Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு உலகம்

ஜெனிவாவில்ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர்.

Stills by Stills
13/09/2023
in உலகம்
0
ஜெனிவாவில்ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர்.
0
SHARES
13
VIEWS
ShareTweetShareShareShareShare

ஜெனிவாவில் 11ம்திகதி திங்கட்கிழமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர்ஆரம்பமானது.இக்குட்டத்தொடர் 13ம் இன்றுவரை தொடருகிறது. இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் பேரவையின் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பின் உரையும், அதனைத்தொடர்ந்து உறுப்புநாடுகள் மற்றும் மனித உரிமைகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளின் உரையும் இடம்பெற்றது. அதன்படி பேரவையில் உரையாற்றிய மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூகப்பிரதி நிதிகளால் இலங்கை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டல், மதிப்பீடு செய்தல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றுக்கான  ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கு இறுதியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலம் வழங்கப்பட்டது.

இந்த தீர்மானம் கடந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தொடரில் மீளவலியுறுத்தப்பட்ட நிலையிலேயே,  54 ஆவது கூட்டத் தொடரில் இந்த தீர்மானம் சார்ந்த முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை வெளியிடப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானங்கள் எவையும் நிறைவேற்றப்படாது என்ற போதிலும், இந்த முறை வெளியிடப்படவுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் எழுத்துமூல அறிக்கை இலங்கைக்கு மேலும் அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே இலங்கையின் கடந்தகால மற்றும் தற்போதைய மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக தேசிய ரீதியில் இயங்கிவரும் மனித உரிமைகள் மற்றும் குடிசார் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து விரிவான அறிக்கைகளை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் அரசியல் ரீதியான தன்முனைப்பின்மை மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்கின்றமை என்பவற்றின் காரணமாக உள்ளக நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகள் முழுமையாகத் தோல்வியடைந்திருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ்மக்களைப் பாதிக்கக்கூடியவகையில் அண்மையகாலங்களில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் தொடர்பில் மிகுந்த விசனமடைகின்றோம். முறையான நீதிக்கட்டமைப்பின்றி அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யோசனையானது கடந்தகாலக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மீண்டுமொரு ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படுவது குறித்துக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்தகால ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் எவையும் நடைமுறைப்படுத்தப்படாததன் விளைவாக, இத்தகைய ஆணைக்குழுக்களின்மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள்.

அதேபோன்று வட, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள தமிழ்மக்களின் சில வழிபாட்டுத்தலங்கள் தொல்லியல் பகுதியாக அறிவிக்கப்படுவது குறித்தும், நீதிமன்ற உத்தரவுக்குப் புறம்பாக அவ்விடங்களில் பௌத்த சின்னங்கள் ஸ்தாபிக்கப்படுவது குறித்தும் நாம் தீவிர கரிசனை கொண்டிருக்கின்றோம். இச்செயன்முறையை சீரமைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துவதுடன், குறித்தவொரு பகுதியை தொல்லியல் இடமாக அறிவிப்பதற்கு விஞ்ஞானபூர்வமான முறையைப் பயன்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம் என்று மனித உரிமைகளுக்கான சர்வதேச பேரவையின் பிரதிநிதி தெரிவித்தார்.

அரசியல் ரீதியான தன்முனைப்பின்மை மற்றும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்கின்றமை என்பவற்றின் காரணமாக உள்ளக நிலைமாறுகால நீதிப்பொறிமுறைகள் தோல்வியடைந்துள்ளன. தற்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகள் உரியவாறான தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்யவில்லை.

வட, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையின மக்களை ஒடுக்குவதற்கு அரச அதிகாரிகள் மற்றும் மதத்தலைவர்கள் பயன்படுத்தப்படல், சிவில் செயற்பாடுகளில் மிகையான அளவில் படையினர் ஈடுபடுத்தப்படல் என்பன தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளன. மேலும் இறுதிப்போர் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழி உள்ளடங்கலாக அனைத்து மனிதப்புதைகுழிகள் தொடர்பிலும் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்புப்போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர் என்று சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அறிந்துகொள்வதற்காகக் காத்திருக்கின்றனர். இருப்பினும் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை ஆகியவற்றின் மூலம் இப்பேரவையின் உறுப்புநாடுகள் இலங்கைக்குத் தொடர்ந்தும் ஆதரவளித்துவருகின்றன. அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தினால் சிறுபான்மையினத் தமிழ்மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரான்ஸ் தமிழர்கள் அமைப்பின் பிரதிநிதி கரிசனை வெளியிட்டார்.

அண்மையில் நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் தமிழ்மக்களின் மதவழிபாட்டுத்தலங்கள் தொடர்பில் ஏற்படுத்தப்பட்ட சர்ச்சைகள் இனங்களுக்கு இடையிலான அமைதியின்மை நிலையைத் தோற்றுவிக்கக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தின. அதேபோன்று பெருமளவான முஸ்லிம்கள் பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டம் ஆகியவற்றின்கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறுதினக் குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் இன்னமும் நீதிநிலைநாட்டப்படவில்லை என்று உலகளாவிய எவான்ஜலிகல் கூட்டணியின் பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.

Tags: ஐக்கிய நாடுகள்மனித உரிமைகள்54 ஆவதுகூட்டத்தொடர்.ஜெனிவாவில்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

சட்டத்தின் ஆட்சிக்கு பாதிப்பு – சட்டத்தரணிகள் சங்கம் சபாநாயகரிடம் முறைப்பாடு.

அடுத்த செய்தி

மரண அறிவித்தல் – சரத்சந்திரபோஸ் ஜெயரூபன்

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

கனடா அமெரிக்காவுடன் இணையுமா?

கனடா அமெரிக்காவுடன் இணையுமா?
by Stills
11/02/2025
0

கனடா அமெரிக்காவுடன் இணைப்பது உண்மையா? பொக்ஸ் நியுஸ் செய்தியாளரின் கேள்விக்கு ஆம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றவேண்டும் என்பது குறித்து தீவிர ஆர்வம்...

மேலும்...

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிகை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிகை!
by Stills
11/02/2025
0

சனிக்கிழமை மதியத்திற்குள் ஹமாஸ் அமைப்பு பணயக்கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் இஸ்ரேல் ஹமாசுடனான யுத்த நிறுத்தத்தை கைவிடவேண்டும் என  டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார். காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும்...

மேலும்...

குடியேற்றவாசிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கை -அமெரிக்கா ஜனாதிபதி-சிஎன்என்

குடியேற்றவாசிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கை -அமெரிக்கா ஜனாதிபதி-சிஎன்என்
by Stills
18/01/2025
0

அமெரிக்காவின் ஜனாதிபதியாக  டொனால்ட் அமெரிக்கா ஜனாதிபதி பதவியேற்று ஒரு சில மணித்தியாலங்களில் குடியேற்றவாசிகள் குறித்து மிகக்கடுமையான உத்தரவுகள் வெளியாகலாம் என தெரிவித்துள்ள சிஎன்என் டிரம்பின் குழுவினர் இதற்கான...

மேலும்...

“சும்மா இருந்து ” பணம் சம்பாதிக்கும் ஜப்பான் இளைஞர் : கடந்த ஆண்டு 2.4 கோடி வருமானம் .

“சும்மா இருந்து ” பணம் சம்பாதிக்கும் ஜப்பான் இளைஞர் : கடந்த ஆண்டு 2.4 கோடி வருமானம் .
by Stills
09/01/2025
0

ஜப்பான் நாட்டில் வினோதமான முறையில் சம்பாதிக்கும் இளைஞர்.  நமது நாட்டில் ஒரு வேலை கிடைத்து அதில் செட்டிலாவது என்பதே இளைஞர்களுக்கு மிகப் பெரிய போராட்டமாக இருக்கிறது. ஆனால்,...

மேலும்...

டிரம்பின் ஹோட்டல் முன் வாகனத்தை வெடிக்க வைத்தவரின் கைத்தொலைபேசி குறிப்பு

டிரம்பின் ஹோட்டல் முன் வாகனத்தை வெடிக்க வைத்தவரின் கைத்தொலைபேசி குறிப்பு
by Stills
07/01/2025
0

  கடந்த வாரம் லாஸ்வெகாசில் டொனால்ட் டிரம்பின் ஹோட்டலிற்கு வெளியே வெடித்துசிதறிய டிரக் வண்டியின் வாகனத்தை செலுத்தியவர் மத்தியுஅலன் லிவல்ஸ்பேர்கெர் இவர் அமெரிக்க இராணுவத்தின் விசேட படைப்பிரிவான...

மேலும்...

ஜஸ்டின் ட்ரூடோ பதவியில் நீடிப்பாரா?

ஜஸ்டின் ட்ரூடோ பதவியில் நீடிப்பாரா?
by Stills
06/01/2025
0

கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த வாரத்தில் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லிபரல் கட்சிக்குள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு...

மேலும்...
அடுத்த செய்தி
மரண அறிவித்தல் – சரத்சந்திரபோஸ் ஜெயரூபன்

மரண அறிவித்தல் - சரத்சந்திரபோஸ் ஜெயரூபன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

அமைச்சர் பிமல் ரத்நாயக்க மீது-சரத் வீரசேகர குற்றச்சாட்டு.!

20/05/2025
மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

மே18 நிகழ்வில் கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர்பியர் பொலியியர்.!

19/05/2025
யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

யூ டியூபர் ஜோதி ராணி பாகிஸ்தானின் உளவவாளியானது எப்படி?

19/05/2025

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.