Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு விளையாட்டு

ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி: பி குழுவில் முதலிடம் பெற்று அரை இறுதியில் நுழைந்தது இலங்கை ஏ அணி

Stills by Stills
19/07/2023
in விளையாட்டு
0
ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி: பி குழுவில் முதலிடம் பெற்று அரை இறுதியில் நுழைந்தது இலங்கை ஏ அணி
0
SHARES
6
VIEWS
ShareTweetShareShareShareShare

கொழும்பில் நடைபெற்றுவரும் வளர்ந்துவரும் அணிகள் ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பி குழுவிற்கான அணிகள் நிலையில் முதலிடத்தைப்  பெற்ற   இலங்கை ஏ  அணி   அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற ஓமான் ஏ அணிக்கு எதிரான பகல் இரவு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 217 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன் மூலம் அரை இறுதியில் விளையாடுவதை இலங்கை உறுதிசெய்துகொண்டது.

இலங்கை ஏ அணியினர் சகலதுறைகளிலும் பிரகாசித்ததன் பலனாக இந்த வெற்றி இலகுவாக கிடைத்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை ஏ அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 259 ஓட்டங்களைக் குவித்தது.

பசிந்து சூரியபண்டார (60), சஹான் ஆராச்சிகே (48),லசித் குரூஸ்புள்ளே (43), அவிஷ்க பெர்னாண்டோ (25), அணித் தலைவர் துனித் வெல்லாலகே (21 ஆ.இ.), சாமிக்க கருணாரட்ன (20) ஆகியோர் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி இலங்கை ஏ அணியின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.

குறிப்பாக பசிந்து  சூரியபண்டாரவும் சஹான் ஆராச்சிகேயும் 4ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 110 ஓட்டங்கள் இலங்கை ஏ அணிக்கு பெரிதும் கைகொடுத்தது.

ஓமான் ஏ அணி பந்துவீச்சில் அணித் தலைவர் ஆக்கிப் இலியாஸ் 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அயான் கான் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜெய் ஓடேட்ரா 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

260 ஓட்டங்கள் என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் ஏ அணி 17.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 42 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படு தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் காஷியப் ப்ராஜாபதி (18), சுராஜ் குமார் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

இலங்கை பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ன 3 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரமோத் மதுஷான் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லஹிரு சமரக்கோன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும்  சஹான் ஆராச்சிகே 2 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பங்களாதேஷ் வெற்றி

பி. சரவணமுத்து சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்ற ஏ குழுவுக்கான மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணியை 21 ஓட்டங்களால் பங்களாதேஷ் ஏ அணி வெற்றிகொண்டது.

இந்த வெற்றியுடன் அரை இறுதியில் விளையாட பங்களாதேஷ் தகுதிபெற்றது.

பி குழுவிலிருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் ஏற்கனவே அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றுள்ளன.

ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் ஏ அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 308 ஓட்டங்களைக் குவித்தது.

துடுப்பாட்த்தில் மஹ்முதுல் ஹசன் ஜோய் 1100 ஓட்டங்களையும் ஸக்கிர் கான் 62 ஓட்டங்களையும் சௌம்யா சர்க்கார் 48 ஓட்டங்களையும் மஹெதி ஹசன் ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மொஹம்மத் சலீம் 65 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் ஏ அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 287 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் ரியாஸ் ஹசன் 78 ஓட்டங்களையும் பாஹிர் ஷா ஆட்டம் இழக்காமல் 53 ஓட்டங்களையும் நூர் அலி ஸத்ரான், அணித் தலைவர் ஷஹிதுல்லா ஆகிய இருவரும் தலா 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் தன்ஸிம் ஹசன் ஷக்கிப் 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரக்கிபுல் ஹசன் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சௌம்யா சர்க்கார் 61 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இன்றைய போட்டி முடிவுகளுக்கு அமைய பி குழுவில் அணிகள் நிலையில் இலங்கை முதலாம் இடத்தை அடைந்துள்ளது.

பங்களாதேஷ் 2ஆம் இடத்தையும் ஆப்கானிஸ்தான் 3ஆம் இடத்தையும் ஓமான் 4ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.

Tags: பங்களாதேஷ்ஆசிய கிண்ண கிரிக்கெட்கிரிக்கெட்போட்டிபிரேமதாச விளையாட்டரகுகொழும்பு
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

கிரைமியாவின் ரஷ்ய இராணுவத் தளத்தில் பாரிய தீ: உச்ச கட்ட பதட்டம்

அடுத்த செய்தி

ஓயாத அலைகள் 1(1996 ) : இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப் கப்பல் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் நரேந்திரமோடி தந்த ரியாக்சன்…. நடந்தது என்ன?

பிரதமர் நரேந்திரமோடி தந்த ரியாக்சன்…. நடந்தது என்ன?
by Stills
20/11/2023
0

13 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரில் 19 ஆம் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற    இறுதிப் போட்டியில்  இந்திய அணியை வெற்றி கொண்டு ஆறாவது தடவையாக ...

மேலும்...

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்து சம்பியன்!.

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்து சம்பியன்!.
by Stills
05/10/2023
0

48 வருட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் பவுண்டறிகளின் எண்ணிக்கை அடிப்படையில் சம்பியன் பிரகடனப்படுத்தப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.இங்கிலாந்திலும் வேல்ஸிலும் கூட்டாக நடத்தப்பட்ட 12ஆவது உலகக் கிண்ண...

மேலும்...

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சொல்லி அடித்த கில்லி.

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சொல்லி அடித்த கில்லி.
by Stills
02/10/2023
0

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த செப். 23-ஆம் தேதி தொடங்கியது. அக்டோபர் 8 வரை நடைபெறும். 61 பிரிவுகளில் நடைபெறும் 40...

மேலும்...

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றதா? : முன்னாள் அணித்தலைவர் அர்ஜுண கிளப்பும் சந்தேகங்கள்.

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றதா? : முன்னாள் அணித்தலைவர் அர்ஜுண கிளப்பும் சந்தேகங்கள்.
by Stills
23/09/2023
0

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்க. இறுதிப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை தமக்கு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும் புரவெசி பலய என்ற...

மேலும்...

இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ப்பு!

இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ப்பு!
by Stills
17/09/2023
0

9 ஆண்டுகளுக்குப் பின் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் அணி பங்கேற்கிறது. சுனில் சேத்ரி தலைமையில் 17 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின்...

மேலும்...

பிரீமியர் லீகுக்குள் நுழையுமா? லெஸ்டர் சிட்டி.!

பிரீமியர் லீகுக்குள் நுழையுமா? லெஸ்டர் சிட்டி.!
by Stills
17/09/2023
0

லெஸ்டர் சிட்டி - இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து கிளப். 8 ஆண்டுகளுக்கு முன் அந்த அணி அவ்வளவு பிரபலமானது இல்லை. பிரீமியர் லீகில் நிலைத்திருப்பதே அவர்களுக்கு ஒவ்வொரு...

மேலும்...
அடுத்த செய்தி
ஓயாத அலைகள் 1(1996 ) :  இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப் கப்பல்  விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது

ஓயாத அலைகள் 1(1996 ) : இலங்கைக் கடற்படையின் ரணவிரு பீரங்கிப் கப்பல் விடுதலைப் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025

புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா சிறப்பு மலர்

17/04/2025

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

16/04/2025
மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

11/03/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.