கொழும்பு – மகரகம பிரதேசத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம், மோதலாக மாறியதில் ஒருவரை மற்றைய நபர் கத்தியால் குத்திப் படுகொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் 31 வயதுடைய இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
படுகொலை செய்த 28 வயதுடைய இளைஞர் தப்பிச் சென்ற நிலையில், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளினைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.