும். 61 பிரிவுகளில் நடைபெறும் 40...

மேலும்...

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றதா? : முன்னாள் அணித்தலைவர் அர்ஜுண கிளப்பும் சந்தேகங்கள்.

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றதா? : முன்னாள் அணித்தலைவர் அர்ஜுண கிளப்பும் சந்தேகங்கள்.
by Stills
23/09/2023
0

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்க. இறுதிப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை தமக்கு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும் புரவெசி பலய என்ற...

மேலும்...

இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ப்பு!

இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ப்பு!
by Stills
17/09/2023
0

9 ஆண்டுகளுக்குப் பின் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் அணி பங்கேற்கிறது. சுனில் சேத்ரி தலைமையில் 17 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின்...

மேலும்...

பிரீமியர் லீகுக்குள் நுழையுமா? லெஸ்டர் சிட்டி.!

பிரீமியர் லீகுக்குள் நுழையுமா? லெஸ்டர் சிட்டி.!
by Stills
17/09/2023
0

லெஸ்டர் சிட்டி - இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து கிளப். 8 ஆண்டுகளுக்கு முன் அந்த அணி அவ்வளவு பிரபலமானது இல்லை. பிரீமியர் லீகில் நிலைத்திருப்பதே அவர்களுக்கு ஒவ்வொரு...

மேலும்...
அடுத்த செய்தி
அதிர்ச்சியில் போர்த்துக்கல் மக்கள்.!

அதிர்ச்சியில் போர்த்துக்கல் மக்கள்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025

புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா சிறப்பு மலர்

17/04/2025

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

16/04/2025
மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

11/03/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.