Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இந்தியா

இந்திய அரசியல் வரலாற்றில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு.-எடப்பாடி பழனிசாமி

Stills by Stills
19/07/2023
in இந்தியா
0
இந்திய அரசியல் வரலாற்றில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு.-எடப்பாடி பழனிசாமி
0
SHARES
2
VIEWS
ShareTweetShareShareShareShare

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம் தான். அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டை வைப்பதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில், 2-வது கூட்டம் பெங்களூரில் நேற்று முன்தினமும் நேற்றும் என இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு INDIA (இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி) என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் முழுவேகத்தில் தேர்தலுக்கு தயராகி வரும் நிலையில், பாஜகவும் வரும் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க முனைப்பு காட்டி வருகிறது. இதற்கான வியூகங்களை வகுத்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் கூட்டணி நடத்தும் அதே நாளில் போட்டிக் கூட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்தது.

“DMK-வை திட்டும் ஆளுநரை நாங்கள் எதிர்க்க முடியாது”- Ponnaiyan, ADMK தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, இந்தக் கூட்டத்தில் 38 கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிசாமியை வாசலுக்கே வந்து ஜேபி நட்டா வரவேற்றார். அது மட்டுமின்றி கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு பக்கத்திலேயே எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.

இதனிடையே, பெங்களூரில் நடைபெற்ற எதிர்க்கட்சிக் கூட்டத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் முக ஸ்டாலின், இன்றைக்கு நடந்த கூட்டத்தில் பக்கத்தில் யார் யாரை எல்லாம் உட்கார வைத்திருந்தார்கள். பார்த்தீர்களா, அவரால் குற்றம்சாட்டப்பட்ட, அவரால் ஊழல்வாதிகள் என்று சொல்லப்பட்டவர்கள் எல்லாம் இன்றைக்கு அந்த கூட்டணியில் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்களை பிரதமர் அரவணைத்துக் கொண்டிருக்கிறார் என விமர்சித்தார். இந்நிலையில், இன்று டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம் தான். அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டை வைப்பதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என விமர்சித்தார். மேலும், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கூட்டணி வைக்கிறோம். அது சூழலுக்கு ஏற்றவாறு வைப்பது. ஆனால், கொள்கை என்பது நிலையானது. அதிமுகவின் கொள்கையில் இருந்து நாங்கள் பிறழ மாட்டோம். பாஜக கூட்டணியில் அதிமுக சுதந்திரமாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கூட்டணியில் திமுக அடிமையாக உள்ளது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை.

பாஜகவோடு திமுக கூட்டணி வைக்கவில்லையா? 1999ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது திமுக. திமுகவுக்கு இப்போது பாஜக தீண்டத்தகாத கட்சியா? அவர்களுக்கு அதிகாரம் வேண்டும் என்றால் வளைந்து கொடுப்பார்கள். பச்சோந்தி மாதிரி நிறம் மாறிக்கொள்வார்கள். பிரதமர் மோடி தலைமையில் 9 ஆண்டுகாலத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை பார்க்க வேண்டும். கொரோனா காலம், அதற்குப் பிறகு உலகளவில் பொருளாதார நெருக்கடி சூழல் இருக்கும்போது, இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படவில்லை. சிறப்பான ஆட்சியை செய்து வருகிறது பாஜக அரசு. பிரதமர் மோடி உலகளவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தியுள்ளார். பாஜக கூட்டணியில் பெரிய சிறிய கட்சிகள் என்ற பாகுபாடு இல்லாமல் உரிய மரியாதை வழங்கப்பட்டுள்ளது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவை தேர்தலில் 330 இடங்களில் வெற்றுபெறும் என நம்புகிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Tags: நாடாளுமன்ற தேர்தல்திமுகசென்னைகூட்டணிபாஜகஎடப்பாடி பழனிசாமிஅதிமுகபிரதமர்மோடிADMK
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

INDIA வுக்கு எதிராக BJB தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமை ஆலோசனை ???

அடுத்த செய்தி

டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால்பணி நீக்கம்: அரசு எச்சரிக்கை.

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!
by அரவிந்த்
09/09/2025
0

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்றஇந்திய மத்திய அரசின் அறிவிப்புமகிழ்சிக்குரியது! தமிழ்நாட்டிலிருந்து சிரஞ்சீவி மாஸ்டர் சிறப்புப் பேட்டி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் சட்டரீதியாக வாழ்வதற்கான அனுமதியை இந்திய...

மேலும்...

தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.
by Stills
14/08/2025
0

அரசாங்கத்திற்காக மட்டுமே பணியாற்றுவோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த தூய்மைப் பணியாளர்களைப் பேச்சுவார்த்தை என அழைத்து தனியாருக்குத்தான் பணியாற்ற வேண்டும் என அமைச்சர்களும் அரசுஅதிகாரிகளும் கட்டாயப்படுத்தியிருப்பது தி.மு.க. அரசின்...

மேலும்...

இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு- பிரியங்கா காந்தி

இந்தியா வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு- பிரியங்கா காந்தி
by Stills
14/08/2025
0

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அழிவை கட்டவிழ்த்து விடும்போது இந்திய அரசு அமைதியாக இருப்பது வெட்கக்கேடானது" “இஸ்ரேலிய அரசு இனப்படுகொலையை செய்து வருகிறது. 60,000-க்கும் மேற்பட்ட மக்களை...

மேலும்...

பிஹாரில்”இறந்துபோன” வாக்காளர்களுடன் தேநீர் விருந்து -ராகுல் காந்தி.!

பிஹாரில்”இறந்துபோன” வாக்காளர்களுடன் தேநீர் விருந்து -ராகுல் காந்தி.!
by Stills
14/08/2025
0

“வாழ்வில் எண்ணற்ற சுவாரஸ்ய அனுபவங்களை பெற்றது உணவு. ஆனால், இறந்து போனவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு எனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை. இந்த தனித்துவமான அனுபவத்தை அளித்த தேர்தல்...

மேலும்...

இந்தியர்கள் வெளியேறுவதற்கு ஈரான் வான்வெளி தடையை நீக்கியது.!

இந்தியர்கள் வெளியேறுவதற்கு ஈரான் வான்வெளி தடையை நீக்கியது.!
by Stills
21/06/2025
0

கடந்த 10 நாட்களாக ஈரான் இஸ்ரேல் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. ஈரான் மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் போர்...

மேலும்...

மோடி டொனால்டு டிரம்பின் “டின்னர்” அழைப்புக்கு மறுப்பு தெரிவிப்பு.

மோடி டொனால்டு டிரம்பின் “டின்னர்” அழைப்புக்கு மறுப்பு தெரிவிப்பு.
by Stills
21/06/2025
0

நேற்று பிரதமர் மோடி  ஒடிசா மாநிலம் சென்றிருந்தார். அங்கு நடைபெற்ற விழாவில்  மோடி பேசியதாவது இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வ தற்காக இரண்டு...

மேலும்...
அடுத்த செய்தி
டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால்பணி நீக்கம்: அரசு எச்சரிக்கை.

டாஸ்மாக் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கினால்பணி நீக்கம்: அரசு எச்சரிக்கை.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!

இருமல் சளி போக்கும் மூன்று முத்திரைகள்.!

17/10/2025

மரண அறிவித்தல் அமரர்.ஆனந்தகிருஷ்ணன் செல்வகிருஷ்ணன்

17/09/2025
நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

நாங்கள் சட்டரீதியாக வாழலாம் என்ற இந்திய மத்திய அரசின் அறிவிப்பு மகிழ்சிக்குரியது!

09/09/2025
தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

தி.மு.க அரசின் ஆணவபப்போக்கு -டி.டி.வி. தினகரன் கண்டனம்.

14/08/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.