என்ர குஞ்சு என்ர ராசா
என்ர கடவுள் வந்திட்டான்
என்ர அப்பு என்ர ஐயா
எப்படிப்பா இருக்கிறாய்
துரும்பா இளைச்சிட்டுது பிள்ளை
தாடி தலையெல்லாம் நரைச்சிட்டுது
தொடர்ந்து காகம் கத்தேக்கயே
தெரியுமடா நீ வருவாய் எண்டு
முந்நூறு நாள் சுமந்த தவமே
முந்தானை பிடிச்சு நடந்த மகவே
கண்ணூறு பட்டிட்டுது
என் கண்ணு சாந்தனுக்கு
துடைச்சு சுத்திப் போடுறன்
துப்புடா மூண்டு தரம்
கடவுள் நீ வருவாய் எண்டு
படலை ஒருநாளும் சாத்திறேல
அம்மா எண்டு ஆரும் கூப்பிட்டா
ஆர் சாந்தனோ எண்டு ஓடுவன்
சுகமா இருக்கிறியோ எண்டு
சின்னவனிட்ட அடிக்கடி கேப்பன்
உலையில போடுற அரிசி
உனக்கும் சேத்துத்தான்டா
ஊரில இருக்கிற கோயில்
ஒண்டுவிடாம நேத்திதான்டா
வல்லையில பிடிச்ச மீன்
வாங்கி வந்து வச்சிட்டு
கொல்லையில சின்னவன்
கோழி உரிக்கிறான்
சமைச்சுப் போட்டு பிள்ளைக்கு
நானே கையால ஊட்டிவிடுறன்
களைச்சுப் போய் வந்திருப்பாய்
அம்மா மடியில சரிஞ்சு படடா
எப்படியெல்லாம் கொஞ்சியிருப்பாள் அந்தத்தாய் 🥲💔
– இணுவை நித்தியதாஸ்