Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result

மகிழ்ச்சியில் இஸ்ரோ: 23 ஆம் திகதி விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்குகின்றது.

Stills by Stills
21/08/2023
in தொழில்நுட்பம்
0
மகிழ்ச்சியில் இஸ்ரோ: 23 ஆம் திகதி விக்ரம் லேண்டர் நிலவில் தரை இறங்குகின்றது.
0
SHARES
2
VIEWS
ShareTweetShareShareShareShare

எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்வதெனில் பூமியிலிருந்து புறப்படுவதை விட, நிலவிலிருந்து போவதுதான் எளிது என விஞ்ஞானிக ள் கணித்திருக்கிறார்கள். நிலவின் தென்துருவப் பகுதியில் நீர் இருக்கும் விஷயத்தை சந்திரயான் 1 கண்டுபிடித்த பின்னர் நிலவை ஆக்கிரமிப்பதற்கான போட்டி உலக நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ளது.

ஏனெனில் நீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்து அதனை எரிபொருளாகக் கொண்டு இலகுவாக செவ்வாய்க் கிரகத்துக்கு போய்விடலாம். எனவேதான் இந்த போட்டி ஏற்பட்டிருக்கிறது.

இந்தியாவும் சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பியுள்ளது.

ஏற்கெனவே நடந்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் அந்தத் தவறு நடக்காதவாறு இஸ்ரோ மிகச்சரியாக இந்த மிஷனை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14 ஆம் திகதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்து, தற்போது நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இருக்கிறது. கடந்த சில நாட்களாக இதன் தூரம் குறைக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நிலவுக்கு நெருக்கமாக இதை விஞ்ஞானிகள் கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த 17 ஆம் திகதி சந்திரயான் விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இது எதிர்வரும் 23 ஆம் திகதி நிலவில் தரை இறங்க இருக்கிறது. எனவே படிப்படியாக அதன் தூரம் குறைக்கப்பட்டு வருகிறது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து லேண்டர் வெற்றிகரமாக தனியாக பிரிந்தது. இதனையடுத்து நாளைமறுதினம் 23 ஆம் திகதியன்று மாலை நிலவில் இந்த லேண்டர் தரையிறங்க உள்ள நிலையில், தரையிறங்கும் நேரத்தில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது லேண்டர் நிலவுக்கு குறைந்தபட்சமாக 25 கி.மீ தொலைவிலும், அதிகபட்சமாக 134 கி.மீ தொலைவிலும் சுற்றி வருகிறது. சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து விக்ரம் லேண்டர் பிரிந்த பின்னர் அதன் தூரம் இரண்டாவது முறையாக வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தகட்டமாக நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறக்கப்படுவது மட்டுமே மிகுதியாக இருக்கிறது. நாளைமறுதினம் 23 ஆம் திகதி மாலை 5.45 மணிக்கு இது நிலவில் மெதுவாக தரையிறங்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியிருந்த நிலையில் தற்போது இந்த நேரம் மாற்றப்பட்டிருக்கிறது.

அதாவது 23 ஆம் திகதி மாலை 5.45க்கு பதிலாக 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் நிலவை தொடும். இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் நிலவின் தென்துருவத்தில் லேண்டரை பத்திரமாக தரையிறக்கியுள்ளன. அப்படி இருக்கையில், இந்தியா இந்த மிஷனில் வெற்றி பெற்றால் உலக அளவில் அது பெரும் சாதனையாக கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: இந்தியாசந்திரயான் 3நிலவில்நீர் இருக்கும் விஷயத்தை சந்திரயான் 1 கண்டுபிடித்தது
ShareTweetShareShareSendSend
Previous Post

யாழ்ப்பணத்தில் குடிநீர் தட்டுப்பாடு : ஒரு குடம் குடி நீருக்கு வரிசையில் நிற்க வேண்டிய அவலம் …

Next Post

ஜெயிலர் திரைப்படம் இதுவரை இந்தியா முழுவதும் 477.6 கோடி ரூபாய் வசூல் !

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

எலக்ட்ரிக் வாகன உலகில் புரட்சி! 10 நிமிடத்தில் சார்ஜ் ஏறும் புதிய ‘சூப்பர் பேட்டரி’ கண்டுபிடிப்பு.

எலக்ட்ரிக் வாகன உலகில் புரட்சி! 10 நிமிடத்தில் சார்ஜ் ஏறும் புதிய ‘சூப்பர் பேட்டரி’ கண்டுபிடிப்பு.
by Stills
15/12/2025
0

மின்சார வாகனங்களின் (EV) பயன்பாட்டில் இருக்கும் மிகப்பெரிய சவாலான 'சார்ஜிங் நேரம்' (Charging Time) மற்றும் 'பயண தூரம்' (Range) ஆகியவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் ஒரு...

Read more

சந்திரயான் 3 ரோவர்-க்காக காத்திருக்கும் ISRO விஞ்ஞானிகள்.!

சந்திரயான் 3  ரோவர்-க்காக காத்திருக்கும் ISRO விஞ்ஞானிகள்.!
by Stills
25/09/2023
0

சந்திரயான் 3 திட்டம் தனது அறிவியல் ஆய்வு முடிவுகளோடு திட்டமிட்டபடி 14 நாட்கள் சிறப்பாக செயல்பட்டு 100% வெற்றி பெற்ற நிலையில், செப்டம்பர் 4 ஆம் தேதி...

Read more

ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள IPHONE 15 சீரிஸ் – தொடக்க விலை- இந்திய ரூபாய் .1,59,900. 

ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள IPHONE 15 சீரிஸ் – தொடக்க விலை- இந்திய  ரூபாய் .1,59,900. 
by Stills
13/09/2023
0

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் போன்கள் உட்பட சில டிஜிட்டல் கேட்ஜெட்களை Apple Wonderlust 2023 நிகழ்வில் அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்...

Read more

நிலவின் ஆழத்தில் உறைந்த நிலையில் நீர் மூலாதாரம்.

நிலவின் ஆழத்தில் உறைந்த நிலையில் நீர் மூலாதாரம்.
by Stills
28/08/2023
0

  விண்ணில் கடந்த ஜூலை 14ஆம் தேதி ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஆகஸ்ட் 23 மாலை சரியாக 6.04 மணியளவுக்கு நிலவில் தரையிறங்கி சரித்திர...

Read more

புதிய தொழில் முனைவோரின் நம்பிக்கை நாயகன் பியூஷ் பன்சல்: “0” விலிருந்து 35,550 கோடியாக வளர்ந்த லென்ஸ்கார்ட்.

புதிய தொழில் முனைவோரின் நம்பிக்கை நாயகன் பியூஷ் பன்சல்: “0” விலிருந்து 35,550 கோடியாக வளர்ந்த லென்ஸ்கார்ட்.
by Stills
26/07/2023
0

'உலக மக்கள்தொகையில் கால் பகுதிக்கும் அதிகமானோர் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர்' - இது உலக சுகாதார அமைப்பு 2019-ல் வெளியிட்ட அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள தகவல். உண்மைதான், இந்தியாவை...

Read more

google map ஐ பின்னுக்கு தள்ளி பயன்பாட்டில் முதலிடம் பிடித்த இந்திய செயலியான Mappls..

google map ஐ பின்னுக்கு தள்ளி பயன்பாட்டில்  முதலிடம் பிடித்த இந்திய செயலியான Mappls..
by Stills
26/07/2023
0

"மேப் மை இந்தியா நிறுவனம்" தனது சுதேசி வரைபடங்கள் மற்றும் நேவிகேஷன் செயலி, மேப்பல்ஸ் மேம் மை இந்தியா செயலி , இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோரில் அனைத்து...

Read more
Next Post
ஜெயிலர் திரைப்படம் இதுவரை இந்தியா முழுவதும் 477.6 கோடி ரூபாய் வசூல் !

ஜெயிலர் திரைப்படம் இதுவரை இந்தியா முழுவதும் 477.6 கோடி ரூபாய் வசூல் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

28/11/2025
சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

சூடான் புதைகுழியில் 87 சடலங்கள் கண்டுபிடிப்பு: படுகொலை என ஐ.நா கண்டனம்

0
பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

பிரித்தானியாவில் பறந்து கொண்டு பீசா விநியோகம்: நிறுவனத்தின் புதிய முயற்சி

0
சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

சுவிட்சர்லாந்தில் சாதனை படைத்த ஈழத்து யுவதி

0
ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

ஜெர்மனி சுற்றுலாப்பயணி ஜோசப் ரொபி ஸ்டீவிஸ் இலங்கையில் உயிரிழப்பு ..

0
இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

இலங்கையின் இன்றைய வானிலை வளிமண்டலவியல் திணைக்கள கூற்று.

07/01/2026
சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

சோதனைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் ‘சல்லியர்கள்’: திரையரங்குப் புறக்கணிப்பும், வெற்றிகரமான OTT வருகையும்!

21/01/2026
வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

வீடுகளை நிறைவு செய்து மக்களிடம் ஒப்படையுங்கள்- ஜனாதிபதி பணிப்பு.

21/01/2026
விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

விஜய் – எச்.வினோத் இணையும் “ஜனநாயகன்”: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக அமையும். – இயக்குனர் !

21/01/2026
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளார் பொட்டு அம்மான் அகவை தின வாழ்த்துகள்

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.