Thodarum News | Latest News
Advertisement
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • மருத்துவம்
  • ஆன்மீகம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரை
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
    • சிறுகதை
    • கவிதை
    • சிறுவர்
    • வணிகம்
No Result
View All Result
Thodarum News | Latest News
No Result
View All Result
முகப்பு இந்தியா

பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கடுமையான கட்டுப்பாடுகள் …

Stills by Stills
20/01/2025
in இந்தியா
0
பரந்தூர் மக்களை சந்திக்க விஜய்க்கு கடுமையான கட்டுப்பாடுகள் …
0
SHARES
158
VIEWS
ShareTweetShareShareShareShare

இன்று பரந்தூர் மக்களை சந்திக்கின்றார் விஜய்.  பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை இதுவரை 35 தலைவர்கள் சந்தித்திருக்கும் நிலையில் 36வதாக வந்திருக்கும் விஜய்க்கு மட்டும் கடுமையான கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது மத்திய மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. மேலும் புதிய சர்வதேச விமான நிலைய அமைக்க பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் சுமார் 5ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது.

குறிப்பாக பரந்தூர், ஏகனாபுரம் ,அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம் , நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம், உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் நீர்நிலை பகுதிகளையும் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏகனாபுரம் கிராமப் பகுதிகளில் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்கின்றனர். இந்த காரணத்தை முன்வைத்து புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள வசதி போல், மாற்று இடம் அளித்தாலும் எங்களுக்கு அமையாது என கூறி எங்கள் பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் நிலப் பகுதிகளையும் எடுப்பதை தவிர்த்து விட்டு , தமிழக அரசு வேறு பகுதிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என கூறுகின்றனர். ஏகனாபுரம் கிராமத்தைப் போல் அதனைச் சுற்றியுள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். ஒப்பாரிப் போராட்டம், உண்ணாவிரதப் போராட்டம் என 600 நாட்களுக்கும் மேலாக அவர்களது போராட்டம் பல வடிவங்களை சந்தித்து வருகிறது.

விவசாயத்தை அழிக்கக் கூடாது, தங்களுக்கு விமான நிலையம் வேண்டாம், விவசாயத்தை நம்பி தான் நாங்கள் பிழைத்து வருகிறோம், இத்தனை நாட்கள் போராடியும் முதலமைச்சர் தங்களை கண்டுகொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்த நிலையில் பரந்தூர் மக்களை சந்திக்கப் போகிறார் விஜய் என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்தே தமிழக அரசியல் களம் பரபரப்பாகி இருக்கிறது. வீட்டில் இருந்து அரசியல் செய்கிறார் என விமர்சிக்கப்பட்ட விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்திக்கிறார் என அறிவிக்கப்பட்டதோடு அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்தது. தொடர்ந்து காவல்துறை அனுமதி வேண்டி மனு அளிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தொடர்ந்து இன்று பரந்தூர் மக்களை சந்தித்துள்ளார் விஜய். அதே நேரத்தில் விஜய் வருகையை கேட்டு ஏராளமான மக்கள் திரள்வார்கள் என்பதால் திருமண மண்டபத்தில் சந்திக்கலாம் என காவல்துறை அனுமதி கொடுத்தது. இதை அடுத்து பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பேருந்து மூலம் திருமண மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் விஜயை பார்க்க சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பரந்தூர் நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

தொடர்ந்து ஆதார் கார்டு சோதனை செய்யப்பட்டு 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமே அப்பகுதிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் விஜய் கட்சியின் பொருளாளர் ஆன வெங்கட்ராமனை பரந்தூருக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. விஜய் கட்சி சார்பில் வழங்கப்பட்ட பட்டியலில் வெங்கட்ராமனின் பெயர் இல்லை எனக் கூறி போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் தாய் விஜய் வருகை குறித்த கடிதத்தை காஞ்சிபுரம் காவல்துறைக்குக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 12 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து ஆங்காங்கே போலீசார், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள், நிர்வாகிகளை தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பரந்தூர் மக்கள் இரண்டு ஆண்டுகளாக போராடி வரும் நிலையில் ஏற்கனவே பல தலைவர்கள் பொதுமக்களை சந்தித்து இருக்கின்றனர். அந்த வகையில், பாமக தலைவர் அன்புமணி, அமமுக டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி சீமான், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மே 17 திருமுருகன் காந்தி மற்றும் பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் 35 பேர் அப்பகுதி மக்களை சந்தித்து இருக்கிறார்கள்.

Tags: விஜய்விமான நிலையம்பரந்தூர் மக்கள்
ShareTweetShareShareSendSend
முன் செய்தி

முதல்முறையாக களத்திற்கு வரும் விஜய்..

அடுத்த செய்தி

விமான நிலையமுனையத்தில் துப்பாக்கிச் சூடு மூவர் காயம்.!

Stills

Stills

தொடர்புடைய செய்திகள்

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

by அரவிந்த்
09/05/2025
0

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்!. _ வ. கௌதமன்...

மேலும்...

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

by அரவிந்த்
16/04/2025
0

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் 'ஜாட்' திரைப்படத்தைத் தடை செய்க! இந்தி மொழியில் வெளியாகியுள்ள ஜாட் திரைப்படம், தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தாயக விடுதலைக்காகப் போராடியவிடுதலைப் போராளிகளை...

மேலும்...

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
by Stills
11/03/2025
0

 மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசிய கருத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு எம்.பி.க்களை நாகரீகமற்றவர்கள் என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர்,...

மேலும்...

மூன்று இடத்தில் பேச்சு நடத்தும் காளியம்மா

by அரவிந்த்
26/02/2025
0

நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக இருந்த காளியம்மாள் சீமான் உடனான கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். விலகிய அவர் எந்த கட்சியில்...

மேலும்...

கிளிநொச்சி நீதிமன்றத்தில் இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

கிளிநொச்சி நீதிமன்றத்தில் இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்
by Stills
10/02/2025
0

இரணைதீவிற்கு அண்மித்த  கடற்பரப்பில் அத்துமீறிய மீன் பிடியில் ஈடுபட்ட  இரண்டு இந்திய இழுவைப்படகுகளையும் அதிலிருந்த 14 இந்திய   மீனவர்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09)  அதிகாலை இலங்கை கடற்படையினர்...

மேலும்...

இந்தியர்களின் நலனுக்காக என்ன செய்யப் போகிறது மோடி அரசு?

இந்தியர்களின் நலனுக்காக என்ன செய்யப் போகிறது மோடி அரசு?
by Stills
07/02/2025
0

சட்டவிரோதமாக குடியேறிய 104இந்தியர்கள் இந்தியாவுக்கு அமெரிக்காவால் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். இதில் 19 பெண்கள், 13 சிறார் மற்றும் 4 வயது குழந்தையும் அடங்கும். ராணுவ விமானத்தில்...

மேலும்...
அடுத்த செய்தி
விமான நிலையமுனையத்தில் துப்பாக்கிச் சூடு மூவர் காயம்.!

விமான நிலையமுனையத்தில் துப்பாக்கிச் சூடு மூவர் காயம்.!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விருப்பமானவை
  • கருத்துகள்
  • அண்மை
புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

29/06/2024
நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

12/02/2025
தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

29/06/2024
இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

29/02/2024
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெற்றிடங்கள்! அரச அதிகாரிகளுக்கு வழங்கப்படும் வாய்ப்பு

11
“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும்  பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

“13 ஆண்டுகளாக அப்பாவைத்தேடும் பிள்ளைகள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் அவலம்”

1
சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

சந்திரயான்-3 நிலவில் பதிக்கப்போகும் ‘இந்திய சின்னம்’ – மயில்சாமி அண்ணாதுரை பிரத்யேக தகவல்

1
மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

மாவீரன் விமர்சனம்: சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதைக்கு செட் ஆனாரா?

1

மே-18, தமிழ் இன அழிப்பு நாளை மனதில் வைத்து நடிகர் விஷால் கலந்து கொள்ளும் நட்சத்திர இசைத் திருவிழாவை தள்ளி வைக்க வேண்டும்

09/05/2025

புதுவை இரத்தினதுரை அவர்களின் பவளவிழா சிறப்பு மலர்

17/04/2025

ஈழ விடுதலைப்போராட்டத்தை இழிவுப்படுத்தும் ‘ஜாட்’ திரைப்படத்தைத் தடை செய்க!

16/04/2025
மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதானுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

11/03/2025
தொடரும் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை

  • புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    புலிகளின் புலனாய்வு ஆசான் மாதவன் மாஸ்டர்: நினைவுப்பகிர்வு …

    34 shares
    Share 0 Tweet 0
  • நினைவழியா நாட்கள்- பெண்களின் தனிப்பெரும் ஆளுமை : லெப்.கேணல் அகிலா …!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழீழ விடுதலைக்காக உழைத்த புலனாய்வுப்  போர்முகம் மேலாளர் விநாயகம் அவர்களுக்கு வீரவணக்கம் ..

    0 shares
    Share 0 Tweet 0
  • இலங்கை புறப்படவிருந்த நிலையில் இன்று காலை சாந்தன் காலமானாா்…

    0 shares
    Share 0 Tweet 0
  •  மரண அறிவித்தல்- ரவீந்திரன் ஜெயபாரதி

    0 shares
    Share 0 Tweet 0
Thodarum News | Latest News

© 2023 Thodarum News - Latest Public news.

Navigate Site

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Follow Us

  • முகப்பு
  • ஈழம்
    • 2009
    • மாவீரர்
  • புலம்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகம்
  • மருத்துவம்
  • ஏனையவை
  • கவிதை
  • சிறுகதை
  • வணிகம்
  • சிறுவர்

© 2023 Thodarum News - Latest Public news.