Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இந்தியா

நாம் தமிழர் சார்பாக கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்யாராணி போட்டி.

தரணி by தரணி
23/03/2024
in இந்தியா
0
நாம் தமிழர் சார்பாக கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்யாராணி போட்டி.
0
SHARES
61
VIEWS
ShareTweetShareShareShareShare

கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்யாராணி போட்டி.. நாம் தமிழர் அறிவிப்பு!

மற்ற கட்சியிலிருப்பவர்களை தங்கள் கட்சிக்கு வலைவீசி பாஜக இழுத்து வரும்நிலையில், பாஜகவிலிருந்து ஒருவர் சீமான் கட்சிக்கு சென்றுள்ளார்.. இன்று அதற்கான கிளைமேக்ஸூம் நடந்து விட்டது.

தமிழக அதிரடிப் படையால் கடந்த 2004-ல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், வித்யாராணி 4 வருடங்களுக்கு முன்பு, அரசியலுக்குள் என்ட்ரி தந்திருந்தார்.. அதிலும் பாஜகவுக்குள் நுழைந்திருந்தது, மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது, மாநில தலைவராக எல்.முருகன் பொறுப்பில் இருந்தபோது, ஏராளமான பிரபலங்கள், பிரமுகர்கள், தமிழக பாஜகவில் இணைந்தனர்.

அரசியல் பின்புலம் இல்லாதவர்கள், அரசியல் அனுபவமும் இல்லாதவர்கள், அதே சமயம் மக்களிடம் பிரபலமாக உள்ளவர்களை, தங்கள் கட்சியில் இணைக்கும் பணியை தமிழக பாஜக அந்த சமயத்தில் தீவிரமாகவே மேற்கொண்டிருந்தது.. அப்போதுதான், “சரவணபவன்” ஜீவஜோதி கட்சியில் இணைந்திருந்தார்.. அதேவேகத்தில், சந்தன கடத்தல் வீரப்பன் மகள் வித்யாராணியும் இணைந்திருந்தார்..

கட்சியில் சேர்ந்ததுமே, பாஜக ஓபிசி அணியின் மாநிலத் துணைத்தலைவராகவும் வித்யாராணி நியமிக்கப்பட்டார். கட்சியில் இணைந்தது பற்றி வித்யாராணி சொன்னபோது, “மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் என் அப்பாவின் எண்ணம்.. தப்பான வழியை தேர்வு செய்திருந்தாலும் சேவை செய்வதுதான் அவரது எண்ணமாக இருந்தது.. அதேபோல, மக்களுக்கும் நாட்டுக்கும் சேவை செய்யவே பாஜகவில் இணைந்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார்..

இந்த 4 ஆண்டுகளும் பாஜகவிலேயே தீவிரமாக செயல்பட்டு வந்தார் வித்யாராணி.. ஆனால், தனக்கு முக்கிய பொறுப்புகள் தருவார்கள் என்று எதிர்பார்த்தார்.. கடைசிவரை அவருக்குரிய இடம் கிடைக்கவில்லை.. இதனால் அதிருப்திக்குள்ளான வித்யாராணி, பாஜக கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் அவ்வளவாக கலந்து கொள்ளாமலேயே இருந்து வந்தார்.

இந்நிலையில் எம்பி தேர்தலை முன்னிட்டு மீண்டும், அவரது அரசியல் நடவடிக்கைகள் தீவிரமாகி உள்ளன.. அந்தவகையில், கடந்த மாதம் திடீரென நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானை சந்தித்து பேசியிருந்தது, பரபரப்பை உண்டுபண்ணியது..

பாஜக பிரமுகர் எதற்காக சீமானை சந்தித்து பேச வேண்டும்? என்ற சந்தேகமும் சோஷியல் மீடியாவில் வலம்வந்தன.. ஆனால் வித்யாராணி, நாம் தமிழர் கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்ற தயாராக உள்ளதாக கூறி, நிலவிவந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அப்போதுதான், நாம் தமிழர் கட்சியில் வித்யாராணி இணைந்த விஷயமே தெரியவந்தது.. ஆனால், இவரை மறுபடியும் பாஜகவில் செயல்பட வைக்க சிலர் முயற்சி செய்தும்கூட, வித்யாதாரணி அதற்கு பிடிகொடுக்கவில்லையாம்..

வரப்போகும் தேர்தலில் வழக்கம்போல், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.. வழக்கம்போல் “சிங்கம்” சிங்கிளாகவே களமிறங்குகிறது.. சின்னம் விவகாரமும் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் இன்றைய தினம் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அந்தவகையில், வித்யாராணி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதும் உறுதியானது. கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். இன்று மாலை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சீமான் அறிவித்தார். இதன்மூலம் கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் வித்யாராணி நாம் தமிழர் சார்பில் போட்டியிடுவது உறுதியாகவிட்டது.

 

Tags: வித்யா ராணி
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

லண்டன் திரையரங்குகளுக்கு வருகிறது டக் டிக் டோஸ் (Dak Dik Dos)

அடுத்த செய்தி

முருகன், ஜெயக்குமார், ரொபேர்ட் பயஸ் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்: தமிழக அரசு தகவல்.

தரணி

தரணி

தொடர்புடைய செய்திகள்

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?
by Stills
19/05/2025
0

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். டிராவல் யூ டியூபர் என்ற பெயரில் நாடு முழுக்க பல இடங்களுக்கு பயணித்த...

மேலும்...

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

by அரவிந்த்
09/05/2025
0

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்!. _ வ. கௌதமன்...

மேலும்...

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

by அரவிந்த்
16/04/2025
0

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்க! இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஜாட் திரைப்படம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தாயக விடுதலைக்காகப் போராடியவிடுதலைப் போராளிகளை...

மேலும்...

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
by Stills
11/03/2025
0

 மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர்,...

மேலும்...

மூன்று இடத்தில் பேச்சு நடத்தும் காளியம்மா

by அரவிந்த்
26/02/2025
0

நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த காளியம்மாள் சீமான் உடனான கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். விலகிய அவர் எந்த கட்சியில்...

மேலும்...

கிளிநொச்சி நீதிமன்றத்தில் இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி நீதிமன்றத்தில் இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
by Stills
10/02/2025
0

இரணைதீவிற்கு அண்மித்த  கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட  இரண்டு இந்திய இழுவைப்படகுகளையும் அதிலிருந்த 14 இந்திய   மீனவர்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09)  அதிகாலை இலங்கை கடற்படையினர்...

மேலும்...
அடுத்த செய்தி
முருகன், ஜெயக்குமார், ரொபேர்ட் பயஸ் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்: தமிழக அரசு தகவல்.

முருகன், ஜெயக்குமார், ரொபேர்ட் பயஸ் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்: தமிழக அரசு தகவல்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

20/05/2025
மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

19/05/2025
யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

19/05/2025

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.