Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு ஈழம்

தீருவில் புனித பூமியை இராணுவத்தினரிடம் இருந்து காப்பாற்ற உதவிய வள்ளல் சிவகுகதாசன்….!

தரணி by தரணி
06/03/2024
in ஈழம்
0
தீருவில் புனித பூமியை இராணுவத்தினரிடம் இருந்து காப்பாற்ற உதவிய வள்ளல் சிவகுகதாசன்….!
0
SHARES
123
VIEWS
ShareTweetShareShareShareShare

வல்வெட்டித்துறையின் முன்னணி ஆசிரியராகவும், பின்னர் பல வருடங்கள் புகழ் பூத்த அதிபராகவும் கல்விக்கும் சமூகத்திற்கும் உயர்வான சேவையை ஆற்றிய வள்ளல் “தாசன் மாஸ்ரர்” என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப் படும் வைத்திலிங்கம் சிவகுகதாசன் அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார் என்ற அந்தத் துயரச் செய்தி எங்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தி விட்டது.

மரணம் என்பது மனிதர்களாகப் பிறந்தவர்களுக்கு மட்டுமல்லாது சகல உயிரினங்களுக்கும் என்றோ ஒருநாள் கிடைக்கின்ற ஒரு முடிவு தான்….. ஆனால் அமரர் சிவகுகதாசன் அவர்களின் இறுதி நாட்கள் துன்பங்கள் நிறைந்தவையாக இருப்பதைப் பார்க்கும் பொழுது கடவுளின் மீதுதான் கோபமும், வெறுப்பும் வருகின்றது. வல்வெட்டித்துறையில் வாழ்ந்த மனிதர்களில் இறைபக்தி உள்ளவராகவும், எவருடனும் அன்பாகவும், கண்ணியமாகவும், நல்ல மனிதராகவும், நேர்மையானவனாகவும். கொடுத்து உதவும் வள்ளல் தன்மை உடையவராகவும் இருந்து வாழ்ந்த சிவகுகதாசன் மாஸ்டர் அவர்கள் இறுதி நாட்களில் அவரது அன்பு மனைவியையும் இழந்து துன்பங்களை அனுபவித்து நோய் வாய்ப்பபட்ட நிலையில் தனது வாழ்வை முடித்துக் கொண்டார் என்பதை நினைக்கும் பொழுது நெஞ்சில் ஆழமான வலி ஏற்படுகின்றது…..

ஆனால் அவர் எமது மண்ணுக்கு ஆற்றிய அரும்பணி எவருக்கும் தெரியாமலேயே போய் விடக்கூடாது என்பதற்காக அவர் யாருக்குமே தெரியாது செய்த பெரும் உதவியை இந்தச் சந்தர்ப்பத்திலாவது வெளிப்படுத்தி அவருக்குக் காணிக்கையாக்குகிறோம்.

1987இல் சயனைற் அருந்தி வீரச்சாவடைந்த குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பன்னிரு வேங்கைளினதும் வித்துடல்களை ஒரே சிதையில் வைத்துத் தகனம் செய்த தீருவில் புனித பூமியின் பாரம்பரியத்தையும், போர்த்துக்கேயருடனான இறுதிப் போரில், தளபதி வருணகுலத்தான் தலைமையில், சமர் நடந்த வீரம் செறிந்த விளை நிலத்தையும் காப்பாற்ற வல்வெட்டித்துறையின் நகர பிதாவாக நான் இருந்த பொழுது, அதனை அழகான பூங்காவாக அமைத்து வல்வெட்டித்துறை மற்றும் அயலூர்களில் உள்ள மக்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சி எடுத்தபொழுது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் (TERROIST INVESTIGATION DEPARTMENT-TID) அதனை அமைக்கவிடாது தடுக்கும் வகையில் தடை உத்தர வைப்பிறப்பிக்குமாறு பருத்தித்துறை நீதிமன்றத்தில் நிலையியற் கட்டளை பிறப்பிக்க மனு கையளித்தபொழுது, வடமராட்சியின்; கௌரவம் வாய்ந்த சட்டத்தரணிகள் அனைவரும் இதற்குக் கடும் எதிர்ப்பைக் காட்டியதால் நீதிமன்றம் TIDயினரின் மனுவைத் தள்ளுபடி செய்தது.

ஆயினும் “அடிபட்ட புலி ஆளைக் கொல்லாது விடாது” என்பது போல் “இந்த நிலம் விடுதலைப் புலிகளின் ஆதனம்” என்று கூறி, தவிசாளர் என்ற வகையில் எனக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த பொழுது பிரபல சட்டத்தரணியான திரு. நடராஜா ரஜீவன் அவர்கள் இலவசமாகவே வழக்காட முன்வந்தார்.

அப்பொழுது அந்த ஆதனத்தில் ஒரு துண்டு நிலம்கூட நகராட்சி மன்றத்தின் பெயரில் இருக்கவில்லை. இந்த நிலையில் முதலாலது அமர்வில் நீதிபதி அவர்கள் எங்களுக்கு உரிமை இருந்தால் அதற்கான எழுத்து மூல உறுதியைச் சமர்ப்பிக்குமாறு சட்டத்தரணியிடம் தெரிவித்த பொழுது அவரது ஆலோசனைக்கு அமைய திரு. சிவகுகதாசன் அவர்களை அணுகிய பொழுது பிள்ளைகளிடம் இருந்துகூட அனுமதி பெறாமலேயே தனது பெயரில் உள்ள நான்கு பரப்புக் காணியை நகராட்சி மன்றத்தின் பெயரில் சட்டத்தரணி திரு.நடராஜா அவர்கள் மூலம் இலவசமாகவே எழுதித் தந்தார்.

அதே போன்று “கட்டியண்ணா” என்று அழைக்கப்படும் திரு.தேவசிகாமணி அவர்களும் தனக்குச் சொந்தமான நான்கு பரப்புக் காணியை நகர சபைக்கு தானமாக வழங்கியதுடன் வல்வை சிவன் கோயில் ஆதனத்தின் ஒரு பகுதியான 21 பரப்புக் காணியையும் நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் எழுதித் தந்தமையால் நகராட்சி மன்றத்தின் பெயரில் 29 பரப்புக் காணி எழுதப்பட்டது.

இவற்றிற்கான உறுதி எழுத்துக் கட்டணத்தை கூட திரு.நடராஜா அவர்கள் எங்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளவில்லை. இந்த அன்பளிப்புக்களினால் இராணுவத்தினரின் கைகளுக்குப் பறிபோக இருந்த புனிதமான மண் எங்களுக்கே சொந்தமானது என்று தீர்ப்பளித்ததுடன் இதில் எந்த வகையிலும் இராணுவமோ அல்லது பொலிசாரோ தலையிடக் கூடாது என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.

அன்று திரு. சிவகுதாசன் மாஸ்ரர் இவ்வாறான ஒரு பூமி தானத்தை எங்கள் ஊருக்கு வழங்கி இருக்காவிட்டால் இந்த மண் இன்று படையினர் வசமாகியிருக்கும்.

தனது சொத்துக்களை மட்டுமல்லாது பிறருடைய சொத்துக்களையும் அபகரித்து கள்ளத்தனம் செய்கின்ற சில மனிதர்கள் மத்தியில் அவர் தன்னலம் கருதாத ஒரு வள்ளலாக எங்களுடைய வல்வெட்டித்துறை மண்ணில் பெயர் பதித்து நிற்கின்றார்.

அவரது கல்வி, சமூகப் பணிக்கும், வள்ளல் தன்மைக்கும், மண்ணின் பற்றுக்கும் தலைசாய்த்து புகழ் வணக்கம் செலுத்துகிறோம்.

வீரத்தின் விளைநிலமாக விளங்கும் தீருவில் புனித பூமியின் பெயருடன் அவரது பெயரும் என்றும் வாழும்….!

எங்கள் எல்லோருடைய மனங்களிலும் மதிப்புக்கும், மரியாதைக்கும் உரியவராக வாழ்ந்து சாவடைந்த அமரர் வைத்திலிங்கம் சிவகுகதாசன் அவர்களின் ஆத்மா அவரது குலதெய்வமான வல்வை வாலாம்பிகை சமேத வைத்தீஸ்வரனின் பாதார விந்தங்களை அடைந்து நித்திய இளைப்பாறலை அடையவேண்டுமென்று பிரார்த்திக் கின்றோம்…..

அன்னாரை இழந்து துயருறும் அவரது மகள், மருமகன், மகன், மருமகள், பேரப்பிள்ளைகளுக்கும் உறவினர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்….!

ஓம் சாந்தி…..சாந்நி….சாந்தி….!

-வல்வை ந அனந்தராஜ்

Tags: வல்வை ந அனந்தராஜ்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

ஸஹ்ரான் ஹாசிமினுடைய சாகோதரியின் கணவர் உட்பட 4 பேர் கைது ..

அடுத்த செய்தி

மரண அறிவித்தல் – அமரர் திருமதி நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன்

தரணி

தரணி

தொடர்புடைய செய்திகள்

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

by அரவிந்த்
09/05/2025
0

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்!. _ வ. கௌதமன்...

மேலும்...

புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா சிறப்பு மலர்

by அரவிந்த்
17/04/2025
0

தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா சிறப்பு மலர் பிரான்ஸில் வெளியிடப்பட்டது. தாயகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் அறப்பணிக்காக...

மேலும்...

கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் மங்களேஸ்.!

கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் மங்களேஸ்.!
by Stills
08/03/2025
0

தமிழீழ விடுதலைப் போராட்டப் பயணத்தில் ஓய்வின்றி உழைத்த உத்தமதளபதி லெப் கேணல் மங்களேஸ்.! இயற் பெயர்   : அரவிந்தன்,             ...

மேலும்...

2923 நாட்கள் – முல்லைத்தீவு வட்டுவாகலில் விசேட கவனயீர்ப்புப் போராட்டம்!

2923 நாட்கள் –  முல்லைத்தீவு வட்டுவாகலில் விசேட கவனயீர்ப்புப் போராட்டம்!
by Stills
08/03/2025
0

இன்று சனிக்கிழமை 8 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு முல்லைத்தீவு, வட்டுவாகலில் விசேட கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இறுதிக்கட்டப்போரின்போது வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது அன்புக்குரியவர்களுக்கு என்ன...

மேலும்...

நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல்

by அரவிந்த்
22/02/2025
0

https://youtu.be/WdiDVii70-I?si=zJHqox--7mAO1IyS இலங்கை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து புலனாய்வு அமைப்புகளுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார தெரிவித்துள்ளார். எனினும் இதை தடுக்க...

மேலும்...

10 அம்ச கோரிக்கை வைத்து முன்னாள் போராளி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் …

10 அம்ச கோரிக்கை வைத்து முன்னாள் போராளி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் …
by Stills
15/02/2025
0

முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை இன்று காலை...

மேலும்...
அடுத்த செய்தி
மரண அறிவித்தல் – அமரர் திருமதி நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன்

மரண அறிவித்தல் - அமரர் திருமதி நாகசுந்தரேஸ்வரி இராமநாததாசன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025

புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா சிறப்பு மலர்

17/04/2025

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

16/04/2025
மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

11/03/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.