Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இலங்கை

தேர்தலை பிற்போடுவதற்காக ஆணைக்குழுக்களை அமைகிறது அரசாங்கம். எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.

Stills by Stills
05/11/2023
in இலங்கை
0
தேர்தலை  பிற்போடுவதற்காக ஆணைக்குழுக்களை அமைகிறது அரசாங்கம். எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.
0
SHARES
12
VIEWS
ShareTweetShareShareShareShare

பத்துபேர் கொண்ட புதிய ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க நியமித்துள்ளமை தொடர்பில் நடைமுறை தேவைகளுக்கேற்ப தேர்தல் சட்டங்களைத் திருத்துவதற்கும் அரசியல் கட்சிகளின் ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் தேவையான பரிந்துரைகளை வழங்குதற்குமாக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி வெவகே பிரியசாத் ஜெரார்ட் டெப் தலைமையில் ஆணைக்குழுக்களை அமைத்தது தேர்தல்களை பிற்போடுவதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாகும். என ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன கருத்து வெளியிட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தமக்குள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஆணைக்குழுக்களை நியமிக்க முடியும். ஆனால் அந்த ஆணைக்குழுக்கள் தேர்தலை நடத்துவதற்குரிய முனைப்புக்களை கொண்டதாக காணப்படவில்லை.

ஏற்கனவே, மாகாண சபைகளுக்கான தேர்தல் ஐந்து வருடங்களுக்கும் அதிகமான காலமாக நடத்தப்படாதுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கு அனைத்து ஏற்பாடுளும் நிறைவுபெற்றபோதும் அத்தேர்தலும் நடத்தப்படாதுள்ளது. குறிப்பாக நீதித்துறை தேர்தலை நடத்துமாறு அறிவித்தும் நிதி அமைச்சு அதற்கான நிதியை விடுக்காமையினால் தேர்தலை நடத்த முடிந்திருக்கவில்லை.

இவ்வாறான நிலையில், தற்போது தேர்தலை நடத்தாது காலத்தைக் கடத்துவதற்காகவே ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. தேர்தல் நடத்தாத நாட்டில் ஆணைக்குழுக்களை நியமிப்பதால் என்ன நன்மை ஏற்படப்போகின்றது என்றார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கூறுகையில், மாகாணங்களுக்கான தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணக்கப்பாடு எட்டப்பட்டது.

அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் பழைய முறையில் தேர்தல் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. அதற்காக என்னால் தனிநபர் பிரேரணையொன்றும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரையில் அந்த பிரேரணையை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் விருப்புக்களைத் தெரிவிக்கவில்லை.

ஆகவே, தேர்தல்களுக்கான முறைமைகளை சீர்செய்வதாக அரசாங்கம் கூறி ஆணைக்குழுக்களை அமைப்பதானது, தேர்தல் நடத்தாது காலத்தினை கடத்துவதற்காகவே ஆகும். உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலையும் அரசாங்கம் நடத்துவதற்கு தயாராக இல்லை.

எனவே, அரசாங்கம் தேர்தல்களுக்கான முறைமைகளை சீர்திருத்துவதற்கு முன்னதாக, மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்றக் கட்டமைப்புக்களுக்கான தேர்தலை முன்னெடுக்க  வேண்டியது அவசியமாகும் என்றார்

தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளரும், கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவிக்கையில்,  அரசாங்கத்தினைப்பொறுத்தவரையில் மக்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டுவதில் கரிசனைகள் இல்லை. தேர்தல்களில் தமக்குச் சாதகமான நிலைமைகளை உருவாக்கி அதில் வெற்றி பெறுவதே நோக்கமாக காணப்படுகின்றது.

அந்தப் பின்னணியில் தான் தற்போதைய சூழல் தமக்கு சதகமில்லை என்று கருதுகின்ற அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதற்கு அல்லது எதோவொரு வகையில் காலம் தாழ்த்துவதற்கு திட்டமிடுகின்றது. அந்தவகையில் தேர்தலை பிற்போடுவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டே தற்போது ஆணைக்குழுக்களை அறிவித்து வருகின்றது என்றார்.

Tags: ரணில் விக்கிரமசிங்கதேர்தல்பிற்போடுவதேநோக்கமாகும்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் மீண்டும் போராட்டம் ஆரம்பம் ..!

அடுத்த செய்தி

போதைப்பொருளுடன் சிறைக்காவலர் கைது.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !
by Stills
27/06/2025
0

கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி சப்ரகமுவ பல்கலைக்கழக  தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த  23 வயதுடைய மாணவன் ஒருவன் பகிடிவதை காரணமாக மன உளைச்சலுக் குள்ளாகி  உயிரை...

மேலும்...

இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.

இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.
by Stills
27/06/2025
0

நேற்று வியாழக்கிழமை (26) இரவு 10.47 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் "குஷ்" போதைப்பொருளுடன் 38 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரின்பயணப்பொதியில் இருந்து 2 கிலோ 130...

மேலும்...

கீதா கோபிநாத்தின் இலங்கைக்கான முன்னெடுப்பு இறுதித்திட்டம்.!

கீதா கோபிநாத்தின் இலங்கைக்கான முன்னெடுப்பு இறுதித்திட்டம்.!
by Stills
16/06/2025
0

இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணயநிதியத்தின் இறுதி திட்டமாக தற்போது முன்னெடுக்கப்படும் திட்டம் விளங்கவேண்டும் - கீதா கோபிநாத் இலங்கை சர்வதேச நாணயநிதியத்தின் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில்...

மேலும்...

கீதா கோபிநாத் -அநுர சந்திப்பு.!

கீதா கோபிநாத் -அநுர சந்திப்பு.!
by Stills
16/06/2025
0

இன்று திங்கட்கிழமை (16) கொழும்பில் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்றைய தினம்...

மேலும்...

வ்ராய் கெலீ பல்தசார் கொழும்பு மாநகர மேயராக தெரிவு.!

வ்ராய் கெலீ பல்தசார் கொழும்பு மாநகர மேயராக  தெரிவு.!
by Stills
16/06/2025
0

கொழும்பு மாநகரசபை மேயரை தெரிவுசெய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பை மேற்கொள்ள மேல் மாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் எஸ்.கே. ஜயசுந்தர முன்னிலையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது மேயராக தேசிய மக்கள்...

மேலும்...

கீதா கோபிநாத் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலாலை சந்தித்தார்.

கீதா கோபிநாத் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலாலை சந்தித்தார்.
by Stills
16/06/2025
0

இன்று திங்கட்கிழமை (16) இடம்பெறவுள்ள மாநாட்டில்  கலந்து கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மைப் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு வருகை...

மேலும்...
அடுத்த செய்தி
போதைப்பொருளுடன் சிறைக்காவலர் கைது.!

போதைப்பொருளுடன் சிறைக்காவலர் கைது.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1
இராமகிருஷ்ண பரமஹம்சர் வரலாறு.!

இராமகிருஷ்ண பரமஹம்சர் வரலாறு.!

02/07/2025
பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

பகிடிவதையால் உயிரை விட்ட பல்கலைக்கழக மாணவனால் 11மாணவர்கள் சிறையில் !

27/06/2025
இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.

இந்திய பிரஜை கட்டுநாயக்கவில் குஷ் போதைப்பொருளுடன் கைது.

27/06/2025
கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள  அறிவிப்பு!

கட்டுநாயக்க ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள அறிவிப்பு!

24/06/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.