Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
Home இலங்கை

தமிழரசுக் கட்சியின் தலைமைத் தெரிவு 21ஆம் திகதி தேர்தல் .!

Stills by Stills
11/01/2024
in இலங்கை
0
தமிழரசுக் கட்சியின் தலைமைத் தெரிவு 21ஆம் திகதி தேர்தல் .!
0
SHARES
6
VIEWS
ShareTweetShareShareShareShare

தமிழரசுக் கட்சியின் புதிய தலைமையைத் தெரிவு செய்வதற்கு தேர்தலை நடத்துவதா இல்லை இணக்கப்பாட்டின் அடிப்படையில் சம்பிரதாய அடிப்படையில் ஒருவரை ஏகமனதாக நியமிப்பதா என்று தீர்மானிக்கப்படவுள்ளது.இலங்கைத் தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுக் கூட்டம் கொழும்பில் உள்ள அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நேற்று (10) பிற்பகல் மாவை.சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. மூன்று தலைமை வேட்பாளர்களுக்கும் இடையில் இணக்கம் காணப்படாது விட்டால் திட்டமிட்டபடி எதிர்வரும் 21ஆம் திகதி தேர்தல் அடிப்படையில் புதிய தலைமை தெரிவாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது. அதனையடுத்து மாநாடு 27,28ஆம் திகதி திருகோணமலையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கு அமைவாக, தலைமைப்பதவிக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சீனித்தம்பி யேகேஸ்வரன் ஆகியோர் கூடிப்பேசுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதோடு ஒருநாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  திருகோணமலை மாவட்டக்கிளை மற்றும் மூலக்கிளை தெரிவுகள் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்திலிருந்து பொதுச்சபையில் வாக்களிப்பதற்கு அறுவரை பெயரிடுவதற்கு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் இரா.சம்பந்தனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சாள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், தவராசா கலையரசன்,வடமாகாண தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் வைத்தியர்.ப.சத்தியலிங்கம், நிருவாகச் செயலாளர் குலநாயகம், பொருளாளர் கனகசபாபதி, கொழும்புக்கிளைத் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, முன்னாள் செயலாளர் துரைராஜசிங்கம், ஒழுக்காற்றுக்குழுத் தலைவர் சீனித்தம்பி யோகேஸ்வரன், திருமலை மாவட்டக்கிளைத் தலைவர் குகதாசன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையில், குறித்த கூட்டத்தின் போது, முதலில் திருகோணமலை மாவட்டக்கிளைத் தெரிவு சம்பந்தமான குழப்பநிலைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.சம்பந்தன் ஆரம்பம் முதலே, திருகோணமலை மாவட்டக்கிளைத் தெரிவில் காணப்படுகின்ற அதிருப்தி நிலைமைகள் தீர்க்கப்பட வேண்டும்.

தற்போது இடம்பெற்ற தெரிவுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். வெளிப்படைத்தன்மையுடன் மீள் தெரிவு சுயாதீனக்குழு முன்னிலையில் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

இந்தச் செயற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்ததன் பின்னர் மாநாட்டை நடத்த முடியும் என்றும் அழுத்தமாக குறிப்பிட்டார். அத்துடன் திருமலை மாவட்டக்கிளைத் தெரிவு தொடர்பில் அதிருப்தியாளர்கள் நீதிமன்றத்தினை நாடினால் நிலைமைகள் மோசமடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அச்சமயத்தில் சுமந்திரன் அவ்வாறு நீதிமன்றத்தினை அதிருப்தி உறுப்பினர்களில் யராவது நாடினால் அந்தவழக்கினை கட்சி என்ற அடிப்படையில் முகங்கொடுப்போம் என்று பதிலளித்தார்.

இதனையடுத்து, அதிருப்தி உறுப்பினர்களின் விடயத்திற்கு எவ்விதமான தீர்வு வழங்குவது என்பது பற்றி ஆராயப்பட்டது.

அதனடிப்படையில், குறித்த அதிருப்தி வெளியிட்டவர்களில் அறுவரை மாவட்டக்கிளை சார்பில் பொதுச்சபையில் வாக்களிப்பதற்கான உரித்தை வழங்கும் வகையில் பெயரிடுவதற்கு அனுமதி அளிப்பதென்று முடிவெடுக்கப்பட்டது.

எனினும், அவர்களில் யார் அந்த அந்தஸ்தைப்பெறுவார்கள் என்பதை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இரா.சம்பந்தனே பெயரிடுவதற்கு அரசியல் குழு ஏகமனதாக அனுமதி அளித்துள்ளது.

அதற்கு அமைவாக, சம்பந்தன் குறித்த அறுவரின் பெயர்களையும் நாளையதினம் நிறைவடைவதற்குள் தலைமைக்கு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனையடுத்து, எதிர்வரும் 21ஆம் திகதி கட்சியின் புதிய தலைமைக்கான தெரிவு தொடர்பில் பேசப்பட்டது.

இந்த விடயம் சம்பந்தமாக, சம்பந்தன், மாவை, தவராசா,கனகசபாபதி, உள்ளிட்டவர்கள் கட்சியின் கடந்த காலச் சம்பிரதாயத்துக்கு அமைவாக இணக்கப்பாட்டின் அடிப்படையில் புதிய தலைமை தெரிவு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டனர்.

ஆவ்விதமான நிலைமையே கட்சிக்குள் தேவையில்லாத பிளவுகள் ஏற்படுவது தவிக்கப்படும் என்றும் எடுத்துரைத்தனது. அதற்கு அமைவாக தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் கூறினார்கள்.

எனினும், சிறீதரன், யோகேஸ்வரன் ஆகியோர் எவ்விதமான பதில்களையும் வழங்காத நிலையில், சுமந்திரன் தலைமைக்கான தேர்தல் போட்டிக் செல்வதால்பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பில்லை. நான் வெற்றிபெறுபவருடன் இணைந்து செயற்பட தயாராகவே உள்ளேன் என்றும் குறிப்பிட்டார்.

அத்துடன் கட்சியின் யாப்பில் தேர்தல் மூலம் புதிய தலைமை தெரிவு செய்யப்படுவதற்கு ஏதுவான ஏற்பாடுகள் தெளிவாக உள்ளன. குறிப்பாக கட்சியின் முதலாவது யாப்பிலிருந்தே அவ்விதமான நிலைமைகள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

எனினும், தொடர்ச்சியாக மேற்படி உறுப்பினர்கள் தேர்தலற்ற வகையில் தலைமைத்தெரிவு இடம்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.

இதனையடுத்து நீண்டவாதப்பிரதிவாதங்கள் உறுப்பினர்களுக்கு இடையில் நடைபெற்றதோடு ஈற்றில், வேட்பாளர்கள் மூவரும் தமக்குள் பிரத்தியேகமாக கூடிப்பேசி தீர்மானமொன்றை அறிவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது. அதற்கமைவாக, அவர்களுக்கு ஒரு நாள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய தலைமைக்கான வேட்பாளர்களுக்கு இடையிலான சந்திப்பானது இன்றையதினம் கொழும்பில் நடைபெறவுள்ளது. இந்தச் சந்திப்பின்போது மூவரும் கூட்டிணைந்து எடுக்கும் தீர்மானம் கட்சித் தலைமைக்கும் அரசியல் குழுவிற்கும் அறிவிக்கப்படும்.

 

Tags: தமிழரசின்தலைமைதெரிவுதேர்தல்
ShareTweetShareShareSendSend
Previous Post

பொருளாதார சீர்திருத்தங்கள் ஆய்வு செய்ய இன்று வருகிறது சர்வதேச நாணய நிதியத்தின் குழு!

Next Post

மரண அறிவித்தல்: அமரர் வேலுப்பிள்ளை சிவநாதன் அவர்கள்

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.
by கண்ணன்
07/01/2026
0

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம்  எனவும்,மேற்கு - வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை...

Read more

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.
by கண்ணன்
21/01/2026
0

இன்று (2) முற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அலுவலகத்தில் வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் கீழ் செயல்படுத்தப்படும் " தேசிய வீட்டுத்திட்டம் உள்ளிட்ட ஏனைய வீட்டுத்...

Read more

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் கிரவல் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!
by Stills
21/01/2026
0

இன்றைய தினம் (22) வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கங்கன்குளம் பகுதியில் கிரவல் அகழ்வதை தடைசெய்யுமாறு கோரி பொதுமக்கள்  ஆர்ப்பாட்டப் பேரணி  நடத்தினர். இப்போராட்டத்தை கங்கன்குளம்...

Read more

கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள்- வலுக்கும் கண்டனம்

by அரவிந்த்
22/12/2025
0

தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரைக்கு முன் இடம்பெற்ற போராட்டத்தில்  நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதற்கு சைவ மகா சபை  கண்டனம்...

Read more

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் – தமிழ்த் தேசியப் பேரவை தலைவர்கள் சந்திப்பு: ஈழத்தமிழர் அரசியல் தீர்வு குறித்து முக்கிய ஆலோசனை!
by கண்ணன்
19/12/2025
0

சென்னை, நீலாங்கரை: ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் உரிமைகள் தொடர்பாகவும், இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு விவகாரங்கள் குறித்தும் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்த் தேசியப் பேரவையின் (Tamil National...

Read more

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!

துணுக்காய் பிரதேச செயலர் பிரிவு கோட்டைகட்டிய குளம் பேரிடர் பாதிப்பு மக்கள் சந்திப்பு!
by கண்ணன்
18/12/2025
0

புதன்கிழமை (17) மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அம்பலப்பெருமாள் குளம் மற்றும் கோட்டைகட்டிய குளம் ஆகிய கிராமங்களில், அண்மைய பேரிடரால் ஏற்பட்ட பாதிப்புக்கள்...

Read more
Next Post
மரண அறிவித்தல்: அமரர் வேலுப்பிள்ளை சிவநாதன் அவர்கள்

மரண அறிவித்தல்: அமரர் வேலுப்பிள்ளை சிவநாதன் அவர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

30/07/2026
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

30/07/2026
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில்  சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

7 ஆண்டுகளாக சிறுமியின் நுரையீரலில் சிக்கியிருந்த பேனா மூடி அகற்றப்பட்டது.

27/07/2026
நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

நீட்பொதுத்தேர்வுகள் சட்ட திருத்த மசோதா அறிமுகம்.

27/07/2026
மூட்டுவலியை போக்கும் உணவு

மூட்டுவலியை போக்கும் உணவு

27/07/2026
நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நரேஷ் பால் கங்க்வார் மத்திய உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

24/07/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    47 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    43 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.