Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு விளையாட்டு

வெளிநாட்டு போட்டிகளிலும் பிரக்ஞானந்தாவுக்கு ரசம் ,சோறு.. மிக எளிமையான உணவுகளை வழங்கும் தாய் ..எதனால் ?

Stills by Stills
25/08/2023
in விளையாட்டு
0
வெளிநாட்டு போட்டிகளிலும் பிரக்ஞானந்தாவுக்கு ரசம் ,சோறு.. மிக எளிமையான உணவுகளை வழங்கும் தாய் ..எதனால் ?
0
SHARES
24
VIEWS
ShareTweetShareShareShareShare
செஸ் உலகில் இந்தியாவின் இளம் செஸ் வீரர் என்கிற பெருமையுடன் நிற்கும் பிரக்ஞானந்தாவின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் அவருடைய அம்மா நாகலட்சுமியின் கடின உழைப்பு, தியாகம்.

ன்று FIDE உலகக் கோப்பை செஸ் போட்டியில் நார்வே நாட்டின் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்றார். கடைசி வரை போராடி, டை பிரேக்கர் சுற்றில், இரண்டு முறையும் பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார். இருப்பினும், இளம் வயதில் உலகக் கோப்பை செஸ் போட்டி இறுதிவரை அடைந்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார் பிரக்ஞானந்தா. செஸ் சதுரங்கத்தில் காய்களை நகர்த்துவது பிரக்ஞானந்தாவாக இருந்தாலும் அவரது வாழ்க்கை சதுரங்கத்தில் ராணியாக வலம் வருபவர் அவருடைய அம்மா நாகலட்சுமி. எதிரிகளை காத்து எல்லா பக்கத்திலும் பாதுகாவலாக ராஜாவிற்கு துணையாக இருப்பது போல செஸ் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கியதில் இருந்து இளம் செஸ் மாஸ்டரான பிரக்ஞானந்தாவிற்கு துணையாக இருந்து கொண்டிருக்கிறார் நாகலட்சுமி. பிரபலங்களின் வைரல் புகைப்படங்கள் வரிசையில் சில நாட்களாக செஸ் ஸ்டாரான பிரக்ஞானந்தாவின் தாய் நாகலட்சுமியின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

பல நாள் கனவே, ஒரு நாள் நனவே, ஏக்கங்கள் தீர்த்தாயே என்கிற பாடல் வரிகளைப் போல FIDE உலகக் கோப்பை செஸ் அரையிறுதிப் போட்டியில் ஃபேபியானோ கர்னாவை வீழ்த்திய தன் மகனின் வெற்றியை எல்லோரும் கொண்டாடிக் கொண்டிருந்தனர். மெலிந்த தேகத்துடன் சாதாரண புடவையில் அமர்ந்திருந்த அந்த வெள்ளந்தியான முகம் அது வரை காத்திருந்த அமைதியை உடைத்து புன்னகைத்தது. நாகலட்சுமியின் இந்தப் புகைப்படத்தை பதிவிட்டு ரஷ்யாவின் செஸ் கிராண்ட் மாஸ்டரான காரி காஸ்பரொவ்,“ஒவ்வொரு நிகழ்விலும் துணையாக இருந்த பெருமைக்குரிய அம்மா, அது ஒரு சிறப்பான உறுதுணை,” என்று பாராட்டி இருந்தார்.


கண்ணும் கருத்துமான கவனிப்பு நிச்சயமாக நாகலட்சுமி பிரக்ஞானந்தாவின் அசைக்க முடியாத நம்பிக்கை தான். பிரக்கியின் பயிற்சியாளர்கள் சக போட்டியாளர்கள் என யாரைக் கேட்டாலும் அவரை சிறந்த செஸ் வீரராக வடிவமைத்ததில் அவருடைய அம்மாவின் பங்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை சொல்லிவிடுவார்கள். செஸ் வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வது, வீட்டில் எந்த தொந்தரவும் இல்லாமல் அவர் பயிற்சி செய்வதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கித் தருவது, பல ஆயிரம் மைல்கள் பயணித்தாலும் வீட்டுச் சாப்பாட்டை தன் கையாலேயே சமைத்துத் தருவது என்று பிரக்கிக்கு உதவுவது மற்றும் மகள் வைஷாலியை கிராண்ட் மாஸ்டர் பிரிவு வரை கொண்டு செல்ல உதவியது என்று நாகலட்சுமியின் உலகம் இவர்களைச் சுற்றியே வந்துள்ளது. குழந்தைகளே உலகம் பிரக்ஞானந்தா அமைதியாக செஸ் விளையாடிக்கொண்டிருக்கும் போது என்னுடைய இதயத்துடிப்பு அதிகரிக்கும் அந்த “லப் டப்” சத்தம் வெளியே யாருக்காவது கேட்டு விடுமோ என்றெல்லாம் கூட நான் பயந்திருக்கிறேன் என நாகலட்சுமி அண்மையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“உணர்ச்சிகளை வெளிக்காட்டக் கூடாது என்று அவனுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டிருந்தாலும் என் மகன் விளையாடும் போது என்னை அவன் கவனிப்பதை தவிர்த்து விடுவேன். ஏனெனில், அவன் என்ன நினைக்கிறான் என்பதை பார்வையிலேயே நான் அறிவேன். அவன் எந்த தருணத்தில் அதிக நம்பிக்கையுடன் விளையாடுகிறான், எந்த நேரத்தில் நம்பிக்கை குறைகிறது என்பது எனக்குத் தெரியும்,” என்றும் நாகலட்சுமி கூறியுள்ளார்.

செஸ் விளையாடத் தெரியாது ;

மகனை செஸ் பயிற்சிகள் மற்றும் போட்டிகளுக்கு இத்தனை ஆண்டுகள் அழைத்து சென்று வந்தாலும் தனக்கு செஸ் விளையாடத் தெரியாது என்பதை ஒப்புகொள்கிறார் நாகலட்சுமி. சென்னையைச் சேர்ந்த ப்ளூம் செஸ் அகாடமியின் பயிற்சியாளரும் பிரக்கியின் முதல் பயிற்சியாளருமான தியாகராஜன், போட்டிகளுக்கு பிரக்கியுடன் அவருடைய தாயும் வருவதை நினைவு கூர்ந்தார். போட்டிகள் நடைபெறும் இடத்தில் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிடுவார் நாகலட்சுமி, அது எந்த மட்டத்திலான ஆட்டமாக இருந்தாலும் பிரக்கிக்கு 7 வயது இருந்த போது நடைபெற்ற போட்டியில் ஒவ்வொரு ஆட்ட இடைவெளியின் போது பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்.

“பிரக்கிக்கு காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை பயிற்சிகள் நடக்கும், சில நேரங்களில் வீட்டுப்பாடமாக 4 மணி நேர பயிற்சியோ அல்லது 7 மணிக்குப் பிறகு வீட்டிலேயே வைத்தோ பயிற்சி அளிக்கும் போதும் கூட முகம் சுளிக்காமல் பிரக்கியின் அம்மாவும் அவருக்கு துணையாகவே இருப்பார்,” என்று கூறுகிறார் தியாகராஜன்.

அவர்களின் பயிற்சி முடிக்க 10 மணி ஆகிவிடும் அதற்குப் பின்னரே என்னுடைய வீட்டு வேலைகளை முடிப்பேன். அதனால் தான் செஸ் கற்றுக் கொள்ள எனக்கு நேரமில்லை, அவர்கள் நன்றாக விளையாட வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம் என்ற சொல்லும் நாகலட்சுமியின் அன்றாட பணி காலை 6 மணிக்குத் தொடங்கி நள்ளிரவில் முடிகிறது.

குழந்தைகளாக இருந்த போது பிரக்கியும், வைஷாலியும் அதிகம் தொலைக்காட்சி பார்க்கிறார்கள் என்றே செஸ் வகுப்பில் சேர்த்துவிட்டேன். இன்று வீட்டில் எப்போதாவது டிவி ஓடுவதே கூட கடினம் தான். வீட்டை நான் எப்போதும் அமைதியாக வைத்திருப்பேன், அதனால் அவர்களால் கவனம் மனதை ஒருநிலைப்படுத்த முடியும் என்று சொல்லும் நாகலட்சுமி எங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் கூட குழந்தைகளுக்கு தொந்தரவு இல்லாமல் வெளியே வைத்தே பேசி அனுப்பி வைத்துவிடுவேன் என்கிறார்.

ஏன் எளிமையான உணவு :

போட்டிகளுக்காக வெளிநாடு உட்பட எங்கு சென்றாலும் முதலில் நாகலட்சுமி இன்டக்ஷன் அடுப்பு, ரசம் வைப்பதற்கு இரண்டு பாத்திரங்களை உடன் எடுத்துச் சென்று விடுவார். இந்த முறை கூட முதலில் நாகலட்சுமி பேக் செய்தது அரிசி, அரிசி குக்கர் மற்றும் மசாலா பொருட்கள் என்று கூறுகிறார் பிரக்கியின் தந்தை ரமேஷ்பாபு.

“சவுகரியமான எளிமையான உணவைச் சாப்பிடுவது போட்டியில் பிரக்கியை சரியான மனநிலையில் வைத்திருக்கு உதவும்,” என்று கூறுகிறார் அவர்.

Tags: பிரக்ஞானந்தாஉலக கோப்பைஇறுதிப்போட்டிஇரண்டாவது இடம்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

கவிதனின் தினம் ஒரு திருக்குறள் (25.08.2023)

அடுத்த செய்தி

“அமுக்கரா” வின் அதி அற்புத குணம்: ஞாபக மறதியை போக்கும் – உடல் வலிமையை பெருக்கும்….

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

பிரதமர் நரேந்திரமோடி தந்த ரியாக்சன்…. நடந்தது என்ன?

பிரதமர் நரேந்திரமோடி தந்த ரியாக்சன்…. நடந்தது என்ன?
by Stills
20/11/2023
0

13 ஆவது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரில் 19 ஆம் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற    இறுதிப் போட்டியில்  இந்திய அணியை வெற்றி கொண்டு ஆறாவது தடவையாக ...

மேலும்...

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்து சம்பியன்!.

12ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட்டில் இங்கிலாந்து சம்பியன்!.
by Stills
05/10/2023
0

48 வருட உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் பவுண்டறிகளின் எண்ணிக்கை அடிப்படையில் சம்பியன் பிரகடனப்படுத்தப்பட்டது இதுவே முதல் தடவையாகும்.இங்கிலாந்திலும் வேல்ஸிலும் கூட்டாக நடத்தப்பட்ட 12ஆவது உலகக் கிண்ண...

மேலும்...

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சொல்லி அடித்த கில்லி.

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் சொல்லி அடித்த கில்லி.
by Stills
02/10/2023
0

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் கடந்த செப். 23-ஆம் தேதி தொடங்கியது. அக்டோபர் 8 வரை நடைபெறும். 61 பிரிவுகளில் நடைபெறும் 40...

மேலும்...

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றதா? : முன்னாள் அணித்தலைவர் அர்ஜுண கிளப்பும் சந்தேகங்கள்.

ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் சூதாட்டம் இடம்பெற்றதா? : முன்னாள் அணித்தலைவர் அர்ஜுண கிளப்பும் சந்தேகங்கள்.
by Stills
23/09/2023
0

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுண ரணதுங்க. இறுதிப்போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தமை தமக்கு சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் இது குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும் புரவெசி பலய என்ற...

மேலும்...

இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ப்பு!

இந்திய கால்பந்து அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ப்பு!
by Stills
17/09/2023
0

9 ஆண்டுகளுக்குப் பின் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் அணி பங்கேற்கிறது. சுனில் சேத்ரி தலைமையில் 17 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின்...

மேலும்...

பிரீமியர் லீகுக்குள் நுழையுமா? லெஸ்டர் சிட்டி.!

பிரீமியர் லீகுக்குள் நுழையுமா? லெஸ்டர் சிட்டி.!
by Stills
17/09/2023
0

லெஸ்டர் சிட்டி - இங்கிலாந்தைச் சேர்ந்த கால்பந்து கிளப். 8 ஆண்டுகளுக்கு முன் அந்த அணி அவ்வளவு பிரபலமானது இல்லை. பிரீமியர் லீகில் நிலைத்திருப்பதே அவர்களுக்கு ஒவ்வொரு...

மேலும்...
அடுத்த செய்தி
“அமுக்கரா” வின் அதி அற்புத குணம்: ஞாபக மறதியை போக்கும் – உடல் வலிமையை பெருக்கும்….

"அமுக்கரா" வின் அதி அற்புத குணம்: ஞாபக மறதியை போக்கும் - உடல் வலிமையை பெருக்கும்....

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

முள்ளியவளையில் பௌத்த தோரண வடிவில் பதாதைகள் அமைத்தது ஏன்?

13/06/2025
தியானத்தின் நன்மைகளும் பயன்களும்.!

தியானத்தின் நன்மைகளும் பயன்களும்.!

13/06/2025
தமிழர்கள் திருமண முறை

தமிழர்கள் திருமண முறை

12/06/2025
குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியாவின் உரை.!

குளோபல் சௌத் மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியாவின் உரை.!

12/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.