Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இந்தியா

ராஜீவ் காந்தி கொலை வழக்கு : இலங்கை அதிபர் ரணிலுக்கு கடிதம் எழுதிய சாந்தன்…..

Stills by Stills
16/10/2023
in இந்தியா
0
ராஜீவ் காந்தி கொலை வழக்கு : இலங்கை அதிபர்  ரணிலுக்கு கடிதம் எழுதிய சாந்தன்…..
0
SHARES
106
VIEWS
ShareTweetShareShareShareShare

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலையான சாந்தன், தாம் தீவில் உள்ள தனது வயதான தாயுடன் வாழ விரும்புவதாகவும், இதற்கு உதவி செய்யும்படியும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 7 தமிழர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், எஸ் ஜெயக்குமார், சாந்தன், முருகன், பி ராபர்ட் பயாஸ் ஆகியோர் தமிழக சிறையில் இருந்தனர். 31 ஆண்டுகளாக அவர்கள் சிறை வாசம் அனுபவித்தனர்.

இதையடுத்து 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழக அமைச்சரவையில் 2018 ல் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து விடுதலை கோரி பேரறிவாளன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு பேரறிவாளன் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்தது. 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் பேரறிவாளனை அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142யை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து பேரறிவாளன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அதன்பிறகு மற்ற 6 பேரும் அதனடிப்படையில் விடுவிக்கப்பட்டனர். அதாவது நளினி, ரவிச்சந்திரன், எஸ் ஜெயக்குமார், சாந்தன், முருகன், பி ராபர்ட் பயஸ் உள்ளிட்டவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இதில் சாந்தன், முருகன், எஸ் ஜெயக்குமார், பி ராபர்ட் பயாஸ் ஆகியோர் இலங்கையை சேர்ந்தவர்கள். இதனால் அவர்கள் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தான் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் ஒருவரான சாந்தன் என்ற சுதந்திர ராஜா இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்துக்கு மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் உருக்கமான விஷயங்களை குறிப்பிட்டு தான் இலங்கையில் உள்ள தனது வயதான தாயுடன் வாழ உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சாந்தன் எழுதியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நான் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுளேன். இந்த முகாம் என்பது கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட வெளிநாட்டினர் அல்லது உரிய ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினர் தங்கவைக்கப்படும் இடமாகும். நான் 32 ஆண்டு சிறை வாசம் அனுபவித்தேன். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் கூட என்னால் எனது தாயாரை சந்திக்க முடியவில்லை.

எனது தாயார் தற்போது இலங்கையில் உள்ளார். வயதாகி உள்ள அவரை அவரோடு இருந்து கவனித்து கொள்ள எனக்கு அனுமதி வழங்க வேண்டும். மேலும் எனது தேசிய அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்டவை புதுப்பிக்கும் பணிக்காக தூதரகத்தில் உள்ளது. நான் எனது தாயாருடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன். உதவி செய்யுங்கள்” என தெரிவித்துள்ளார்.

அதேபோல் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கை சேர்ந்த ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் இலங்கை செல்ல விரும்பவில்லை. அங்கு சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அவர்கள் நினைக்கின்றனர். அதேநேரத்தில் வேறு இடத்தில் வாழ தங்களை அனுமதிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்துள்ளார். அதாவது ஜெயக்குமார் தரப்பில் சென்னையில் தனது குடும்பத்துடன் வசிக்கவும், ராபர்ட் பயாஸ் நெதர்லாந்தில் உள்ள உறவினர்களுடன் வசிக்கவும் அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: ரணில்சாந்தன்ராஜீவ் காந்தி கொலை வழக்குவிடுதலைகடிதம்தாயாருடன்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட இந்திய மதிப்பில் 4.48 கோடி தங்கம்…

அடுத்த செய்தி

சட்டவிரோதமாக பிரான்ஸ்சிற்கு செல்வதற்கு முயற்சித்த ஈழத் தமிழர் பலாரஸில் உயிரிழப்பு!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

படையாண்டமாவீரா’ திரைப்படத்தின்இசைவெளியீட்டுவிழா

by அரவிந்த்
01/06/2025
0

வ. கெளதமன் இயக்கி நடிக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் இனிதே நடைபெற்றது. "வன்னிக்காடு" படைப்பாக்குவதே தனது...

மேலும்...

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?
by Stills
19/05/2025
0

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார். டிராவல் யூ டியூபர் என்ற பெயரில் நாடு முழுக்க பல இடங்களுக்கு பயணித்த...

மேலும்...

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

by அரவிந்த்
09/05/2025
0

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்!. _ வ. கௌதமன்...

மேலும்...

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

by அரவிந்த்
16/04/2025
0

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்க! இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஜாட் திரைப்படம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தாயக விடுதலைக்காகப் போராடியவிடுதலைப் போராளிகளை...

மேலும்...

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
by Stills
11/03/2025
0

 மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர்,...

மேலும்...

மூன்று இடத்தில் பேச்சு நடத்தும் காளியம்மா

by அரவிந்த்
26/02/2025
0

நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த காளியம்மாள் சீமான் உடனான கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். விலகிய அவர் எந்த கட்சியில்...

மேலும்...
அடுத்த செய்தி

சட்டவிரோதமாக பிரான்ஸ்சிற்கு செல்வதற்கு முயற்சித்த ஈழத் தமிழர் பலாரஸில் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

13/06/2025
தியானத்தின் நன்மைகளும் பயன்களும்.!

தியானத்தின் நன்மைகளும் பயன்களும்.!

13/06/2025
தமிழர்கள் திருமண முறை

தமிழர்கள் திருமண முறை

12/06/2025
குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியாவின் உரை.!

குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியாவின் உரை.!

12/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.