Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இலங்கை

13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தவும் மாகாணசபை தேர்தலை நடத்தவும் ரணிலுக்கு வலியுறித்திய பிரதமருக்கு நன்றி.- அண்ணாமலை

Stills by Stills
21/07/2023
in இலங்கை, இந்தியா
0
13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தவும் மாகாணசபை தேர்தலை நடத்தவும் ரணிலுக்கு வலியுறித்திய பிரதமருக்கு நன்றி.- அண்ணாமலை
0
SHARES
32
VIEWS
ShareTweetShareShareShareShare
13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்தவும் மாகாணசபை தேர்தலை நடத்தவும் ரணிலுக்கு வலியுறித்திய பிரதமருக்கு நன்றி என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கும், ஈழத்துக்கும் உள்ள கலாசார பாரம்பரியத்தை புதுப்பித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து உரையாடினார். இலங்கை தமிழ் மக்கள் வாழ்வு மேம்படவும், அவர்களின் பொருளாதாரம் வளர்ச்சி பெறவும், பல்வேறு திட்டங்களையும் நிதி உதவிகளையும் தொடர்ந்து செய்து வரும் பிரதமர் மோடி தலைமையிலான நமது மத்திய அரசு, தொடர்ந்து செய்யவிருக்கும் பணிகள் குறித்து இந்த சந்திப்பில் முடிவாகின.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான விமான போக்குவரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், இலங்கை தமிழர்கள் பகுதியில் சுற்றுலா, தொழிற்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும். மேலும், தமிழகத்தின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவையை தொடங்க பிரதமர் மற்றும் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஈழத்துக்கும், தமிழகத்துக்கும் உள்ள தொடர்பு சங்க காலம் முதலே தொடர்ந்து வருவது சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் பூம்புகார் துறைமுகத்தில் குவிந்து கிடந்தன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய தொன்மையுள்ள தமிழகம்-இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்துத்தொடர்பு, 1960-களில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.

இலங்கையின் உள்நாட்டுப் போரினால் பாதிப்படைந்த இலங்கை காங்கேசம் துறைமுகத்தை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ரூ.287 கோடியில் புதுப்பித்து, தற்போது மீண்டும் தமிழகம்-இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்தை தொடங்க உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க தமிழர்கள் பாரம்பரியமும், ஈழத்தமிழர்களுடனான கலாச்சார தொடர்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், இந்த விஷயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி, இலங்கை அதிபரை வலியுறுத்தியுள்ளார். இலங்கையில், சீரமைப்பு மற்றும் நல்லிணக்க பணிகளை இலங்கை அரசு நிறைவேற்றவும், இலங்கை தமிழர்களின் அதிகார பகிர்வை உறுதி செய்யும் 13-வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்துதல் மற்றும் மாகாணசபை தேர்தலை நடத்துதல் என்ற தனது உறுதிமொழியை நிறைவேற்றவேண்டும் என்றும், இலங்கை தமிழ் மக்கள் மரியாதை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்யவேண்டும் என்றும் இலங்கை அதிபரிடம், பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

இந்தியா-இலங்கை உறவு, சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவிலிருந்து தமிழர்கள், இலங்கையில் குடியேறி, 200 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இரு நாடுகளிடையேயான தூதரக உறவை நிறுவி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த கலாசார உறவை மேலும் பெருமைப்படுத்தும் வகையில், இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக ரூ.75 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் வளர்ச்சி திட்டங்களில் இந்தியாவின் பங்களிப்பும் இருக்கும் என்று உறுதியளித்துள்ளார். இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் நலனுக்காக தொடர்ந்து பல திட்டங்களை செயல்படுத்தி, தமிழகத்துக்கும், ஈழத்துக்கும் இடையே உள்ள கலாச்சார பாரம்பரியத்தை மீட்டு புதுப்பித்திருக்கும் பிரதமர் மோடிக்கு, தமிழக மக்கள் சார்பாகவும், தமிழக பா.ஜ.க. சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

33 வருடங்களுக்கு முன்னர் தமிழ் மக்களால் எதுவுமற்ற தீர்வு என நிராகரிக்கப்பட்ட  13 வது திருத்த சட்டத்தை வலியுறுத்துவதையே ஒரு சாதனையாக பேசுகின்ற பாஜக வை பார்த்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Tags: பாஜகமோடிரணில்13 வது திருத்த சட்டம்33 வருடங்கள்அண்ணாமலைதமிழகம்-இலங்கைதீர்வுத்திட்டம்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

இலங்கை ஜனாதிபதி ரணிலின் இந்தியப் பயணம்: தமிழ் மக்கள் எதிர்பார்க்க எதுவுமில்லை…

அடுத்த செய்தி

உலக அமைதிக்கான கோட்பாடு : மகரிஷி கூறுவது என்ன?

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

“டிட்வா”புயல்பற்றி இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் திரிபுப்படுத்தப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டு.

“டிட்வா”புயல்பற்றி இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் திரிபுப்படுத்தப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டு.
by Stills
16/12/2025
0

நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை தொடர்பில் தனியார் தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது "டிட்வா" சூறாவளி பற்றி இந்தியா காலநிலை திணைக்களம் இலங்கைக்கு முன்னறிவித்தல்களை விடுக்கவில்லை. இந்திய...

மேலும்...

கற்றன் நசனல் வங்கி 100 மில்லியன் ரூபா நிதியை நன்கொடை!

கற்றன் நசனல் வங்கி 100 மில்லியன் ரூபா நிதியை நன்கொடை!
by Stills
16/12/2025
0

செவ்வாய்க்கிழமை (16) இன்று கற்றன் நசனல் வங்கி(Hatton National bank) 100 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளது. டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின்  அன்றாட வாழ்க்கையையும்,...

மேலும்...

கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்திய தூதரகத்துக்கு எதிராக தூண்டிவிட்துள்ளார் – சபா குகதாஸ் குற்றச்சாட்டு!

கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்திய தூதரகத்துக்கு எதிராக தூண்டிவிட்துள்ளார் – சபா குகதாஸ் குற்றச்சாட்டு!
by Stills
16/12/2025
0

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ் மாவட்ட ரெலோ அமைப்பாளர் சபா குகதாஸ் அவர்கள் கடற்தொழில் அமைச்சர் மீனவர்களை தூண்டிவிட்டு இந்திய தூதரகத்திற்கு எதிராக போராட்டம் செய்யுமாறு...

மேலும்...

தமிழர்களை “வெட்டித் துண்டு துண்டாக வீசுவேன்” – தேரரின் புதிய அவதாரம்

தமிழர்களை “வெட்டித் துண்டு துண்டாக வீசுவேன்” – தேரரின் புதிய அவதாரம்
by கண்ணன்
16/12/2025
0

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் (Ampitiya Sumanarathana Thero) என்பவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு, மங்களாராம விகாரையின் தலைமை பௌத்த பிக்கு ஆவார். இவர்...

மேலும்...

குடிச்சிட்டு வந்து மனைவியை திட்டினால் இனி ஜெயில் தான்! – புதிய பிஎன்எஸ் சட்டத்தின் அதிரடி விதிகள்

குடிச்சிட்டு வந்து மனைவியை திட்டினால் இனி ஜெயில் தான்! – புதிய பிஎன்எஸ் சட்டத்தின் அதிரடி விதிகள்
by கண்ணன்
13/12/2025
0

சென்னை, டிசம்பர் 13, 2025: புதிய பாரதிய நியாய சமிதா (BNS) சட்டத்தின் கீழ், மனைவியை கொடுமைப்படுத்தும் கணவர்களுக்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மது போதையில்...

மேலும்...

 பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஆதம்பாக்கம் காவல்துறையினரால் அதிரடி கைது!

 பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஆதம்பாக்கம் காவல்துறையினரால் அதிரடி கைது!
by கண்ணன்
13/12/2025
0

 பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் ஆதம்பாக்கம் காவல்துறையினரால் அதிரடி கைது! சென்னை, டிசம்பர் 13, 2025: தமிழகத்தின் பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் இன்று...

மேலும்...
அடுத்த செய்தி
உலக அமைதிக்கான கோட்பாடு : மகரிஷி கூறுவது என்ன?

உலக அமைதிக்கான கோட்பாடு : மகரிஷி கூறுவது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

06/12/2025
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
“டிட்வா”புயல்பற்றி இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் திரிபுப்படுத்தப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டு.

“டிட்வா”புயல்பற்றி இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம் திரிபுப்படுத்தப்பட்ட செய்தியை வெளியிட்டுள்ளது நளிந்த ஜயதிஸ்ஸ குற்றச்சாட்டு.

16/12/2025
கற்றன் நசனல் வங்கி 100 மில்லியன் ரூபா நிதியை நன்கொடை!

கற்றன் நசனல் வங்கி 100 மில்லியன் ரூபா நிதியை நன்கொடை!

16/12/2025
கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்திய தூதரகத்துக்கு எதிராக தூண்டிவிட்துள்ளார் – சபா குகதாஸ் குற்றச்சாட்டு!

கடற்றொழில் அமைச்சர் மீனவர்களை இந்திய தூதரகத்துக்கு எதிராக தூண்டிவிட்துள்ளார் – சபா குகதாஸ் குற்றச்சாட்டு!

16/12/2025
தமிழர்களை “வெட்டித் துண்டு துண்டாக வீசுவேன்” – தேரரின் புதிய அவதாரம்

தமிழர்களை “வெட்டித் துண்டு துண்டாக வீசுவேன்” – தேரரின் புதிய அவதாரம்

16/12/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.